districts

img

பெண்களுக்கான இடஒதுக்கீடு முதல் விலைவாசி உயர்வு வரை

கோவை, நவ. 26- ஆட்சி அதிகாரத்தில் பெண்க ளுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும், எரிவாயு, எரிபொ ருட்கள் உள்ளிட்ட விலைவாசி உயர் வால் அவதிப்படும் நிலை குறித்து தினந்தோரும் பிரதமருக்கு கடி தம் வாயிலாக கடிதம் எழுதி கவ னத்தை ஈர்த்துள்ளார் கோவை பெண். கோவை பீளமேடு, காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், தமிழ்நாடு அரசு  மின்வாரியத்தில் பணியாற்று கிறார். சிஐடியு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் நிர்வா கியாக உள்ளார்.  இவரது இணையர்  கிருத்திகா பழனிச்சாமி. பட்டதாரி யான இவர், கல்லூரி காலத்தில் சமூக நலத்திட்டங்களில் ஆர்வ மாக ஈடுபட்டவர். திருமணத்திற்கு  பிறகு, முடங்கி விடாமல் தொடர்ந்து  மக்கள் பிரச்சனைகளுக்காக ஏதோ  ஒரு வடிவத்தில் குரல் எழுப்பி வரு கிறது.  இதன்தொடர்ச்சியாக கடந்த 2023 மார்ச் 8 ஆம் தேதி, மகளிர் தினத்தன்று, பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கடிதத்தை முதன்முறையாக பிரதமர் மோடிக்கு எழுதினார். பின்னர், நாள்தோறும், அன்றன்று முன் னுக்கு வரும் பிரச்சனைகளை மையப்படுத்தி கடிதம் எழுதி வரு கிறார். மான மார்ச் 8 அன்று தொடங்கி நவம்பர் 26 வரை, 264  கடிதங்களை எழுதியுள்ளார்.  இக்கடிதங்களில், சமையல் எரி வாயு சிலிண்டரின் விலை குறைக்க  வேண்டும், எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும்,  ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என் எல்ஐ பாதுகாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5ஜி  அலைக்கற்றை சேவைக்கான அனுமதி வழங்க வேண்டும். இஸ் ரேல் நாட்டின் நடவடிக்கையை கண் ்டிக்க வேண்டும், பாலஸ்தீ னத்திற்கு ஆதரவாக இந்தியா நிற்க  வேண்டும் என தொடர்ந்து பிரத மர் அலுவலகத்தின் கவனத்தை  ஈர்த்த கடிதங்களை எழுதியுள்ளார்.  இதுகுறித்து கிருத்திகா பழ னிச்சாமி கூறுகையில், சமூகத் தின் மீது உள்ள அக்கறையின் கார ணமாக பிரதமருக்கு கடிதங்கள்  எழுதி வருகிறேன். நாட்டின் பிரதம ருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது, என்பதாலேயே அவருக்கு கடி தம் எழுதுகிறேன். அனைத்து கடி தங்களுக்கான நகல்கள் எடுத்து  சேமித்து வருகிறேன். பெரும்பா லான கோரிக்கைகள் நிறைவேற வில்லை என்பது வருத்தம்தான். ஆனாலும், தொடர்ந்து கடிதம் எழு துவேன். என்னுடைய கோரிக்கை கள் அனைத்தும் அரசியல் கட்சி கள் முன்வைத்து நடத்தும்  இயக்கங்களில் எடுக்கப்பட்டது தான். நேரிடையாக இந்த போராட் டங்களில் பங்கேற்க முடியாவிட் டாலும், இதுபோன்ற பங்களிப்பின் மூலம் நானும் மக்கள் பிரச்சனை களின் என்னுடைய தலையீட்டை செலுத்துகிறேன் என்கிற திருப்தி  உள்ளது. என்னுடைய முயற்சிக்கு  எனது கணவர் மற்றும் குடும்பத்தி னர் முழு ஒத்துழைப்பும், உதவியும்  செய்து வருகின்றனர் என்றார்.