நாமக்கல், அக்.27- பால் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி நவ.1ஆம் முதல் 7ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்துவது என பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் திருச் செங்கோடு காவேரி நினைவகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை ஏற்றார். மாநில பொதுச் செயலாளர் பி.பெருமாள், மாநிலப் பொருளாளர் ஏ.எம்.முனுசாமி மற் றும் மாநில நிர்வாகிகள் சிவாஜி, செல் லதுரை, மணி உள்ளிட்டோர் பங்கேற் றனர். இதில், பசும்பால் லிட்டருக்கு 35 லிருந்து 10 ரூபாய் உயர்த்தி ரூ.45 வழங்க வேண்டும். எருமை பால் லிட் டருக்கு ரூ.44 லிருந்து, ரூ.10 உயர்த்தி ரூ.54 வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களை 50 சதவிகித மானியம் வழங்கிட வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு பணி பாதுகாப்புடன் சம்பள உயர்வு வழங்கிட வேண்டும். பாலுக்கான ஊக்க தொகையை மற்ற மாநிலங்களில் வழங்குவது போல வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கடந்த அக்.17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் அலுவல கங்கள் முன்பாகவும், மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாகவும் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன் தொடர்ச்சியாக, நவ. 1ஆம் முதல் 7 ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடு களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இந்த கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி அக்.31ஆம் தேதி யன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர், பால்வளத்துறை ஆணை யாளரை ஆகியோரை சந்தித்து மனு வழங்குவது என முடிவு செய்யப்பட் டது.