districts

img

வாகனத்தை துரத்திய காட்டுயானை

உதகை, ஆக.17- கூடலூர் - மைசூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாக னத்தை மிகுந்த ஆக்ரோசத்துடன் துரத்திய ஒற்றை காட்டு யானை யால் வாகன ஓட்டிகள் அச்சம டைந்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது கூடலூர் -  மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை. வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள இச்சாலையோரங்களில் யானை, புலி,  சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வரு வதும் சாலையை கடந்து செல்வதும் வழக்கமான ஒன்றா கும். இந்நிலையில், கூடலூரில் இருந்து மைசூர் செல்லும்  தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தெப்பக்காடு பகுதி யில் சாலையோரம் ஒற்றை காட்டு யானை மேய்ச்சலில் ஈடு பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற வாகனத்தை (ஜீப்) திடீரென மிகுந்த ஆக்ரோசத்துடன் வேகமாக துரத்திய தால் வாகனத்தில் பயணம் செய்த நபர்கள் மிகுந்த அச்ச மடைந்தனர். காட்டு யானை துரத்துவதை அறிந்த வாகன ஓட்டு நர், உடனடியாக வாகனத்தை சாதுரியமாக நீண்ட தூரம்  பின்னோக்கி இயக்கிதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. காட்டு யானையிடமிருந்து தப்பிக்கும் காட்சியை வாகனத்தில் சென்ற நபர்கள் வீடியோ பதிவு செய்துள்ள னர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைர லாகி வருகிறது.