districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

தருமபுரி, டிச.28- சங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சங்கிலிவாடி கிராமத் தைச் சேர்ந்தவர் செந்தில்(40), விவசாயி.  செவ்வானன்று, இவ ரது வீட்டில் மின்விளக்கு எரியவில்லை என்பதால் அதனை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின் சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் , செந்தில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர் அருகே வாலிபர் அடித்துக் கொலை

கோவை, டிச.28- சூலூர் அருகே வாலிபர் ஒருவரை அடித்துக் கொலை செய்து குட்டையில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூரை அடுத்த சின்ன கம்மா ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பிர காஷ் (34). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவ னம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவ ருக்கு திருமணமாகி வசந்தி என்ற மனைவியும் இரண்டு  மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஜல்லிபட்டி பகுதியில் உள்ள குட்டையில், சிலருடன் வாக் குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மர்ம நபர்கள் பிரகாஷை அங்கிருந்த கட்டையால் பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில்,  பலத்த காயமடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனைடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.  வியாழனன்று காலை அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற வர்கள் குட்டையில் காயங்களுடன் நிர்வாண நிலையில் சட லம் கிடப்பதை பார்த்து சுல்தான்பேட்டை காவல் நிலையத் திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத் திற்கு வந்த போலீசார், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்ப வம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையா ளிகளை தேடி வருகின்றனர். தகராறில் வாலிபர் ஒருவர் விறகு  கட்டைகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதியதாக கட்டப்பட்ட மாணவர் விடுதி முதல்வர் திறந்து வைப்பு

தருமபுரி, டிச.28- தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் ரூ. 6.46 கோடி மதிப் பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர் விடு தியை சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டி அள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், ரூ.6.46 கோடி மதிப்பில் 400 ஆதிதிராவிடர் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 28 அறைகளுடன், சுமார் 200 மாணவர்கள் உணவு அருந்தும் அறை, சமை யல் அறை, பொருள்கள் வைக்கும் அறை உள்ளிட்ட அடிப் படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வழியாக திறந்து வைத்தார்.  இதையொட்டி, ஒட்டப்பட்டி கல்லூரி மாணவர் விடுதி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  குத்துவிளக்கேற்றி வைத்து விடுதிக் கட்டடத்தை பார்வை யிட்டார். தருமபுரி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ரயில் பாதையில் நின்ற யானைகள்

உதகை,டிச.28- குன்னூர் பகுதியில் குட்டியுடன் முகாமிட்டு காட்டு யானை  திடீரென ரயில் பாதையை மறித்து நின்றதால் உடனடியாக மலை ரெயில் நிறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்க ளாக பிறந்த குட்டியுடன் யானைகள் முகாமிட்டு உள்ளது. அவை மலைப்பாதையில் உள்ள கிராமங்களான பர்லி யாறு, கே.என்.ஆர், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி  திரிந்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த யானைகள் கூட்டம் காட்டேரி பூங்கா அருகே உள்ள  ரண்ணிமேடு ரயில் நிலையம் அருகில் திடீரென முகா மிட்டன. ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றன. குடியிருப்பு பகு திக்கு இரவு நேரத்தில் சென்ற காட்டு யானைகள் அங்கு உள்ள விளைநிலங்களில் பயிரிட்டு உள்ள வாழை மரங் களை மிதித்து சேதப்படுத்தின. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுத்து நிறுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் இரவில் தனி யாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பின்னர் குன்னூரில் இருந்து புதனன்று மாலை புறப்பட்ட மேட்டுப்பாளையம் மலை ரயில், ரன்னிமேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் பாதையில் யானை கள் நின்றதால் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர்  காட்டு யானைகளை சம வெளி பகுதிக்கு விரட்டினர். இதனையடுத்து வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது.

அரசு தோட்டக்கலை பண்ணை தொழிலாளர்கள் மறியல் 

சேலம்,டிச.28- உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஏற்காடு அரசு தோட் டக்கலை பண்ணை தொழிலாளர்கள் திடீர் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு தோட்டக்கலை பண்ணை  தொழிலாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் வேலை  செய்து வருகின்றனர். நிரந்தரப்படுத்தாமல் ஒப்பந்த முறை யில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, குறைந்தபட்ச போனஸ் வழங்கப்படவில்லை, உரிய தேதியில்  சம்பளம் வழங்குவதில்லை, சட்ட சமூக பாதுகாப்பு ஏது மற்ற நிலையிலேயே பணியாற்றி வருகின்றனர். இந்நிலை யில் மேற்கண்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி நீலமலை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் சேலம் கோட்டை மைதா னத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சம்பள உயர்வுக் கான அரசாணை இருந்தும் எஸ்டேட் முதலாளிகள் அமல்படுத்தாமல் தடை உத்தரவு பெற்று வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றனர். முன்னதாக சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை

உடுமலை, டிச.28- உடுமலையை சுற்றியுள்ள கிராமப்புற ஊராட்சிகள், நகரங் களுக்கு இணையாக புதிய குடியிருப்புகள் அதிகமாக உரு வாகி வருகிறது. எனவே, குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து  ஊராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள் ளது. மேலும், புதிய குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் குப் பைகள் சேர்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள் ளது. இதைத்தடுக்கும் வகையில் தடுக்கும் வகையில், கூடுதல்  தூய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். மேலும்  அவர்களுக்கு நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கு வதை போல் வாகனங்கள் மற்றும் கருவிகளை வழங்க  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ள னர்.

சேவல் சண்டை: வழக்குப்பதிவு

அவிநாசி,டிச.28- அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டை யாம்பாளையம் பொன்னர்  சங்கர் நகரில் சேவல் சண்டை நடந்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகு திக்கு சென்றுள்ளனர். அப் போது சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நான்கு நபர் களை பிடித்து, அவர்களிடமி ருந்து 8200 ரொக்கம் பணம்  மற்றும் 2 சேவல்களை கைப் பற்றியுள்ளனர். மேலும்,  ஆட்டையாம்பாளையம் பகு தியைச் சேர்ந்த புவனேஸ்வ ரன், அனுப்பர்பாளையம் பகு தியைச் சேர்ந்த மனோகரன், திருப்பூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தாமரைக் கண்ணன், ஆட்டையாம்பா ளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால்  உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பருத்தி ஏலம்

அவிநாசி,டிச.28- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில்  நடைபெற்ற பருத்தி ஏலத் தில் ரூ.19 லட்சத்து 63 ஆயிரத் துக்கு வர்த்தகம் நடைபெற் றது. இந்த வாரம் நடைபெற்ற  ஏலத்துக்கு 30,454 கிலோ  பருத்தி கொண்டு வந்திருந்த னர். இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி கிலோ ரூ. 60 முதல் ரூ.71 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் கிலோ  ரூ. 20 முதல் ரூ.30 வரையிலும்  ஏலம் போனது. மொத்தம். ரூ. 19லட்சத்து 63ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது.

மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தருமபுரி, டிச.28- பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிப ருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, தருமபுரி போக் சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்தவர் சிங்காரவே லன் (28). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்.13 ஆம் தேதி யன்று வீட்டில் தனியாக இருந்த, அரசுப்பள்ளியில், 7 ஆம்  வகுப்பு படிக்கும் 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், சிங்காரவேலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில்  குற்றம் சாட்டப்பட்ட சிங்காரவேலனுக்கு 20 ஆண்டுகள் சிறை  தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி  உத்தரவிட்டார்.

மேம்பாலப்பணி: போக்குவரத்து நெரிசல்

நாமக்கல், டிச.28- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சுமார் 200 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புத னன்று இரவு திடீரென ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பி னால், பழைய பாலம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளிபாளையம் காவல் துறை சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் பொழுது ,அதிக வாகனங்கள் வரும் நேரங்களான காலை மற்றும் மாலை நேரங்களில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால், வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரங்களில்  நிறுத்தி வைத்து, வாகனப் போக்குவரத்து குறைந்த பிறகு இரவு நேரத்தில் பணிகளை தொடர வேண்டும் என் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள் ளது.

சிறுத்தையை பிடிக்க தீவிர கண்காணிப்பு

உதகை, டிச.28- பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றிவரும் சிறுத் தையை பிடிக்க, ஐந்து இடங்களில் கூண்டுகளை வைத்து வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுத்தை ஒன்று முகாமிட்டு, அங்குள்ள வளர்ப்பு கால்நடை களை வேட்டையாடியது மட்டுமின்றி, 3 பெண்களையும் தாக் கியது. அதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணி யில், 70-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள், 15 கேமராக் கள் மற்றும் மூன்று கூண்டுகளை வைத்து, கடந்த ஆறு நாட் களாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், காலை மற்றும்  மதிய நேரங்களில் தோட்ட தொழிலாளர்கள், சிறுத்தையை பார்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப் பகத்தில் இருந்து மேலும் இரண்டு கூண்டுகள் கொண்டு வரப்பட்டு, மொத்தம் ஐந்து கூண்டுகள் வைக்கப்பட்டு கண்கா ணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை மற்றும்  மாலை நேரங்களில், வேலைக்கு சென்று திரும்பும் தொழிலா ளர்கள், பாதுகாப்புடன் செல்ல வனத்துறையினர் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பொதுமக் கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத் தப்பட்டு உள்ளது.

இரவு நேரத்தில் பெண்கள் நடமாட முடியாத நிலை: கவுன்சிலர் குற்றச்சாட்டு

நாமக்கல், டிச.28- இரவு நேரத்தில் பெண்கள் நடமாட முடியாத நிலை  உள்ளதென பள்ளிபாளையம் பெண் கவுன்சிலர் குற்றஞ் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவல கத்தில், சாதாரண நகர்மன்ற கூட்டம் தலைவர் மோ.செல்வ ராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன், தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சி களைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர். அப்போது, 18 ஆவது வார்டு பெண் கவுன்சிலர் பேசுகை யில், தனது வார்டுக்குட்பட்ட ஆவரங்காடு பகுதியில் இரவு 10  மணிக்கு மேல் பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்படு கிறது. மதுபோதையில் சுற்றித்திரியும் நபர்களால் பெண்க ளுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து 4 ஆவது வார்டு கவுன்சிலர் பேசுகை யில், நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்கான பள்ளங்கள் மற்றும் சாக்கடைக் கால்வாய் அமைப்பதற்கான சாலைகள் ஆகியவற்றை முறைப்படுத்தி தர வேண்டும், என் றார்.

சுற்றுலா பயணிகளை கவரும் ரெட் லீப் மலர்கள்

உதகை, டிச.28- நீலகிரியில் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ரெட் லீப் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை பருவ காலங்களில் பூத்துக்குலுங்கும். பனிக்காலங்களில் பூக்கும் டேலியா இன்ட்ரிலியஸ், காட்டு சூரியகாந்தி உள்ளிட்ட மலர்கள் அடர்ந்த வனப்பகுதிகள் மட்டுமின்றி சாலையோரங்களில் கூட அதிக அளவு பூத்துக் குலுங்கும் தன்மையுடையவை. அந்த வகையில் தற்போது குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு ரெட்லீப் (redlip) மலர்கள் பூத்துக் குலுங்கி வருகின்றன. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பல்வேறு வகையான ஆங்கிலேய மரங்கள் செடி, கொடிகள் உள்ளிட்டவை இங்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது. அந்த வகையில் குன்னூர் சேலஸ் காட்டேரி, கட்டப்பட்டு, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கும் மலர்கள் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கி வருகின்றன. இந்த மலர்கள் சிகப்பு நிறத்தில் சாலையோரங்களில் சிவப்பு கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, உதகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமப்புறங்களுக்கு செல்லும் வழி நெடுகிலும் இந்த மலர்கள் பூத்துக் குலுங்கி வருகின்றன. சுற்றுலாவிற்காக உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் வழி நெடுகிலும் உள்ள ரெட் லீப் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

 மர்ம பொருள் வெடித்ததில், மேற்கூரை விழுந்து ஒருவர் பலி''

சேலம், டிச.28- சங்ககிரி காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில், மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரி காவல் நிலைய வாளகத்தில் இருந்த குப்பைக்கழிவுகளை எரிக்கும் போது, மர்ம பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. அப்போது மேற்கூரை விழுந்த தில் சங்ககிரியைச் சேர்ந்த நியாமத்துல்லா என்பவர் உயிரி ழந்தார். மேலும், பவானியைச் சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ  இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி உட்கோட்ட காவல் துணை கண்கா ணிப்பாளர் ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினார். மேலும், வெடித்த பொருள் குறித்தும் அறிய, அங்கிருந்த மாதிரிகளை சேகரித்த காவல் துறையினர் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல் நிலையத்தில் மூத்த அதிகா ரிகள் ஆய்வு செய்யவுள்ள நிலையில், சுத்தம் செய்த போது  இந்த விபத்து நிகழ்ந்தாக காவல் துறையினர் தெரிவித்துள்ள னர். இதனிடையே காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உயி ரிழந்த நபரின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும் பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி யுள்ளனர்.

பருத்தி ஏலம்

சேலம், டிச.28- சேலம் வேளாண்மை உற் பத்தியாளர் கூட்டுறவு விற் பனைச் சங்கத்தின் வாழப் பாடி கிளையில் புதனன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 12  விவசாயிகள் 42 பருத்தி  மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு குவிண்டால் ஆர்சிஎச் ரகம்  ரூ.6,119 முதல் ரூ.7,137 வரை யும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.10 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.