கோவை நகரில் 33 ரவுடிகள் கைது
கோவை, பிப்.17- கோவை மாநகரில் 33 ரவுடிகளை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணை யாளர் வி.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாநகரில் 2 கொலைகளை தொடர்ந்து ரவுடிகள் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை வடக்கு, தெற்கு நகர் பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கை, விடுதி தணிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதில், தெற்கு நகர் பகுதியில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 வீடுகளில் சோதனை நடத்தி 19 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து கத்தி, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. வடக்கு நகர் பகுதியில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்றும், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. '
பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து'
திருப்பூர், பிப்.17- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத் தில் தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாடகை வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பள்ளி குழந்தைகள் காயமின்றி தப்பினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகாயனூரில் ராஜா நேஷனல் மெட்ரிக் மேல்நிலை தனியார் பள்ளி இயங்கி வருகிறது. வெள்ளியன்று பள்ளி முடிந்ததும் பொங்கலூர் மாதப்பூர் சாலை வழியாக தனியார் வாடகை வேனில் 20 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களோடு நாகராஜ் என்ற ஓட்டுநர் வாகனத்தை இயக்கியுள்ளார். மாதப்பூர் கிராமத்திற்கு உள்ளே வாகனம் வந்தபோது, மேடான பகுதி யில் வேனை பின்பக்கமாக எடுத்துள்ளார். அப்போது குழந் தைகளோடு வாகனம் பள்ளமான பகுதியில் எதிர்பாராத வித மாக கவிழ்ந்தது. விபத்துக்குள்ளானது. இதில், வாக னத்தில் சிக்கியிருந்த குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். விபத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தை பொதுமக்கள் மீட்டனர். வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து குழந்தைகளும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
தத்து கொடுத்து 42 வருடங்களுக்கு பிறகு பெற்றோரை தேடும் டென்மார்க் பெண்
சேலம், பிப்.17- 3 வயதில் தத்து கொடுக்கப்பட்டு, தற்போது 42 வருடங் களுக்கு பிறகு தனது பெற்றோரை டென்மார்க்கைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் தேடி வருகின்றனர். டென்மார்க், பிலாங்சர், டார்பன் பகுதியைச் சேர்ந்தவர் பேட்டரிக் (45). இவரது மனைவி நிஷா (44). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நிஷா கடந்த 1980 ஆம் ஆண்டு 3 வயது குழந்தையாக இருந்தபோது சென்னை, பல்லாவரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் குழந்தைகள் காப்பகத்தில் விடப் பட்டுள்ளார். இதன்பின் அங்கிருந்து டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுலா பயணி ராஜ்முஷன், என்பவர் தத்து எடுத்து சென்று டென்மார்க்கில் வளர்த்துள்ளார். இதையடுத்து அந் நாட்டைச் சேர்ந்த பேட்டரிக் என்பவருடன் திருமணம் நடை பெற்றது. இந்நிலையில், தனது பெற்றோர் மற்றும் உறவி னர்களை காண வேண்டும் என்று அவருக்கு ஆசை ஏற் பட்டுள்ளது. இதை கணவரிடம் தெரிவித்துள்ளார். அவரும் சரி என்று கூற நிஷாவும், அவரது கணவர் பேட்டரிக்கும், டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்துள்ளனர். பூனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவி யுடன் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தனது பெற்றோரை நிஷா தேடி வருகிறார். அவர் விழுப்புரம், தஞ்சை, கும்ப கோணம் ஆகிய பகுதிகளில் தேடி அலைந்து விட்டு, தற்போது சேலம் மாவட்டம், கருப்பூருக்கு வந்துள்ளார். 42 ஆண்டு களுக்கு பிறகு தற்போது கருப்பூர் பகுதியில் தனது பெற் றோரை, உறவினரை நிஷா, தனது கணவருடன் தேடி வருகிறார். இதுகுறித்து நிஷா கூறுகையில், 42 ஆண்டுக்கு முன்பு எனது பெயர் மீனாட்சி என்ற ஞாபகம் உள்ளது. பூர்வீகம் கபூர் அல்லது கருப்பூர் என தெரிகிறது. இதனால் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் தேடி வருகிறேன். மேலும், கருப்பூர் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சென்று எனது இளம் வயது ஞாப கங்கள் வருகிறதா? என தேடி உள்ளேன். ஆனால், பல இடங்களில் தேடியும் எனது பெற்றோர், உறவினர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் கண்டுபிடித்து விடு வேன் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.
கால் சென்டர் நடத்தி மோசடி - ஒருவர் கைது
கோவை, பிப். 17- கோவையில் போலி ‘கால் சென்டர்’ நடத்தி வாடிக்கை யாளர் தகவல்பெற்று மோசடியில் ஈடுபட்டவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை, ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந் தவர் யுவராஜ் பாண்டியன். இவர் வங்கிக்கடன் பெறுவ தற்காக கோவை சுந்தராபுரம் பகுதியில் டி.எஸ்.பேங்கிங் சொல்யூசன் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் தினேஷ் (25) என்பவரை அணுகியுள்ளார். தினேஷ் இணைய வழியில் வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக கூறி யுவராஜ் பாண்டியனின் ஆதார் கார்டு பான் கார்டு ஓ.டி.பி. ஆகிய தகவல்களை பெற்றார். தொடர்ந்து யுவராஜ் பெயரில் வங்கி கணக்கு துவங்கி ரூ.1.39 லட்சம் கடன் பெற்று மோசடி செய்தார். இதுகுறித்து, யுவராஜ்பாண்டியன் கோவை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அதில், தினேஷ் போலியாக ‘கால் சென்டர்’ நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் அவரது நிறுவனத்தில் இருந்து 8 மொபைல் போன்கள் 26 சிம்கார்டுகள் 11 பான்கார்டுகள் 12 ஆதார் கார்டுகள் வாக்காளர் அடையாள அட்டை போலி வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் 16 தனியார் வங்கி பில்கள் 6000 வாடிக்கையாளர்கள் குறித்த விபரங்கள் கம்ப்யூட்டர் பறி முதல் செய்யப்பட்டு, தினேஷை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
குடியரசு தலைவர் வருகையால் கோவையில் போக்குவரத்து மாற்றம்
கோவை, பிப்.17- இந்திய குடியரசு தலைவர் சனியன்று (இன்று) கோவை வருவதையொட்டி போலீசார் பாதுகாப்பு மற்றும் குடியரசு தலைவரின் வருகை ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. மேலும், போக்குவரத்து மாற்றம் குறித்து போக்கு வரத்து போலீசார் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் திரௌ பதி முர்மு பல்வேறு நிகழ்களில் பங்கேற்க வருகிறார். இதன்ஒருபகுதியாக ஜனாதிபதி கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு களை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தலை வர் வருகையை அடுத்து, கோவை மாநகர மற் றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு நடவ டிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட் டத்தில் 5 ஆயிரம் போலீசாரும், மாநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசாரை வரவழைக்கபட்டு ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும், குடியரசு தலைவர் வாகனம், அதனுடன் வரும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து வருவது குறித்து அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சனியன்று (இன்று) மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஞாயிறன்று (நாளை) காலை 6 மணி முதல் 10 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அவிநாசியி லிருந்து, கோவை நகருக்குள், சின்னியம் பாளையம் வழியாக கனரக வாகனங்கள் வர அனுமதியில்லை என போக்குவரத்து போலீ சார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை மரங்களை சாய்த்த சுள்ளிக்கொம்பன்
கோவை, பிப்.17- ஆனைமலை அடுத்த ஆழியார் அருகே தனியார் தோட்டத்துக்குள் புகுந்து 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்திய சுள்ளிக்கொம்பன் ஒற்றைக் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர். ஆனைமலையை அடுத்த நவமலை, வால்பாறை சாலை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை காட்டுயானை கடந்த சில தினங்களாகவே சுற்றி வருகிறது. இதனை சுள்ளிக்கொம்பன் என இப்பகுதி மக்கள் பெயரிட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங் களுக்கு முன்பு மின்வாரிய குடியிருப்புகள் புகுந்த யானை, அங்கிருந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்களை சேதப்படுத்தியது. இந்நிலையில், வியாழனன்று இரவு ஆழி யார் அறிவு திருக்கோயில் அருகே உள்ள தனி யார் தென்னந்தோப்புக்குள் புகுந்து 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சாய்த் துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இரவு மற்றும் மாலை நேரங்களில் ஒற்றை காட்டுயானை மலை வாழ் மக்கள் வாழும் பகுதி மற்றும் வால் பாறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள னர்.
ஆக்கிரமிப்பில் இருக்கும் பாதையை மீட்டு தார் சாலை அமைக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
உடுமலை, பிப்.17- பல ஆண்டுகள் பொது மக்கள் பயன்படுத்திய பாதையை, முறையாக அளவீடு செய்து தார்ச்சாலையாக மாற்றி அமைக்க வலியுறுத்தி, வாலிபர் சங்கத்தின் சார்பில் வியாழ னன்று பள்ளபாளையம் பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை தாலுகா பள்ளபாளையம் ஊராட்சியில் திரு மூர்த்திமலைக்கு செல்லும் சாலையிலிருந்து பழமையான காளியப்பர் கோவில் மற்றும் பள்ளபாளையம் ஊருக்குள் செல்ல பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திய பாதையானது தற்பொழுது பல்வேறு ஆக்கிரமிப்புகளால் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனை வரும் பயன்படுத்தும் வகையில் தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என பல முறை ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவல கத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் ஒன்றிய பொருளாளர் குமரகுரு தலைமை தாங்கி னார், ஒன்றிய செயலாளர் தமிழ்தென்றல், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஜெகதீசன், முன்னாள் வாலிபர் சங்க செய லாளர் கனகராஜ், பள்ளபாளையம் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ரத்தினகுமார், விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் சுந்தரம், வாலிபர் சங்க நிர்வாகிகள் இமான், மாசானி, கருப்புசாமி, அஜித்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள்.
போதைக்கு எதிராக 1கோடி கையெழுத்து
திருப்பூர், பிப்.17- உடுமலை ஒன்றியத்தில் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் பள்ளபாளையம் கிளையில் வெள்ளி யன்று துவங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி கையெ ழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதி யாக உடுமலை ஒன்றிய வாலிபர் சங்கத்தின் சார்பில் பள்ளபாளையம் பகுதியில் பொது மக்களிடம் போதைக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு பின்னர் கையெழுத்துகள் பெறப்பட்டது. வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய செய லாளர் சு.தமிழ்தென்றல் தலைமையில் உடுமலை முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதில், செயலாளர் ஜெகதீசன், வி.தொ.ச நிர்வாகி பி.எஸ்.சுந்தரம், வி.ச. ரத்னகுமார் கே.இயேசுராஜ் முன்னிலை வகித்தனர். உடுமலை பொருளாளர் ஆர். குமரகுரு, கமிட்டிஉறுப்பினர்கள் ஆர்.மாசானி, கருப்புச்சாமி, அஜித்குமார் பெருமாள்சாமி, இமான், செந்தில் குமார், மாரிமுத்து உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
திருப்பூர், பிப். 17- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத் தில் தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாடகை வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பள்ளி குழந்தை கள் காயமின்றி தப்பினர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உகாயனூரில் ராஜா நேஷனல் மெட்ரிக் மேல்நிலை தனியார் பள்ளி இயங்கி வருகிறது. வெள்ளியன்று பள்ளி முடிந்ததும் பொங்கலூர் மாதப்பூர் சாலை வழியாக தனியார் வாடகை வேனில் 20 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களோடு நாகராஜ் என்ற ஓட்டுநர் வாகனத்தை இயக்கியுள்ளார். மாதப்பூர் கிரா மத்திற்கு உள்ளே வாகனம் வந்தபோது, மேடான பகுதியில் வேனை பின்பக்கமாக எடுத்துள்ளார். அப்போது குழந்தைக ளோடு வாகனம் பள்ளமான பகுதியில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து. விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தில் சிக்கி யிருந்த குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். விபத் தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தை பொதுமக்கள் மீட்டனர். வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு, அனைத்து குழந்தைக ளும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள் ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரால் பரபரப்பு
திருப்பூர், பிப்.17 - திருப்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் கத்தியுடன் நின்று கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட் டது. இதனால் பயணிகளுக்கு ரயில் டிக்கெட் வழங்குவது 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் வெள்ளியன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று உள்ளே நுழைந்தார். முதல் பிளாட்பாரம் டிக்கெட் கவுண்டரில் பயணிகள் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு கத்திக் கொண்டே ஓடி வந்த அந்த நபர், கையில் ஒரு பெரிய கத்தியை வைத்துக் கொண்டு பொது மக்களுக்கு மிரட்டல் விடுத்தார். இதை பார்த்து டிக்கெட் எடுக்க வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிக்கெட் கவுண்டரில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை 2 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்டரின் முன்புறமாக நின்று அந்த வாலிபர் கெட்ட வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்துக் கொண்டு இருந்தார். தீயணைப்புத் துறையினர் மற்றும் திருப்பூர் வடக்கு காவலர்கள் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் அந்த வாலிபரை பிடிக்க காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின் காலை 6 மணியளவில் அவரிடம் இருந்த கத்தியை காவலர்கள் தட்டிவிட்டு அதிரடி யாக அந்த வாலிபரை பிடித்து குண்டு கட்டாக தூக்கி சென்ற னர். அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் அந்த வாலி பர் திருப்பூர் மேட்டுப்பாளையம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் (36) என்பதும், அவரது வீட்டில் மனைவி ராணி, மகன் தமிழ்செல்வனுடன் ஏற்பட்ட தகராறில் இங்கு வந்து பிரச்சனை செய்தது தெரியவந்தது. இந்த வாலிபரின் மிரட்டலால் சுமார் 2 மணி நேரம் முதல் பிளாட்பாரமில் டிக்கெட் வழங்கும் சேவை பாதிக்கப்பட்டது. அதிகாலையில் போலீசாரையும், பொதுமக்களையும் வாலிபர் ஒருவர் படாத பாடுபடுத்திய சம்பவம் ரயில் நிலைய பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
நகராட்சி இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட மருத்துவர்கள் சங்க கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தல்
உடுமலை, பிப்.17- உடுமலை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட உடுமலை மருத்துவர் கள் சங்க கட்டிடத்தை அகற்றாமல், ஆக்கிர மிப்பு செய்த இடத்திற்கு பதிலாக வேறு இடம் பெற்றுக்கொள்வது என்று கடந்த ஆட்சியில் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்து நகராட்சி இடத்தை மீட்க வேண்டும் என நகர மன்ற உறுப்பினர் வேலுச்சாமி கோரிக்கை வைத்தார். உடுமலை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் 17 ஆம் தேதி வெள்ளியன்று நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் உடுமலை நகராட்சிக்கான இலட்சினை வெளியிடப்பட்டது. இலட்சினை நகர மன்ற உறுப்பினர் வேலுச்சாமி வெளியிட ஆணை யர் சத்யநாதன் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் உடுமலை நகராட்சி பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டைத் திடலில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் அதிகமாக நடைபெறுவதால் இப்பகுதியில் ரூபாய் 8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அண்ணா கலையரங்கம் வருவாய் நிதியில் அமைக்கவும், மேலும் 3 ஆவது ஸ்டேட் பாங்க காலனியில் நகராட்சி நூற் றாண்டு விழா நிதியில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கு டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்பது உள் ளிட்ட 145 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இந்த கூட்டத்தில் உறுப்பினர் வேலுச்சாமி பேசுகையில், உடுமலை நகராட்சிக்கு சொந்த மான ராஜேந்திரா சாலை, பழனி சாலை சந்திப் பில் உள்ள வாரச் சந்தையின் ஒரு பகுதியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்த மிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதை தொடர்ந்து, உடுமலை மருத்துவர்கள் சங்கம் ( ஐஎம்ஏ) நகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி யுள்ளது. கட்டிடங்களை அகற்ற வேண்டிய கடந்த நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய் யப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறு இடம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நகராட்சிக்கு வழங்க வேண்டும் என்று நிறைவேற்றிய தீர் மானத்தை ரத்து செய்து, உடுமலை மருத்து வர்கள் சங்கத்தால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட பூங்கா இடத்தை மீட்க வேண்டும் என் றார். இதையடுத்து பேசிய உறுப்பினர் தங்க ளுடைய வார்டுகளில் எந்த ஒரு பணியும் நடை பெறுவது இல்லை என்றும் குறிப்பாக வஉசி வீதியில் சாலை பணி அமைக்க டெண்டர் விடப்பட்டு மூன்று மாதத்திற்கும் மேலான நிலையில், தற்போது வரை பணிகள் துவங் கவில்லை என கூறினார். அதற்கு நகர மன்ற துணை தலைவரே ஏன் வேலை நடை பெற வில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். இதைதொடர்ந்து உறுப்பினர்கள் பேசு கையில், உழவர் சந்தைக்கு அருகில் நகராட் சிக்கு சொந்தமான இடத்தில், கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் வாட கையை தற்போது வரை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் வசூல் செய்து வருகிறது. இதுகு றித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் , பாதாளசாக்கடை திட்டத் தில் இணைப்பு பெறாதவர்கள் குறித்து முழு மையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இணைப்பு பெறாதவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கி அனைவரையும் முழுமை யாக திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாதா ளசாக்கடை திட்டம் முழுமையாக பயன ளிக்காது என்றார்கள். இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணை யாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்து நக ராட்சி துறை அதிகாரிகள் நகரமன்ற உறுப் பினர்கள் கலந்து கொண்டார்கள்.
பருத்தி ஏலம்
அவிநாசி, பிப்.17- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் வியாழக்கிழமை நடை பெற்ற பருத்தி ஏலத்தில், ரூ. 71லட்சத்து 58ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத் தம் 2992 பருத்தி மூட்டை கள் வந்தன. ஆர்.சி.எச்.பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,000 முதல் ரூ. 8,389 வரையிலும், கொட் டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3.000 முதல் ரூ. 5.500 வரையி லும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.71லட்சத்து 58 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
லாரிகளை மறித்து பணம் பறிக்கும் கும்பல் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் லாரி உரிமையாளர்கள்
திருப்பூர், பிப். 17- எம்சாண்ட் மணலை ஏற்றிச்செல்லும் லாரி களை மறித்து பணம் கேட்டு மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், விரை வில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் அறிவித் துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட, பொங் கலூர், குண்டடம், தாராபுரம், அவிநாசிபா ளையம், பெருந்தொழுவு உள்ளிட்ட பகுதிக ளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. இந்த லாரிகளில், கிராவல் மண், மணல், எம்சாண்ட் ஆகியவற்றை விற்ப னைக்காக கொண்டு செல்கின்றனர். இந் நிலையில், லாரி உரிமையாளர்களை சிலர் மிரட்டி யூனிட் ஒன்றுக்கு 400 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், கொடுக்காவிட்டால் அதி காரிகளை வைத்து லாரிகளை பறிமுதல் செய் வோம் என மிரட்டி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்த குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும், வியாழனன்று குண்டடம் அருகே வேங்கிபாளையம் கிராமத்தை சேர்ந்த லோகு என்பவர் தனது விவசாய நிலத்தினை சமன்படுத்த கிராவல் மண் எடுத்த போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டிள் ளனர். இந்த கும்பலை அங்குள்ள விவசா யிகள் பிடித்துள்ளனர். மேலும், அவர்கள் வந்த காரை பரிசோதனை செய்ததில் அரி வாள் மற்றும் உருட்டைக்கட்டைகளோடு வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து ஊதியூர் காவல் துறையினருக்கு வழக்கு பதிவு செய்து ஆயுதங்களோடு வந்த ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். இந்நிலையில் அடியாட்களின் அட்டூழி யத்தால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோ சனைக் கூட்டம் கொடுவாயில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளியன்று நடை பெற்றது. இதில், இரண்டு ஆண்டுகளாக பணம் கேட்டு மிரட்டும் புதுக்கோட்டையை சேர்ந்த கும்பல் மீது திருப்பூர் மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும். கனிமவள சட்டப்படி யூனிட் ஒன்றுக்கு 400 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என சட் டம் ஏதாவது உள்ளதா என்பதை தெளிவுப டுத்த வேண்டும். தொடர்ச்சியாக லாரி உரி மையாளர்களை மிரட்டி வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஓரிரு நாட்க ளில் லாரி உரிமையாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரி வித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கோவை பிப்.17- இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த 250க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர். உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காக, தலைக்கவசம் அணிவது குறித்து, மாநகர காவல்துறை விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகிறது. தலைக்கவசம் அணியாமல் வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதமும் விதிக்கப்படு கிறது. இருப்பினும் கல்லூரி மாணவர்கள் பலர், தலைக்கவ சம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பறப்பது தொடர் கிறது. இதைத்தடுக்கும் வகையில் உயிர் சாலை பாதுகாப்பு அமைப்பினர், போலீசாருடன் இணைந்து கல்லூரிகளின் முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நடவடிக்கையின் போது 250க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டது. இதில் கல்லூரி மாணவர்கள் தான் அதிகளவில் மாட்டி னர். பெற்றோர்கள் கவனத்திற்கு... முன்னதாக கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாநகர எல் லைக்குட்பட்ட பள்ளி பகுதிகளில் காவல்துறை மேற்கொண்ட ஆய்வின் போது, பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர் களில் சுமார் 60 சதவிகித பெற்றோர்கள் மட்டுமே தலைக்கவ சம் அணிந்து வருவது தெரிய வந்துள்ளது. எனவே குழந்தை களை இரு சக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர் தலைக்கவசம் அணிந்து வர வேண்டியது அவசியம் என அறிவு றுத்தப்படுகிறது. மேலும், இனி வரும் நாட்களில் அனைத்து பள்ளிகளின் அருகிலும் வாகன தணிக்கை. மேற்கொண்டு இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கோவை மேற்கொள் வார்கள் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
அபராதம் விதிப்பு
உதகை, பிப்.17- உதகையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலா ளர் சேகர். இவர் கடந்தாண்டு கோவையிலிருந்து உத கைக்கு அரசு பேருந்தில் பய ணம் செய்துள்ளார். அப் பேருந்து சேரிங் கிராஸ் பகுதி யில் சென்ற போது டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக் கெட்டை வாங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது, சேகர் தனது டிக்கெட்டை எடுப்பதற்கு தாமதம் ஏற்பட் டுள்ளது. இதனால் சேகர் டிக் கெட் எடுக்கவில்லை கூறி பரி சோதகர் ரூ.500 அபராதம் விதித்து, இழிவாக பேசியுள் ளார். இதில் மன உளைச்சல் அடைந்த சேகர், உதகை மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ஆணையம், சேக ரிடம் வசூலித்த ரூ.500யும் சேர்த்து ரூ.25 ஆயிரம் நட்ட ஈடாக பரிசோதகர் வழங்க உத்தரவிட்டுள்ளது.
மலேசியா கட்டுபாடு: முட்டை ஏற்றுமதி பாதிப்பு
நாமக்கல், பிப்.17- மலேசியா நாட்டின் புதிய கட்டுபாடுக ளால் நாமக்கலில் இருந்து முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து முட்டைகள் பிற மாநிலங்க ளுக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் நாமக்கல்லி லிருந்து மலேசியாவுக்கு 50 லட்சம் முட்டை கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேபோல் துருக்கி நிலநடுக்கம் எதிரொலியாக அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இதனிடையே மலேசியாவில் முட் டைகளை இறக்குமதி செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள் ளது. அதன்படி நாமக்கல்லில் இருந்து மலேசி யாவிற்கு ஏற்றுமதியாகும் முட்டைகளை உற்பத்தி செய்யும் கோழிகளுக்கு பவுல் காலரா, சால்மனலா பாக்டீரியா மற்றும் என்டி வைரஸ் உள்ளிட்ட 3 நோய்களின் பாதிப்பு உள்ளதா? என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாகி உள்ளது. அந்த பரிசோதனையை பெங்களூருவில் உள்ள ஆய்வகத்தில் மேற் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் காலதாமதம் ஏற்படுகிறது. சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் நடைமுறை சிக்கலால் 40 நாட்களுக்கு மேலாக மலேசியாவிற்கு முட் டையை ஏற்றுமதி செய்வதில் தடை ஏற்பட் டுள்ளது. இதனிடையே சான்றிதழ் பெறுவ தில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், முட்டை களை இறக்குமதி செய்ய மலேசியா புதிய கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. முட்டை களை உற்பத்தி செய்யும் கோழிகளுக்கு நோய் கள் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்த பரிசோதனை சான்றிதழை கட்டாயமாக்கி உள் ளது. அந்த சான்றிதழை பெங்களூருவில் உள்ள ஆய்வகத்தில் தான் பெற முடியும் என்ப தால் காலதாமதம் ஏற்படுகிறது. அதன் எதிரொ லியாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக மலேசி யாவிற்கு முட்டை ஏற்றுமதி தடைப்பட்டு உள் ளது. இதை தவிர்க்க முட்டை ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாமக்கல்லிலேயே அத்த கைய பரிசோதனைகளை மேற்கொள்ள ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர் இதனிடையே அண்மையில் கத்தார் நாட்டில் நடைபெற்ற பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற வீரர்க ளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்று மதியானது குறிப்பிடத்தக்கது.
கரடியை விரட்ட மக்கள் கோரிக்கை
உதகை, பிப்.17- நீலகிரி மாவட்டம், கோத் தகிரி சுற்றுவட்டார பகுதிக ளில் சமீப நாட்களாக கரடி களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. உணவு, தண்ணீர் தேடி தேயிலை தோட்டங்களிலும், குடியி ருப்பு பகுதியிலும் உலா வரு வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலை யில், கோத்தகிரி அருகே யுள்ள கேசலாடா கிராமத்தில் தேயிலை தோட்டங்களில் கரடி ஒன்று உலா வந்துள் ளது. இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், அப் பகுதி மக்கள் அச்சம் அடைந் துள்ளனர். கரடியை அடர்ந்த வன பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண் டும் என வனத்துறைக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.