மேட்டுபாளையம், நவ.27- தரைப்பாலம் சேதமடைந்து நான்கு ஆண்டு களாகியும் இதுவரை சீரமைக்கப்படாத விரக்தி யில் கிராமமக்கள் சேதமான தரைப்பாலத்திற்கு நூதனமாக கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சம்ப வம் அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத் துள்ள குரும்பனூர் கிராமத்தில் தேக்கம்பட்டி ஊராட்சி மற்றும் சிக்கதாசம்பாளையம் ஊராட் சியை இணைக்கும் சாலை உள்ளது. இங்கு மழை நீர் வடிகால் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேட் டுப்பாளையம் நகராட்சி எல்லையில் அமைந் துள்ள தரைப்பாலம் போக்குவரத்து முக்கித்துவம் வாய்ந்ததாக இந்த உள்ளது. இந்ததரைப் பாலத்தின் வழியே பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பல்வேறு கிராமங்களில் விளையும் விவசாய பயிர்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாக னங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். நகர பகுதியினையும் கிராமப்புறங்களையும் இணைக்கும் முக்கியத்து வம் வாய்ந்த இச்சாலையில் உள்ள தரைமட்ட பாலம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக சேத மடைந்தது. தரைப்பாலத்தின் மேல் பகுதி முழு வதும் சிதிலமடைந்து மழைக்காலங்களில் அவ் வழியே செல்லும் மழை நீர் சாலையில் பெருக் கெடுத்து ஓடி மண் அரிப்பு ஏற்பட்டு அவ்வழியே வாகனங்கள் கடந்து செல்ல கடும் சிரமம் ஏற் பட்டது. இந்த பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என இக்கிராம மக்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறையி னர் நான்காண்டுகளாக கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் சேதமடைந்து இத்தரைப் பாலத்திற்கு அதனருகே கருப்பு கொடிகளுடன் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பையும், வேதனையையும் கிராம மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இனியும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணாவிட் டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப் படும் எனவும் தெரிவித்தனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது விரைவில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.