ஈரோடு, ஆக.10- ஒரே ஊரு ஒரே சுடுகாடு என்ற கோரிக்கை அறிவியல் கண்ணோட் டத்தோடு வலுப்படுத்தப்பட வேண் டும் என தமுஎகச பொதுச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா குறிப் பிட்டார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக ஈரோட்டில் ஒரே ஊரு ஒரே சுடுகாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப் பட்டது. மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், தமுஎகச பொது செய லாளர் ஆதவன் தீட்சண்யா பேசு கையில், தேநீர் கடைகளில் இரட்டை குவளை, மூன்று குவளை முறைக்கு எதிராக அம்பேத்கரிய, பெரியாரிய, திராவிட, இடதுசாரி இயக்கங்கள் கடுமையான போராட் டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதன் மூலம் பல்வேறு குவளை கள் முறைக்கு முடிவு கட்டினார் கள். இப்போது, அந்த இடத்தில் பேப்பர் கப் வைத்து, எல்லோ ரையும் சமமாக நடத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கி விட் டார்கள். இதேநிலையில்தான் ஒரே சுடு காடு கேட்கும் விசயத்திலும் நடக்கப் போகிறது. உள்ளூரில் இருக்கக் கூடிய உழைப்பு சார்ந்த மக்களை இழிவுபடுத்தக் கூடிய பல சடங்குகள் இருக்கின்றன. சமத்துவபுரம் வந்த போது யார் சாக்கடை அள்ளுவார்கள், யார் சவரம் செய்வார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அங்கே ஒருவர் இறந்து விட்டால் யார் குழி எடுப் பார்கள், யார் அடக்கம் செய்வார் கள் என்ற கேள்வி வந்தது. அதே கேள்வியை ஒரே சுடுகாடு வந்த பின்னால் யார் அந்த பிணத்தை எரிப்பார்கள் என்ற கேள்வி வரும். பொது மயானங்களில், மின் மயானங்களில் ஊர் புறங்களில் யார் செய்து கொண்டிருந்தார்களோ அதே சாதிய படி நிலையில் இருப்பவர்கள் தான் இங்கும் செய் பவர்களாக மாற்றப்பட்டிருக் கிறார்கள். ஒரே சுடுகாடு என்கிற விசயத்தில் இன்னும் அறிவியல் மனப்பான்மையோடு நாம் அணுக வேண்டியுள்ளது.
ஆண்கள் தான் பிணம் எரிக்கக் கூடிய வேலையை செய்வார்கள் என்பதை பல இடங் களில் பெண்கள் மறுத்திருக்கிறார் கள். ஆனால் குறிப்பிட்ட அந்த சாதி அடுக்கிலே இருக்கிறவர்கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மயான வேலை என்பது ஒரு பொது அரசு பணியாக மாற்றப்பட வேண் டும். இறந்த பிறகு ஒரே இடத்தில் நம்மை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்ற ஒரு சமத்துவ கண்ணோட்டம் வந்து சேரும். இந்த சமத்துவ கண்ணோட்டத்தை உருவாக்குவதற்காக கருத்தியல் போராட்டத்தை நாம் நடத்த வேண்டும். ஒரே ஊர் ஒரே சுடுகாடு என்ப தற்கு நாம் ஒரு விவாதத்தை நடத்த வேண்டும். அந்த விவாதத்தில் பல அமைப்புகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதியின் அடிப்படை யில் அல்லாமல் அறிவியல் கண் ணோட்டத்தில் செய்து முடிக்க வேண்டும் என்றார். முன்னதாக, இக்கருத்தரங்கில் மாநில உதவித் தலைவர் யு.கே.சிவ ஞானம், மாவட்டச் செயலாளர் மா. அண்ணாதுரை ஆகியோர் உரை யாற்றினர். முடிவில், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் வி.ஏ.விஸ்வநாதன் நன்றி கூறினார்.