districts

img

மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் ஆய்வு

தருமபுரி, பிப்.20- மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி இல் லத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி திடீர் ஆய்வு  மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், குண்டலப்பட்டியில் மாற்றுத்திறனா ளிகள் நலத்துறையின் நிதியுதவியுடன், லிட்டில் ஹார்ட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் 18 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி யுடன் கூடிய ஆண்களுக்கான இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தொழில் பயிற்றுநர்கள் நவீன காலத்திற்கு ஏற்றவாறு, தொழிற்பயிற்சி களை பயின்று, இல்லவாசிகளுக்கு கற்பிக்குமாறும், இல்லத் தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும், இல்லத்தில் தங்கியுள்ள மனவளர்ச்சி குன்றியோர்களை நல்ல முறையில் பராமரிக்குமாறு தொண்டு நிறுவன நிர்வாகிக ளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேலும், இல்லத்தில் தங்கியுள்ள 52 மனவளர்ச்சி குன்றியோர்களு டன் ஆட்சியர் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தரும புரி வருவாய் வட்டாட்சியர் ஜெயசெல்வம் தருமபுரி வட்டார  வளர்ச்சி அலுவலர் சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.