districts

img

புதியவர்களை ஈர்த்த குறும் படம் பயிற்சிப் பட்டறை

திருப்பூர், ஜூன் 9 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு கிளை நடத்திய குறும்பட பயிற்சி பட்டறையில், திருப்பூர் மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாண வர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட குறும் பட ஆர்வலர்கள் 50 க்கும் மேற்பட்டோர்  ஆர்வமுடன் பங்கேற்றனர். திருப்பூர் சோளிபாளையம் தனியார்  மண்டபத்தில் கடந்த ஞாயிறன்று நடை பெற்ற இந்த பட்டறையில் கதை, திரைக் கதை எழுதுவது பற்றி நக்கலைட்ஸ் யூ  டியூப் சேனலின் பிரசன்னா பாலச்சந்தி ரன், குறும்படம் மற்றும்‌ திரைப்பட  இயக் கம் பற்றி ராஜேஷ் ஆகியோர் பயிற்சிய ளித்தனர். கோவை பிஎஸ்ஜி கல்லூரி யின் நாடகத்துறை பேராசிரியர் ராம் ராஜ் நடிப்புப் பயிற்சி வழங்கினார். குறும்பட இயக்குநரும், அயலான்  திரைப்படத்தின் உதவி இயக்குந ருமான சூர்யபாரதி திரைப்பட தயா ரிப்பு குறித்தும், தொழில் நுட்பங்கள் குறித்தும் விரிவான தரவுகளோடு பயிற் சியளித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற குறும்பட‌  ஆர்வலர்கள் இயக்கிய சில குறும்படங் கள் திரையிடப்பட்டு அது குறித்த திற னாய்வுகள் செய்யப்பட்டன. குறும்பட இயக்குநர் தாண்டவக்கோன், யோகி செந்தில் உள்ளிட்டோரும் குறும்பட இயக்கம் பற்றி விளக்கிக் கூறினர். ஆர்வத்தை மட்டுமே அடிப்படை யாகக் கொண்டு, தன்னியல்பாக  இயங்கி வந்த குறும்பட‌ ஆர்வலர்களை  ஒருங்கிணைத்து அவர்களுக்கு குறும் படம் மற்றும்‌ திரைப்படம் குறித்த புரி தல்களையும், அனுபவம்‌ மிக்கவர் களைக் கொண்டு தொழில்நுட்ப பயிற்சி களையும் வழங்கிய இந்நிகழ்வு இளந் தலைமுறையினரிடம் பெரும் வர வேற்பைப் பெற்றது. சமூக ஊடகங்கள்‌ மூலம் மட்டுமே  விளம்பரம் செய்யப்பட்ட இந்நிகழ் வுக்கு இதுவரை இயக்கத் தொடர்பு இல்லாத புதியவர்கள் கட்டணம் செலுத்தி ஆர்வமுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சிப் பட்ட றையில் கலந்து கொண்ட பலரும்  தமிழ் நாடு‌ முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தில் இணையவும், தொடர்ந்து செயல்படவும் விருப்பம் தெரிவித்தனர். மாநில செயற்குழு உறுப் பினர் ஆர்.ஈஸ்வரன் பங்கேற்று வாழ்த்தி னார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை திருப்பூர் வடக்கு தமுஎகச செயலாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் இசைப்பிரியன் சந்தோஷ் மற்றும் குறும்பட இயக்குனர் திருமூர்த்தி, மு. திருப்பதி உள்ளிட்ட வடக்கு கிளை நிர் வாகிகள் செய்திருந்தனர்.