திருப்பூர், மார்ச் 20 – அங்கன்வாடி மையங்களின் மின் கட்டணத்தை அரசே கட்ட வேண்டும் என்று அரசாணை வெளியிட வலியு றுத்தி தமிழகத்தில் மூன்று கட்டப் போராட்டம் நடத்துவதென தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் முடிவு செய்துள் ளது. அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட் டம் திங்களன்று சிஐடியு அலுவலகத் தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் டி.சித்ரா, மாவட்ட செயலாளர் கே.சித்ரா, பொருளாளர் கே.பேபி உள்பட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 10 குழந்தைக ளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையங்களாக்கு வதையும், 5 குழந்தைகளுக்கு குறை வாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். தற்போது தமிழகத்தில் குழந்தைக ளுக்கு காய்ச்சல் பரவிவரும் சூழ லில், 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் குழந்தைகள் நல மைய பணியாளர்கள் நலன் கருதி, கோடை வெயிலின் தாக்கத் தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடு முறை விடுவது போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத கால விடு முறை அளிக்க வேண்டும்.
மினி மைய ஊழியர்களுக்கும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழகம் முழுவ தும் சிலிண்டர் பில்லில் உள்ளபடி ரூ. 1205 வழங்க வேண்டும் ஆகிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் அங்கன்வாடி மையங் களில் மின் கட்டணத்தை அரசே கட்ட வேண்டும் என்று அரசாணை வழங்க வேண்டும். இது பற்றி மாநில செயற் குழு முடிவுப்படி, மார்ச் 28, 29 தேதி களில் தமிழகம் முழுவதும் அனைத்து வட்டக் கிளை அலுவலகம் முன்பும் மாலை நேர ஆர்ப்பாட்டமும், அதைத்தொடர்ந்து ஏப்ரல் 18 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும் மாலை நேர தர்ணா போராட்ட மும், அடுத்த கட்டமாக ஏப்ரல் 25 முதல் மாவட்டத் தலைநகரங்களில் காத்திருப்புப் போராட்டமும் நடை பெறும். திருப்பூர் மாவட்டத்தில் மார்ச் 29 அன்று அனைத்து வட்டக் கிளைக ளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ளூர் பணியிட மாறுதல் வழங்குவதுடன், உதவியாளர்களுக்கு மாதம் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் வலியு றுத்தி உள்ளனர்.