உதகை, ஆக. 7- முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தில் ஒய்யார மாக நடந்து வந்து குளத்தில் நீர் குடித்த புலியை அச்சத்துடன் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பக சரணாலயம் 681 சதுர கிலோ மீட்டர் வன பகுதியை கொண் டுள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. வன பகுதியில் வன விலங்குகளை கண்டு ரசிக்க காலை, மாலை இரு வேளைகளில் சுற்றுலா பயணிகளை வனத்துறை வாக னங்கள் மூலம் அழைத்து செல்கின்றனர். இந்நிலையில், ஞாயிறுன்று மாலை வன பகுதிக்குள் சென்ற போது திடீரென புலி ஒன்று ஒய்யாரமாக நடந்து வந்தது. இதனை வனத்துறை வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் புலியை கண்டு ரசித்தனர். அந்த புலி அங்கிருந்த குளத்தில் தண்ணீர் குடித்து விட்டு சென்றது. இந்த காட்சிகள் சமூக வலை தலங்களில் வைரலாகி வரு கிறது.