districts

img

அறிவியல் ஆர்வத்தை தூண்டிய குழந்தைகளின் அற்புத கண்காட்சி

திருப்பூர், மார்ச் 17- திருப்பூர் அமுதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், குழந்தைகள் நடத்திய அற்புதமான அறிவியல் கண்காட்சி பார்வையாளர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரம் 5 ஆவது வீதியில் உள்ள அமுதா நர்சரி மற்றும் பிரை மரி பள்ளியில், “அறிவியல் 360°” என்ற தலைப்பில் மாறுபட்ட அறிவி யல் கண்காட்சி ஞாயிறன்று நடை பெற்றது. இப்பள்ளியில் தொடர்ந்து  16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியை இந்தாண்டு திருப்பூர் இண்டஸ் இண்ட் வங்கியின் மக்கள் நல்லு றவு பிரிவின் மேலாளர் மகேஷ் குமார் திறந்து வைத்தார். மாணவர்களின் அறிவியல் படைப்புகளையும், அவர்கள் அதை விளக்கிய விதத் தையும் பார்வையாளர்கள், பொது மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு வெகுவாக பாராட்டினர். ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளி யில் நடைபெறும் அறிவியல் கண் காட்சியில் கருப்பொருளின் அடிப் படையில் மாணவர்களை பங் கேற்க வைப்பது வழக்கம். இந்த  முறை “அறிவியல் அமைதிக்கே!  அறிவியல் நல்லுருவாக்கத்திற்கே!” என்ற கருப்பொருளின் அடிப்படை யில் மாணவர்கள் 15 ஆய்வுகளை சமர்ப்பித்தனர். குறிப்பாக, இன்று  உலக அளவில் பல நாடுகளுக்கு  இடையே போர் சூழல் அதிகமாகி  வரும் நிலையில், அறிவியல் கண்டு பிடிப்பின் ஒரு அங்கமான அணு குண்டை மக்களை அழிக்கும் போரில் பயன்படுத்தக்கூடாது. அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை மின்சாரம் சார்ந்த பயன்பாடுகளுக்கு பயன் படுத்துவது, அணுசக்தி ஆக்கத் திற்கே என்பதை வலியுறுத்தி, இரண் டாம் உலகப் போரில் அணு குண்டி னால் ஏற்பட்ட விளைவின் அடையா ளச் சின்னமான ஜப்பான் நாட்டின்  சடகோ சசாக்கி என்ற குழந்தையை  நினைவு கூர்ந்தும், அறிவியலின் கண்டுபிடிப்புகள் யாவும் அமைதி யையே முன்னிறுத்த வேண்டும்  என்று மாணவர்கள் முன்னுதாரண மான பார்வையை வெளிப்படுத்தி னர். மேலும், அறிவியல் கண்டுபிடிப் பின் ஒரு பகுதியான நவீன ஸ்மார்ட் போனினால் குழந்தைகளுக்கு ஏற் படும் பிரச்சனைகள், அதிலிருந்து வெளிப்படுவதற்கான தீர்வுகள். தற்போதெல்லாம் அதிகம் பரவி வரும் பெருந்தொற்று நோய்களை  அறிவியல் ரீதியாக புரிந்துகொள் வது சார்ந்தும், ஆதி உயிர் முதல்  ஆதி மனிதன் வரை இயற்கை அறிவை எவ்வாறு உணர்ந்து, கற்று தன் வாழ்வில் பயன்படுத்து கின்றனர் என்ற சிறிய கண்டுபிடிப்பு களின் பின்னால் உள்ள வரலாறு உள்ளிட்ட ஏராளமான அறிவியல் ஆய்வுகளை செய்து முற்றிலும் மாறுபட்ட அறிவியல் 360 டிகிரி கண் காட்சியை 110 மாணவர்கள் பங் கேற்று சிறப்புடன் நடத்திக் காட்டி  உள்ளனர். அறிவியல் கண்காட் சியை ஆர்வமுடன் காண பெற் றோர்களும், அப்பகுதி பொது மக்களும் திரளாக பங்கேற்றனர். அவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்பாட் டில் அனைவரும் தங்கள் படங் களை ஆர்வமாக எடுத்துக் கொண் டனர். அதிலும், வித்தியாசமாக அமைதிக்கான சிறகுகள் வீசி பறப்போம் என்ற நல்நோக்க வாச கங்கள் இடம் பெற்றிருந்தது கவ னிக்கத்தக்கது. இவ்வாறான மாறுபட்ட அறிவி யல் கண்காட்சியை பள்ளியின் முதல் வர் வி.ராமமூர்த்தி மற்றும் பள்ளி நிர்வாகி ராணி ராமமூர்த்தி, 20  ஆசி ரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாக மிகச் சிறப் பாக இந்த அறிவியல் திருவிழா நடைபெற்றது.