districts

img

கொளுத்தும் வெயிலால் களையிழந்த வாரச்சந்தை

நாமக்கல், ஏப்.24- கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிற நிலையில், வாரச்சந்தையில் கடை  போட வியாபாரிகளும், பொருட் களை வாங்க பொதுமக்களும் தயக் கம் காட்டுவதால் வாரச்சந்தை களையிழந்து காணப்படுகிறது.  தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகவே வெயிலின் தாக்கம்  அதிகமாக உள்ளது. இந்நிலையில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 107 முதல் 109 டிகிரி வரையிலான வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது . மேலும் நாமக்கல், ஈரோடு  மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளி யிடப்பட்ட செய்தி குறிப்பில், மதிய  நேரத்தில் வெயிலின் தாக்கம் அதி கமாக இருப்பதால், மதிய நேரங்க ளில் வெளியில் தேவையின்றி சுற்று வதை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமார பாளையத்தை இணைக்கும் சாலை யான புதன் சந்தைப்பேட்டை என்ற  பகுதியில் ,வாரம் தோறும் புத னன்று வாரச்சந்தை கூடுவது வழக் கமான ஒன்றாகும். காலை கூடும் இந்த சந்தையா னது இரவு 10 மணி வரை நடை பெறும். குமாரபாளையம் பள்ளிபா ளையம் வெப்படை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வாரச் சந்தைக்கு வந்து, வீட்டிற்கு தேவை யான பொருட்களை வாங்கி செல் வது  வழக்கம். இந்நிலையில் வெயில் தாக்கம் அதிகரிப்பு கார ணமாக புதனன்று கூடிய வாராந் திர சந்தையில் குறைவான அளவி லான கடைகளை அமைக்கப்பட்டு இருந்தது . இது குறித்து பழக்கடை வைத்தி ருக்கும் பெரியசாமி என்பவர் கூறும்  பொழுது ஆண்டுக்கு ஆண்டு வெயி லின் தாக்கம் அதிகரித்து வருகி றது. பல்வேறு பகுதிகளுக்கு வியா பாரத்திற்காக நாங்கள் சென்று இருக்கிறோம். ஆனால் இதுபோல  வெயில் தாக்கத்தை கண்ட தில்லை. எப்போதும் காலை 10  மணிக்கு வியாபாரம் செய்வதற் காக ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை நாட்களில் நான் இங்கு வருகை தருவது வழக்கம். ஆனால்  வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாலை 4 மணிக்கு பிறகு நான் பழக்கடை அமைப்ப தற்கு இங்கு வருகை தந்தேன்.  தொலைதூரங்களில் இருந்து வியாபாரிகள் தங்கள் காய்கறி களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள் . வெயில் தாக்கத்தின் காரண மாக பெரும்பாலானோர் காலை வருவதை தவிர்த்து மாலை 4 மணிக்கு மேல்தான் வந்தார்கள். இதன் காரணமாக வழக்கமான பரபரப்பான விற்பனை ஏதும் இல்லை. அடுத்த மாதத்தில் அக்னி  நட்சத்திர நாட்களில் வெயிலில் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும். அப்போது இதைவிட வும் அதிக வெயில் இருக்குமோ என இப்பவே அச்சம் ஏற்படுகிறது என்றார். முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, தமிழ்நாட்டில், கடந்த சில நாட் களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில், நாமக்கல் உள்ளிட்ட வட உள்  மாவட்டங்களில் 24 ஆம் தேதியன்று (நேற்று) ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. எனவே, பொது மக்கள் போதுமான அளவு தண்ணீர்  குடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல் வதை தவிர்க்க வேண்டும். குறிப் பாக மதியம் 12 மணி முதல் 3 மணி  வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்து வரை அணுகவேண்டும் என தெரி வித்துள்ளார்.