districts

அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்கு அது வாழ்க்கை - -ஆதவன் தீட்சண்யா

ஈரோடு, பிப். 20- அரசனுக்கு ஒரு சொல், அடி மைக்கு அது வாழ்க்கை என்பது  போல ஆர்எஸ்எஸ் இன்  தந்தையர்  நாடு என்பதற்கு இவ்வளவு விளக் கம் சொல்ல வேண்டியிருக்கிறது என்றார் ஆதவன் தீட்சண்யா. ஈரோட்டில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சிந்துவெளி பண்பாடு நூற்றாண்டு கருத்தரங் கம் புதனன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் மு.சங்கரன்  தலைமையில் கருத்தரங்கில் மாநில பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா பேசும்போது,  இடது தாக்கம் இல்லாமல் இந் திய தன்மை உள்ளதாக இந்திய  வரலாற்றை எழுதினால் தேசிய  கல்வி கொள்கையின் அடிப்படை யிலான பாடப்புத்தகத்தில் சேர்க் கப்போகிறோம். அதில் இந்திய  நாடு வேதத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு, இந்தியாவின் பூர்வ குடிகள் ஆரியர்கள். ஆரியர்களின் வேதங்களிலிருந்து தான் இந்திய நாகரிகம் பிறந்தது. சமஸ்கிருதம் தான் எல்லாவற்றிற்கும் தாய் மொழி என்று ஆர்எஸ்எஸ்-யின்  மோகன்பகவத் சொல்லியிருப் பதை உள்ளடக்கி ஒரு வரலாறு எழு தப்பட விருக்கிறது. அதற்காக அமைக்கப்பட்ட குழுவில், மக்கள்  தொகையில் சரிபாதியாக இருக் கக்கூடிய பெண்களிலிருந்து ஒரு வர் கூட இல்லை. சிறுபான்மையி னர் இல்லை, தலித் இல்லை, பழங் குடியினர் இல்லை, தென்னிந்தியா விலிருந்து ஒருவரும் இல்லை. இந்த சர்மாக்கள், சாஸ்திரிகளை வைத்துக் கொண்டு 140 கோடி மக் கள் தொகை உள்ள ஒரு நாட்டின்  12 ஆயிரம் வருட வரலாற்றை அவர் கள் எவ்வாறு எழுதுவார்கள்? அப் படி ஒரு வரலாற்றை எழுதி அந்த வர லாற்றை தேசிய கல்விக் கொள்கை  அடிப்படையிலான புதிய பாடத் திட்டத்தில் கொண்டு வரப்போ வதாக கலாச்சாரத்துறை அமைச் சரும், கல்வி அமைச்சரும் அறி வித்து விட்டார்கள்.  அரசனுக்கு சொல், அடிமைக்கு  அது வாழ்க்கை என ஒரு பழமொழி  உண்டு. நாம் இப்போது அந்த இடத் திற்கு வந்துள்ளோம். நாம் எல்லா வற்றையும் விளக்கிச் சொல்ல வேண்டிருக்கிறது. ஆக யாருடைய  தந்தையர் நாடு இந்தியாவோ, யாரு டைய புண்ணிய பூமி இந்தியாவோ என்ற நிபந்தனைகளை விதித்தால், இஸ்லாமியர்களின் பித்ரு பூமி இந்தியா, புண்ணிய பூமி மெக்கா. கிறிஸ்தவர்களுடைய பித்ரு பூமி  இது. ஆனால் புண்ணிய பூமி இது கிடையாது. இப்படி சொல்லும்  போது நீயும் தான் வெளியிலிருந்து  வந்தாய் எனக் கேட்கக் கூடாது என் பதற்காகத் தான் சிந்து சமவெளி யில் கை வைக்கின்றனர். நாங்கள் பூர்வகுடிகள், சமஸ்கிருதம், வேதம் இங்கிருந்துதான் உருவா னது என்று இந்திய தன்மை கொண் டவர்களாக ஆரியர்களை மாற்றிக்  காட்ட வேண்டுமென்ற மோசடியிலி ருந்துதான் சிந்துசமவெளி நாக ரிகத்தை ஆரிய நாகரிகமாக, சமஸ் கிருத நாகரிகமாக, வேத நாகரிக மாக காட்டுவதற்கான ஒரு வர லாற்று மோசடி நடந்து கொண்டிருக் கிறது. நல்வாய்ப்பாக சிந்து நாகரி கம் கண்டுபிடிக்கப்பட்டு .வெளி உலகிற்கு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு 2024 ஆக அமைந்ததை யொட்டி தமுஎகச மாநிலம் முழு வதும் 100 இடங்களில் கருத்தரங் கங்களை நடத்துவதென முடிவு செய்து நடத்திக் கொண்டுள்ளோம். இன்னும் நுட்பமாக நாம் பேச  வேண்டியிருக்கிறது. இன்னும் விரி வாக மாற்றுக் கருத்து உள்ளவர் களோடு பேச வேண்டும். இணைய தளத்தில் மாற்றி அமைத்துள்ளனர். பாடப்புத்தகத்தில் மாற்றிவிட்டனர்.  கொஞ்ச நஞ்சமுள்ள மூளையை யும் மாற்றி அமைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டுள் ளனர்.  ஆகவே ஒத்த கருத்துள்ளவர் கள் கூட வேண்டும், பேச வேண்டும். ஆனால் கலந்து கொண்டதே மிகப்  பெரியது என்ற பெருமிதமும், கித் தாப்பும் தேவையில்லை. மக்களி டம் சென்று பேச வேண்டும் என் றார்.