districts

img

த்ரோபால் போட்டியில் வெற்றி: வரவேற்பு

திருப்பூர், ஜன.1- திருப்பூரில் கே.பி.ஆர்., மில் பெண் தொழிலாளர்கள் தேசிய அளவிலான த்ரோபால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. 46ஆவது சீனியர் நேஷனல் த்ரோபால் சாம்பியன்ஷிப்  ஜார்க்கண்டில் நடைபெற்றது. இதில் ஜூனியர் மற்றும் சப்  ஜூனியர் பிரிவுகளில் திருப்பூர் கே.பி.ஆர்., மில்லில் பணி  புரியும் பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர். சீனியர் த்ரோ பால் போட்டியில் கே.பி.ஆர்., மில் பெண் தொழிலாளர்கள் விளையாடிய தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து வெற்றிக்கோப்பையுடன் திருப்பூர் வந்த பெண் தொழிலாளர்கள் அணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து வெற்றி பெற்ற த்ரோ பால் அணி கேப்டன் வைஷ்ணவி கூறுகையில், ‘ ஆறு ஆண்டுகளாக கே.பி.ஆர்., மில்லில் பணியாற்றுவதாகவும், இங்கு பெண் தொழிலா ளர்களுக்கு கோ-கோ, கபடி, த்ரோ பால் பயிற்சிகளை அளித்து விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கிறார்கள். எங்களை ஜார்க் கண்ட் அனுப்பியதன் மூலம் தேசிய அளவில் 24 அணியினர் பங் கேற்ற போட்டியில் சாம்பியன் பரிசை வென்று இருக்கிறோம். தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகி றோம். எங்களது நிறுவனம் தினமும் காலை, மாலை நேரத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பு அளித்ததன் மூலம் பயிற்சி பெற்று இந்த வெற்றியை அடைந்திருக்கிறோம், என்றார்.