தருமபுரி, டிச.1- மாற்றுத்திறனாளிகளை வஞ் சிக்கும் ஒன்றிய அரசின் மீது குற் றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போராட்டத்தில் தமிழ்நாடு அனைத் துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைக்கான நலச்சங்கத்தினர் ஈடுபட்டனர். அரசு வேலைவாய்ப்பில் 4 சத விகித இட ஒதுக்கீட்டின் படி, பல துறைகளில் காலியாக உள்ள பணி யிடங்களை ஒன்றிய அரசு நிரப்ப வேண்டும். ஒன்றிய அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்த வாக்கு றுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய உரிமைகள் சட்டம் -2016 ஐ, முழுமையாக அமல்படுத்த மறுக் கும் ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.ஜி.கரூரான் தலைமை தாங்கி னார். இதில், மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து,
மாவட்ட பொரு ளாளர் ஜி.தமிழ்செல்வி, வழக்கறி ஞர்கள் பிரசாந்த், செந்தில் உள் ளிட்ட திரளான மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோல், ஒன்றிய பாஜக அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் இயக்கம் ஈரோடு அந்தி யூரில் வியாழனன்று நடை பெற்றது. வழக்காடு மன்றமாக நடைபெற்ற இவ்வியகத்திற்கு நடுவராக சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ப.மாரிமுத்து செயல்பட்டார். மாற்றுத் திறனாளி களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு குற்றவாளியே என சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.சகாதேவன் அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்காடினார். வழக்கினை மறுத்து சங்கத்தின் உதவிச் செயலாளர் எஸ்.செந்தில் குமார் உரை ஆற்றினார். சாட்சிய மளித்து மாவட்ட குழு உறுப்பினர் பி.முருகன் உரையாற்றினார். இதில், திரளானோர் பங்கேற்றனர். இதேபோல சத்தியமங்கலத்திலும் வழக்காடு மன்றம் நடைபெற்றது.