நாமக்கல், செப்.1- பள்ளிபாளையத்தில் கந்துவட் டிக் கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான நபரை காவல் துறை யினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள ஓடப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் அப்பகுதியில் உள்ள ஆறு மகளிர் குழுக்களுக்கு தலை வராக இருந்து வந்தார். மேலும், மகளிர் குழுவில் உள்ள பெண்க ளுக்கு சுய உதவிக்கடன்கள், மைக்ரோ பைனான்ஸ் மற்றும் வெளிப்பகுதிகளில் கடன் பெற்று தந்துள்ளார். இதில் கடன் வாங்கிய சில பெண்கள் பொருளாதார சூழல் காரணமாக கடன்களை கட்ட முடி யாமல் குடும்பத்துடன் வெளியி டங்களுக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக கடன் பெற்று கொடுத்த சுஜாதா தான், கடனை திருப்பி செலுத்த வேண்டும் என தனியார் நிதி நிறுவனங்கள் வற்பு றுத்தி வந்துள்ளனர். அந்த கடனை செலுத்துவதற்காக, தனது வீட்டின் அருகே உள்ள கவிதா என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள் ளார். வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கட்டியும் கூடுதல் வட்டி கேட்டு கவிதா தொந்தரவு செய்ததாக தெரி கிறது. இவற்றை திருப்பி செலுத்த முடியாத நிலையில் சுஜாதாவை கவிதா தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளார். இதனால் மனமு டைந்த சுஜாதா, தான் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததாலும், மற்றவர்கள் பெற்ற கடனை தன்னை கட்ட வலியுறுத்தி, துன்புறுத்துவதா கவும், மனவேதனையுடன் கடந்த ஆக.21 ஆம் தேதியன்று வீடியோ பதிவிட்டு தனது வீட்டில் தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுஜாதாவின் உறவினர்கள், அவ ரின் தற்கொலைக்கு காரணமான கவிதாவை கைது செய்ய வேண் டும். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலை யம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்நிலையில், போலீசாரின் தீவிர தேடுதலில் திருப்பூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கவிதாவை சனியன்று இரவு பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை குமாரபாளை யம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சேலம் மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர்.
கந்துவட்டி கொடுமைகளை தடுத்து நிறுத்திடுக
தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து அத்துமீறி சட்டத்திற்கு புறம்பாக கடன் வசூல் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளங் காட்டுவலசு பகுதி மேட்டுகடையில் கே.வினோத் குமார் என்பவரை தான் வாங்கிய கடனுக்காக தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து தற்கொலைக்கு தூண்டிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவன அதிகாரி கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வெப்படை நால் ரோட் டில் சனியன்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள், மாவட்டக்குழு உறுப் பினர் சி.துரைசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ். சந்திரமதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.தனேந்திரன், ஜி.சேகர், மு.மணிகண்டன், வி.சண் முகம், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.ராஜ தேவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.