கோவை, அக்.27- மாணவர்களின் மன அழுத்தத் தை போக்கும் வகையில், என்னவித மான பிரச்சனை என கண்டறிந்து, ஆசிரியர்கள் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித் துள்ளார். கோவை மாவட்டம், ஒண்டிப் புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் உண்டு - உறைவிட பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், மேற்கண்ட பள்ளியின் சமைய லறை மாணவர்கள் தங்கும் அறை, எண்ணும் எழுத்தும் திட்ட அறை, கல்வி பயிலும் அறை, கணினி அறை மற்றும் கழிப்பறை, சுற்றுச்சுவர் உள் ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறியப் பட்டது.
ஆசிரியர்கள் என்பவர்கள் வருங் கால சமுதாயத்தை கட்டமைக்க கூடியவர்கள். மாணவர்களின் நலன் காக்கும் திட்டங்கள் தொடர்பாக, ஆசிரியர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகளை கேட்டறிந்து செயல் படுத்துவதற்காகதான் கருத்துகள் கேட்கப்படுகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தும் போது மாணவர்கள் பாடத்தை முழுமை யாக கவனிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். ஏதாவது ஒரு சில மாணவர்கள் பாடத்தை கவனிக்காமல் இருந்து, நடத்தையில் மாற்றம் இருந்தால், அவர்களை பற்றி அவர்களது பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். என்னவித மான பிரச்சனை என்பதை கண்ட றிந்து, மாணவர்களின் மன அழுத் தத்தை போக்கும் வகையில் கவுன் சிலிங் வழங்க வேண்டும், என்றார். அதனைத்தொடர்ந்து, ஒண்டிப் புதூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற் கொண்டார். முன்னதாக, இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.