districts

img

மலைவாழ் மக்கள் குடியிருப்பில் ஆய்வு

கோபிசெட்டிபாளையம், அக்.22- குட்டையூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில், அடிப்படை வசதிகள் குறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடா சலம் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை கிராமத்திற்குட்பட்ட குட்டையூர் தமிழக - கர்நாடகா எல்லை  பகுதியில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கும், மருத்துவ வசதிக்கு பர்கூர் செல்ல வேண்டுமெனில், கர்நாடகா எல்லை வழியாக சுமார் 40  கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும். ஆனால், மாநில எல்லை யில் உள்ள காட்டாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டால், அவ சர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்ல முடி யாத நிலை ஏற்படும். மேலும், மலைவாழ் மக்களின் பல்வேறு பொருட்களை கர்நாடக சோதனைச்சாவடி வழியாக எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், குட்டையூர் மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாகி வருகின்றனர் எனவே  தமிழக வனபகுதியில் குட்டையூர் முதல் செங்குளம் செல்லும்  வனப்பகுதியில் சாலைவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என  குட்டையூர் மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்க டாசலம், அடர்ந்த வனப்பகுதி வழியாக சுமார் 10 கி.மீ., தூரம் நடந்து சென்று, வனப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து  ஆய்வு மேற்கொண்டார். மேலும், மலைவாழ் மக்கள் குடியி ருப்பில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண் டார்.