districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தலைக்காயத்திற்கென அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும்

தலைக்காயத்திற்கென அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் சேலம், மார்ச் 25- தலைக்காயத்திற்கென அரசு தலைமை மருத்துவமனை யில் தனி சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படக்கூ டியதாக ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த பிரபல நரம்பி யல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.நடராஜன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், உலகம் முழுவதும் மார்ச் 20 ஆம்  தேதி உலக தலைக்காய தினமாக அனுசரிக்கப்பட்டு வரு கிறது. தலைக்காயத்தினால் வருடத்திற்கு 20 ஆயிரம் பேர்  உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கல்லீ ரல் நோய், இதய நோய் இவற்றை விட கொடுமையான நிகழ்வுகள் தலைக்கயத்தால் ஏற்படுகிறது. மக்களின் அறி யாமையால் தலைக்காய நோய் ஏற்படுகிறது. அதிகப்ப டியாக விபத்துகளினால் தலைக்காயங்கள் தமிழகத்தில் ஏற்படுகிறது. 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர்க ளுக்கு அதிகப்படியாக தலைக்காயம் ஏற்படுவதாகவும், குறிப்பாக இரண்டு சக்கர வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டும்போது தலைக்காயங்கள் ஏற்படுகிறது. அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்க  வேண்டும். தற்பொழுது தலைக்காய சிகிச்சைக்கு அதிக அள வில் பணம் செலவு செய்யப்படுகிறது. இதனால் சாதா ரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிப் படைகிறார்கள். சிகிச்சைக்குப் பின்பு அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே,  தலைக்காயங்களை தவிர்க்க பொதுமக்கள் சாலை விதி களை பின்பற்ற வேண்டும். சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை யில் கடந்த ஆண்டு மட்டும் 2200 பேருக்கு அறுவை  சிகிச்சை நிலை ஏற்பட்டது. இதில் 20 சதவிகித இறப்பு  ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தலைக்காயத்திருந்து விடுபட கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவு 24  மணி நேரமும் செயல்படக்கூடிய தகுதி வாய்ந்த ஊழியர் களைக் கொண்டு இயக்கப்பட வேண்டும் என மருத்துவர் ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார்.

பனிக்கடலை அறுவடை பணி தீவிரம்

தருமபுரி, மார்ச் 25- தருமபுரி மாவட்டத்தில், பனிக்கடலை என்றழைக் கப்படும் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பனிக்கடலை எனப்படும் கொண் டைக்கடலை, தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி, கடத்தூர், புட்டி ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200  ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தனி பயிராகவும், ஊடு  பயிராகவும் பயிரிட்டுள்ளனர். 3 மாத பயிரான கொண் டைக்கடலை, பனிக்காலத்தில் கிடைக்க கூடிய நீராதா ரத்தின் மூலமே நன்கு செழித்து வளரும். 5 கிலோ விதைக்கு  100 கிலோ விளைச்சல் கிடைக்கும். தனியாக பயிரிட  ஏக்கருக்கு 30 கிலோ விதை தேவைப்படும். கொண்டைக் கடலையை அவித்து சுண்டலாகவும், குழம்பாகவும் உண வில் சேர்த்துக் கொள்கின்றனர். தற்போது, தருமபுரி மாவட் டத்தில் கொண்டக்கடலை அறுவடை முழுவீச்சில் நடை பெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொண்டைக்கடலை பயிருக்கு பாராமரிப்பு செலவு குறைவு.  லாபம் அதிகம் என்றாலும் அறுவடை செய்ய போதுமான ஆட் கள் கிடைக்காமல் அவதிப்பட நேரிடுகிறது. புன்செய் பயி ராகவும் பயிரிடப்படுவதால் பனி ஈரம் காயும் முன்பே பிடுங்க  வேண்டும். ஆனால், கூலிக்கு ஆட்கள் வருவதில்லை, என  கவலை தெரிவித்தனர்.

காகித ஆலை சாலையில் பேருந்துகள்  நின்று செல்ல அதிகாரிகள் உத்தரவு

நாமக்கல், மார்ச் 25- காகித ஆலை சாலையில் அனைத்து பேருந்துகளும், நின்று செல்ல வட்டார போக் குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி செல்லும் பேருந்துகள், திருச் செங்கோடு சாலையில் அமைந்துள்ள காகித  ஆலை சாலை பேருந்து நிறுத்தத்தில், பய ணிகளை ஏற்றி இறக்குவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இது குறித்து  பயணிகள் குமாரபாளையம் வட்டாரப்  போக்குவரத்து அதிகாரிகள் முன்னிலை யில், சில தினங்களுக்கு முன்பு ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காகித ஆலை சாலை பேருந்து நிறுத்தத்தில் பய ணிகளை ஏற்று இறங்கிச் செல்ல வேண் டும் என வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத் தப்பட்டது. மேலும் விதிகளை மீறும் பட்சத் தில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டா ரப் போக்குவரத்து அலுவலகம் மூலம்  தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருந்த போதி லும் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றி  இறக்கி விடுவது இல்லை என தொடர் புகார் கள் இருந்தது. இதனையடுத்து சனியன்று சம்பந்தப் பட்ட தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை  பிடித்தனர். பின்பு அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து பொது மக்களை சமாதானம்  செய்த நிலையில், காகித ஆலை சாலை பகு தியில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலரின் உத்தரவு நகல் எடுக்கப்பட்டு, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், பொது மக்களிடம் வழங்கப்பட்டது.

சிறை கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல்

சேலம், மார்ச் 25- சேலம் மத்திய சிறையில்  உள்ள தண்டனை கைதியி டம் இருந்து 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசார ணைக் கைதிகள் என 800க் கும் மேற்பட்டோர் அடைக் கப்பட்டுள்ளனர். இந்த கைதி களின் அறைகளில், சிறைக் காவலர்கள் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி கைப்பேசி, கஞ்சா உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்து  வருகின்றனர். இந்நிலை யில், கைதிகளில் சிலர் கைப் பேசி வைத்திருப்பதாக புகார்  எழுந்தது. இதையடுத்து, சிறைக் காவலர்கள், கைதி களின் அறைகளில் சோதனை நடத்தினர். இதில்,  டவர் பிளாக்கில் அடைக் கப்பட்டிருந்த தண்டனை கைதியான மதுரை, கீழக் கரையைச் சேர்ந்த முனியப் பன் என்ற படம் முனியப்ப னின் அறையில் இருந்து 2  கைப்பேசி, ஒரு சார்ஜர், ஒரு  பேட்டரி உள்ளிட்டவை பறிமு தல் செய்யப்பட்டன. 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கைதியான இவரி டம், எவ்வாறு கைப்பேசி  கிடைத்தது என்பது குறித்து  சிறை நிா்வாகத்தினர் விசா ரித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் இல்லாமல் திணறும் தமாகா

நாமக்கல்,மார்ச் 25-  பாஜக கூட்டணியில் சேர்ந்த தமாகா தேர்தல் பணியாற்ற ஊழியர்கள் இல்லா மல் திணறி வருகிறது.  நடைபெற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் பாஜக அங்கம் வகிக் கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்  மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய குமார் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுக, அதிமுக உள் ளிட்ட பல்வேறு கட்சியினர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தேர்தல் பணி மனைகளை திறப்பது, வீடு வீடாக சென்று பொது  மக்களை சந்தித்து ஆதரவு கேட்பது, வேட்பு  மனு தாக்கல் செய்வது என அடுத்தடுத்த தேர்தல் பணிகளுக்கு  சென்று விட்டனர். ஆனால், தமாகவினர் இன்னும் ஆரம்ப கட்ட  பணிகளையே துவக்காத நிலையே உள்ளது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியை பொருத்தவரை தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாஜக உள் ளிட்ட கட்சிக்கு வாக்கு வங்கியோ மக்கள்  செல்வாக்கோ, தொண்டர் பலம் இவைக ளில் எதுவுமே இல்லாத நிலையே உள்ளது.  இக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளின் நிர்வாகிகளை தேடி பிடிக்க வேண்டிய நிலை யில் உள்ளது. நிலைமை இப்படி இருக்க  தமிழ்  மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு நாடாளு மன்றத்  தேர்தலை சந்திக்க உள்ளது.  மற்ற கட்சியினர் பரபரப்பாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக அங்கம் வகைக்கும் தமாகா என்ன செய்யப் போகிறது என்பதே தெரியாமல் விக்கித்து நிற்கின்றனர்.

தருமபுரி: 26 ஆயிரம் பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு

தருமபுரி, மார்ச் 25- தருமபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள மூத்த  குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகள் 26,875 பேர் வீட்டிலிருந்த படியே தபால் மூலம் வாக்களிக்க படி வம் 12டி வழங்கி நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  வயது மூப்பு மற்றும் இயக்க குறைபா டுகள் காரணமாக, யாரும் வாக்க ளிக்காமல் இருக்க கூடாது என்பதற் காக, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த  குடிமக்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்குகளை செலுத்தும் வகையில்,  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, 100 வயதை கடந்த 114 பேர், 85 வயதை கடந்த 13,394 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 13,367 பேர் உள்ளனர். இவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் மூத்த  குடிமக்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் என 26,875 பேர் உள்ள னர். இவர்களுக்கென நியமிக்கப் பட்ட வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள், 12டி விண்ணப்ப படிவங் களை, சம்பந்தப்பட்டவர்களின் இல் லங்களுக்கே நேரில் சென்று வழங்கி யுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை சேகரித்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர் 12டி விண்ணப்ப படி வங்களை பெற்று பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது பணியாளர்களின், துறைத் தலைவர் சான்று அளித்து மேலொப்பம் செய் யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறைகளின்  தலைவர்கள் மூலம், தருமபுரி ஆட் சியரிடம் அளிக்க வேண்டும். இப்படி  விண்ணப்பம் செய்யும் யாவருக் கும் அஞ்சல் வாக்குச்சீட்டு வழங்கப்ப டும். இவர்கள் தருமபுரி, அரூர் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில், வரும் ஏப்.9 ஆம் தேதி முதல்  11 ஆம் தேதி வரை செயல்பட உள்ள  தபால் வாக்கு செலுத்தும் மையத் தில், நேரில் வந்து வாக்கினை அங் குள்ள பெட்டியில் செலுத்த ஏற்பா டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றனர்.

பறக்கும்படை சோதனையில் சிக்கிய கள் 


பறக்கும்படை சோதனையில் சிக்கிய கள்  நாமக்கல் மார்ச் 25- திருச்செங்கோடு, கோழிக்கால் நத்தம் காந்தி சிலை அரு கில் உதவி தோட்டக்கலை அலுவலர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி  சோதனை செய்தபோது வாகனத்தில் 75 லிட்டர் பனை மரத்தின் கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்து,  இதில் தொடர்புடைய இருவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஏற்காட்டில் இறந்த பெண் அடையாளம் தெரிந்தது

ஏற்காட்டில் இறந்த பெண் அடையாளம் தெரிந்தது சேலம், மார்ச். 25- சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் பெண் ஒரு வரை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசிவிட்டு சென்ற  சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடை யாளம் தெரியாத அப்பெண் குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.  இதில், பெண்ணின் உடல் இருந்த சூட்கேஸ் கோவை யில் ஒரு கடையில் வாங்கப்பட்டதை உறுதி செய்த போலீ சார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில்,  சூட்கேஸ் வாங்கியவர் மன்னார்குடியை சேர்ந்த நடராஜ்  என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தி யதில், நடராஜ் கத்தார் நாட்டில் வேலைக்கு சென்றதும், அங்கு  தேனி மாவட்டத்தை சுபலட்சுமி என்பவர் பணியாற்றி வந்த தும், அவருடன் நெருக்கமாக பழகி உள்ளார். பின்னர் இருவ ரும் கடந்த ஆண்டு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். பின்னர் கத்தாருக்கு செல்வதாக கூறிவிட்டு, கோவை பீள மேட்டில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன், மனைவியாக இருவரும் வசித்து வந்துள்ளனர்.  இந்நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலை யில், ஆத்திரமடைந்த நடராஜ் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி இறந்துள்ளார். இத னால், அதிர்ச்சியடைந்த நடராஜ் தனது நண்பர் கனிவா ளனை அணுகி விபரத்தை தெரிவித்து, இவரின் உதவி யோடு, சூட்கேசில் அடைத்து, வாடகை கார் ஒன்றை அமர்த்தி  ஏற்காடு மலைப்பகுதியில் வீசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடராஜ் மற்றும் கனிவாளன் இருவரையும் கைது  செய்த போலீசார் சேலம் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.

தொடங்கியது கோடை காலம்: பழுதான போர்வெல் பம்ப்புகள் சீர்செய்யும் பணி தீவிரம்

தருமபுரி, மார்ச் 25- கோடை காலம் தொடங்கியதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் பழுதான போர்வெல்  பம்ப்புகள் சீர்செய்யும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி, 10  பேரூராட்சி, 251 கிராம ஊராட்சிகள் உள் ளன. இப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப் பாட்டை போக்கும் வகையில், ஒரு கிரா மத்திற்கு ஒரு போர்வெல் வீதம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த பம்ப்புகள் பெரும்பா லும் நீரோட்டம் கொண்ட கால்வாய், ஏரி கரை யோரங்களில் அமைக்கப்படுகிறது. மாவட் டத்தில் நடப்பாண்டு போதிய அளவில் மழை  பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட் டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், அடி  பம்ப்புகளில் தண்ணீருக்கு பதிலாக காற்று தான் வருகிறது. தற்போது, வெயில் கொளுத்தி வரும் நிலையில் தண்ணீர் தட் டுப்பாடு தலை தூக்கியுள்ளது. இதைய டுத்து, போர்வெல் பம்ப்புகளை ஆழப்படுத்தி,  கூடுதலாக போர்வெல் போடப்பட்டு வரு கிறது. தடங்கம் ஊராட்சி பெருமாள்மேடு பகுதி மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே உள்ள ஆழ் துளை கிணறுகளை ஆழப்படுத்தி கூடுத லாக போர்வெல் பம்ப்புகள் அமைக்கப் பட்டது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர்கள் கூறுகையில், தருமபுரி மாவட் டத்தில் ஆயிரக்கணக்கான போர்வெல் பம்ப்பு கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து பயன்படுத்துவதால், பல பகு திகளில் போர்வெல்கள் பழுதடைந்துள்ளது. கோடை காலம் தொடங்கிய நிலையில், நிலத் தடி நீர் கீழே சென்று விட்டது. இதனால், தண்ணீர் வருவதில்லை. கோடை காலத்தை  சமாளிக்க பழுதடைந்த போர்வெல் பம்ப்புகள்  சீரமைக்கப்பட்டு வருகின்றன, என்றனர்.

ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம்

ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம் சேலம், மார்ச் 25- வடமாநில மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான  ஹோலித் திருவிழா சேலம் மாநகரில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. சேலத்தில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் சேலம் பழைய பேருந்து நிலையம் நாராயணன் நகர் பகுதி யில் ஹோலிப் பண்டிகையை வட மாநிலத்தவர்களால் விமர் சையாக கொண்டாடினர். வண்ணப்பொடிகளை தூவி ஒரு வருக்கொருவர் ஒருவர் இணைந்து கொள்ளும் நிகழ்வும் இந்த விழாவில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளில் தண் ணீரை செலவழிக்காமல் வண்ணப் பொடிகளை மட்டும் தூவி  ஹோலி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரூ.2.40 லட்சம் பறிமுதல்

திருப்பூர், மார்ச் 25- திருப்பூரில் உரிய ஆவ ணங்களின்றி கொண்டுவரப் பட்ட ரூ.2.40 லட்சத்தை தேர் தல் பிரிவு அதிகாரிகள் ஞாயிறன்று பறிமுதல் செய்த னர். திருப்பூர் கொங்கு நகர்  பகுதியில் தேர்தல் அதிகாரி கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, அந்த வழியாக வந்த  காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் உரிய  ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1.79 லட்சத்தை  பறிமுதல் செய்தனர்.  அதேபோல, பறக்கும்  படையினர் வாவிபாளையம்  பகுதியில் வாகனச் சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  வந்த காரில் நடத்திய சோத னையில் உரிய ஆவணங்க ளின்றி கொண்டுவரப்பட்ட ரூ.61 ஆயிரத்தைப் பறிமு தல் செய்தனர்.

நலதிட்ட உதவிகள்

நலதிட்ட உதவிகள் திருப்பூர், மார்ச் 25- திருப்பூர் ரோட்டரி சங்கம்  சார்பில் அரசு சுகாதார நிலை யம், அரசு பள்ளி ஆகியவற் றுக்கு ரூ.4 லட்சம் மதிப்பி லான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பூர் ரோட்டரி சங்கம்  சார்பில் திருப்பூர் மாஸ்கோ  நகர் அரசு உயர்நிலைப் பள் ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பி லான உபகரணங்கள், வஞ்சி பாளையம் அன்னை தெரசா  இல்லத்துக்கு ரூ.20 ஆயிரம்  மதிப்பிலான உபகரணங் கள், நெருப்பெரிச்சல் ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பி லான மருத்துவ உபகரணங் கள், திருமுருகன்பூண்டியில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் மரக் கன்றுகள் வளர்க்கும் திட் டம், பாலிடெக்னிக் மாணவர் கள் 2 பேருக்கு தலா ரூ.35  ஆயிரம் கல்வி உதவித்  தொகை, 15 மாணவர்க ளுக்கு கல்வி ஊக்கத் தொகை தலா ரூ.1000, ரோட் டரி பள்ளி மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ரூ.36  ஆயிரம், இதயம் அறக்கட்ட ளைக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி திருப்பூர், மார்ச் 25- சேலம் மாவட்டம், குரால்  நத்தம் மலை கிராமத்தைச்  சோ்ந்தவர் ஏ.மணிகண்டன் (30). கடந்த சில ஆண்டுக ளாக வெள்ளக்கோவிலில் தங்கி கிரேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.  இந்நிலையில், வெள்ள கோவில் அரசு கால்நடை மருந்தகம் அருகே சனிக்கி ழமை சாலையைக் கடக்க  முயன்றபோது, கரூரில் இருந்து வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதி யது. இதில், சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விதைகளை பரிசோதனை செய்ய அழைப்பு

விதைகளை பரிசோதனை செய்ய அழைப்பு நீலகிரி, மார்ச் 25- நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை விநியோ கஸ்தர்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை பரிசோதனை செய்து கொள்ள விதைப்பரிசோதனை நிலையம் கேட்டு கொண்டுள்ளது.  உதகை விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவ லர் நவீன் கூறுகையில், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும்  விதை விநியோகஸ்தர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை, தோட்டக்கலை இணை இயக்குநர் வளாகத்தில்  அமைந்துள்ள விதைப் பரிசோதனை நிலையத்தில், கொடுத்து விதைப்பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்நிலையத்தில் விதையின் தர நிர்ணய காரணிகளான முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் போன்றவை பரி சோதனை செய்யப்படுகின்றன. ஒரு பணிவிதை மாதிரிக்கு  ரூ.80 மட்டும் பரிசோதனை கட்டணமாக செலுத்தி பயிர், ரகம்,  குவியல் எண் ஆகியவை குறித்த விபர சீட்டுகளை கொடுத்து, விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம். விதை பரிசோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பிரதான  காய்கறிகளுக்கான பணிவிதை மாதிரியின் குறைந்தபட்ச அளவு கேரட், காலிப்ளவர் மற்றும் முட்டைகோஸ் 10 கிராம்,  பீட்ரூட், முள்ளங்கி 50 கிராம், பீன்ஸ் 450 கிராம், பட்டாணி 250  கிராம், பாலக்கீரை 25 கிராம், ப்ரொக்கோலி, நூல்கோல் மற்றும் டர்னிப் 10 கிராம் ஆகும். இவ்வாறு பயிருக்கேற்ப குறைந்தபட்ச பணிவிதை மாதிரியை கொடுத்து விதைப் பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும், விதையின் தரத்தை அறிந்து விதைப்பதன் மூலம் தரமற்ற விதை யினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இருவேறு இடங்களில் தீ விபத்து

இருவேறு இடங்களில் தீ விபத்து கோவை, மார்ச் 25- கோவை ஆவாரம்பாளையம் லட்சுமிபுரம் பகுதியில் கார்களை சர்வீஸ் செய்து தரும் ஒர்க் ஷாப் உள்ளது. அங்கு  ஏற்கனவே இரண்டிற்கு மேற்பட்ட கார்கள் சர்வீஸ் செய்து  கொண்டிருப்பதால், சர்வீஸிற்கு வந்த மற்ற கார்களை ஒர்க்ஷாப் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள காலி இடத்தில்  நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் ஞாயிறன்று காலி  இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார், தீடீரென தீப்பிடித்து  எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், கோவை தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத் தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர். இதனால் தீ அருகே நின்று கொண்டிருந்த மற்ற  காரில் பரவாமல் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவை காட்டூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், காய்ந்த  புற்களில் பொதுமக்கள் சிலர் தீவைத்ததால், அந்த தீ காரி லும் பரவியது விசாரணையில் தெரியவந்தது. ஈரோடு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்ப குதியில் காட்டு தீ பரவி வருகிறது. இதனால், வனப்பகுதி யில் உள்ள வனவிலங்குகள் நீரின்றி பாதிப்புக்கு உள்ளாகி  வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டுத் தீயும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், பிதர்க் காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட மழவன் சேரம்பாடி பகுதியில்  வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் வன நிலங்கள் எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று வனத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம்

கோவை, மார்ச் 25- கோவையில் ஹோலிப் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோடையை வரவேற்று, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.  பாரம்பரிய  பண்டிகைகளில் ஒன்றான இந்த ஹோலிப் பண்டிகையின் போது வண்ண வண்ண பொடிகளை ஒருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டு நடனமாடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.  இந்த நிலையில், நடப்பாண்டில் திங்களன்று ஹோலிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவை சுக்கிர வார்பேட்டை, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், வெரைட்டிஹால் ரோடு, சாய்பாபாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் வடஇந்தியர் கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள், ஹோலிப் பண்டி கையை கோலாகலமாக கொண்டாடினர். அப்போது அவர் கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்க ளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாடல்கள் பாடி பாரம் பரிய நடனமாடினர். இதில், குழந்தைகள், பெண்கள், வயதா னர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும், அனைத்து மக்களின் சுமையும் குறையும் - கே.இ.பிரகாஷ் நம்பிக்கை

ஈரோடு, மார்ச் 25- இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையும்போது, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்க ளின் சுமையும் குறையும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா கூட்டணியின் சார்பில்,  ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வேட்புமனு தாக்கல்  செய்தார். அதன் பின்னர் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  நாடு முழுவதும், இந்தியா கூட்டணி 450 இடங்களில் வெற்றி  பெறும் என சர்வே முடிவுகள் சொல் கிறது. மாவட்ட கழகச் செயலாள ரும், அமைச்சருமான அண்ணன் முத்துசாமியுடன் இணைந்து ஈரோட் டின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். அதேபோல் திருப்பூர் மாவட்டத் தில் அமைச்சர் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் மதிவேந்தன் ஆகியோருடன் இணைந்து தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக் கும். இந்த நாடாளுமன்ற தேர்தல்  அறிக்கையும் அவ்வாறு அமைந் துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி  அமைந்தவுடன் சமையல் சிலிண் டர் விலை ரூ.500 என்பதற்கான முதல் கையெழுத்து இடப்படும் எனக் கருதுகிறேன். டீசல் விலை  குறைந்தால் மொத்த விலைவாசி யும் குறையும். விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்க ளின் சுமையும் குறையும் என்று  நம்பிக்கை தெரிவித்தார். இப்பேட் டியின் போது, வழக்கறிஞர் அணி நிர்வாகி சு.ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கா.சின்னையன், ஆர்.செந்தில்கு மார், மாவட்ட பொருளாளர் பி.கே. பழனிசாமி மற்றும், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

வெள்ளியங்கிரி மலையில் 3 பேர் பலி

கோவை,மார்ச். 25- வெள்ளியங்கிரி மலைக் கோயிலுக்கு சென்றிருந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆன்மிகத் தலங்களில் ஒன்று வெள்ளியங்கிரி மலை. கோவை மாநகரிலிருந்து 40 கிலோ மீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது. வெள்ளி யங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி  கோயிலில் இருந்து சுமார் 3,500 அடி உயரம்  உடைய 7 மலைகளைத் தாண்டி சென்றால், உச்சியில் சுயம்பு சிவன் கோயில் உள்ளது. இரவில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்றாலும், பங்குனி மாதத்தில் இந்த மலைக்கு இரவு நேரங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்கின்ற னர். இந்த மலைகளை ஏறுவதற்கு பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக் கானோர் வெள்ளியங்கிரி மலை ஏறுவதை  வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனி டையே உடல் நலக் கோளாறுகள் மற்றும்  மலைகளுக்கு மேலே நிலவும் கடுமையான  குளிர் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாடு காரண மாக அவ்வப்போது உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று ஹைத ராபாத்தை சேர்ந்த சுப்பாராவ்(68) என்பவர்  4 ஆவது மலையில் நடந்து கொண்டிருந்த போது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு  உயிர் இழந்தார். இதே போல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவரும் முதலா வது மலையிலேயே உடல்நிலை பாதிக்கப் பட்டு உயிர் இழந்தார். சுமை தூக்கும் தொழி லாளர்களின் உதவியுடன் இருவரது உடல்க ளையும் மீட்டு வனத்துறையினர் மலையடி வாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர்  இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் திங்களன்று அதிகாலை தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை பகு தியைச் சேர்ந்த பாண்டியன்(40) என்பவர்  நண்பர்களுடன் மலையேறிக் கொண்டிருந்த போது, திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு  உயிரிழந்தார். அவரது உடலையும் அடிவா ரத்துக்கு கொண்டு வந்த வனத்துறையி னர், பின்னர் போலீஸார் மூலம் கோவை  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் அடுத்த டுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம்  வெள்ளியங்கிரி மலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகை யில், இதயக் கோளாறு உள்ளவர்கள், சுவா சக் கோளாறுகள் உள்ளவர்கள், ரத்த அழுத் தம் அதிகம் இருப்பவர்கள் மலை ஏறுவதை  தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

பிஎஸ்ஜி டிரஸ்ட்டியிடம் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மோசடி

கோவை, மார்ச் 25- தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்த இரண்டு பொறியாளர்கள் கைது  செய்யப்பட்டனர். கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர்  ஜி.சி.சிவராஜ் 40). இவர் தொழில் அதிபரா கவும், பிஎஸ்ஜி நிறுவனத்தின் அறங்காவலரா கவும் உள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு  இவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை  செய்ததற்கு ரூ.5 கோடி ரூபாய் அபராதம்  செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கப் பட்டது. இதை கையாண்டு முடித்துக்கொடுப் பதற்காக சேலத்தைச் சேர்ந்த அஸ்வின்கு மாரை, சிவராஜ் அனுகியுள்ளார். பின்னர் வரு மானவரித்துறை கணக்குகளை கையாள  அஸ்வின்குமாருக்கு தெரிந்த பொறியா ளர்களை யர்களான வசந்த், சிவக்குமார் ஆகி யோரை சிவராஜ் தனது அலுவலக்த்தில் நியமித்துள்ளார். அதன்பின்னர், வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என அஸ்வின்குமார் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால், ரூ.10  கோடியை, அஸ்வினின் வங்கி கணக்கிற்கு  சிவராஜ் அனுப்பியுள்ளார். அந்தத் தொகையை அஸ்வின்குமார் வருமானவரித் துறை அலுவலகத்திலும், செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். மேலும், அஸ்வின்குமார் 13 பேர் கொண்ட  கும்பலை சேர்த்துக் கொண்டு சிவராஜுக்கு சொந்தமான கோவில்பாளையம், பொள் ளாச்சி, அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை  பவர் பெற்று போலி ஆவணம் தயார் செய்து  மோசடி செய்துள்ளார். இந்த சொத்துக்க ளின் மதிப்பு, சுமார் ரூ.300 கோடி இருக்கும்  என கூறப்படுகிறது. இதையடுத்து, தான் மோசடி செய்யப்பட் டதை அறிந்த சிவராஜ், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கோவை  மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணை யர் மனோகரன் விசாரணை நடத்தினார்.  கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த  போலீசார், தொழில் அதிபரின் அலுவலகத் தில் வேலை செய்து, மோசடிக்கு உதவியாக  இருந்து வந்த வசந்த் மற்றும் சிவக்குமாரை  கைது செய்தனர். மேலும், இந்த மோசடியில்  தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி யான அஸ்வின்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

சுற்றுலா வந்த பயணியின் பணம் பறிமுதல் பறக்கும் படையினரிடம் கண்ணீர் விட்ட பெண்

உதகை,மார்ச் 25- பறக்கும் படையினர் வாகன சோதனையில். பஞ்சாப்பில் இருந்து சுற்றுலா வந்த பெண்ணிடம் 69 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அப்பெண் கண்ணீர் விட்ட அழுததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற  தேர்தலையொட்டி பறக்கும் படையினர் குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய  நெடுஞ்சாலையில் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது, அந்த வழியாக வாடகை கார் வந்தது.  அந்த வாகனத்தில் பஞ்சாப்பை சேர்ந்த  சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அவர் களிடம் விசாரித்த போது, பஞ்சாப்பில்  இருந்து உதகைக்கு சுற்றுலா வந்ததா கவும், இதற்காக கோவை விமான நிலை யம் வந்து, அங்கிருந்து வாடகை காரில்  இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் வாக னத்தை சோதனை நடத்தினர். அப் போது அவர்களிடம் ரூபாய். 69 ஆயி ரத்து 400 இருந்தது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை பறிமுதல் செய்த தும், அவ்வாகனத்தில் இருந்த பஞ் சாப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், நாங் கள் இங்கு சுற்றுலாவுக்கே வந்தோம்.  எங்களுக்கு இவ்வளவு பணம் கொண்டு  வரக்கூடாது என்று தெரியாது. இதை வைத்து தான் நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும். எங்களது  பணத்தை திருப்பி தந்து விடுங்கள் என்று  கூறி கதறி அழுதார். இருப்பினும் அதி காரிகள் உரிய ஆவணங்களை காண் பித்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்து பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். பின்பு அந்த சுற்றுலாப் பயணிகள் வேறு  வழியின்றி, தங்களுடைய நண்பர் ஒரு வருக்கு போன் செய்து, அவரிடம் பணம்  வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இதுகுறித்து பொது மக்கள் கூறுகை யில், பறக்கும் படை சோதனை யில் பொதுமக்கள்தான் பாதிக்கப்படு கின்றனர். எனவே சிறு, குறு வியாபா ரிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மருத் துவ செலவுக்காக பணம் எடுத்து செல் பவர்களிடம் இருந்து பணத்தை பறிமு தல் செய்யாமல் இருக்க தேர்தல் அதி காரிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், இதுபோன்ற பறிமுதல் நடவ டிக்கையின்போது, பணத்தை கொண்டு  வந்தவர்கள் குறித்து உண்மைத் தன்மை அறிந்து மனிதாபிமான அடிப் படையில் நடந்து கொள்ள வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் அலுவலகம் திறப்பு 

தேர்தல் அலுவலகம் திறப்பு  கோவை,மார்ச் 25- பொள்ளாச்சியில் இந்தியா கூட்டணி சார்பில் மக்க ளவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வர சாமியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது.  இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கே.ஈஸ்வரசாமி போட்டி யிடுகிறார். இதனைத்தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டம், மக்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகி றது. இதன்ஒருபகுதியாக, பொள்ளாச்சியில் தேர்தல் அலுவ லகம் திறப்பு விழா நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸவரசாமி முன்னிணி வகித்தார். தெற்கு மாவட்ட  திமுக செயலாளர் இல.பத்மநாபன் தேர்தல் அலுவலகத் தில் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர் கயல் விழி செல்வராஜ், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பொள்ளாச்சி நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.ஆர்.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் அன்பரசன், தாலுகாக்குழு உறுப்பினர் மகாலிங்கம், காங்கிரஸ் கட்சி யின் பகவதி, சிபிஐ சண்முகம் மற்றும மதிமுக, விசிக, கொமதேக, மதேக, மமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

பாஜக மாவட்டத் தலைவர் மீது வழக்கு

பாஜக மாவட்டத் தலைவர் மீது வழக்கு கோவை, மார்ச் 25- தேர்தல் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் பாஜக கொடிகளை கட்டியதாக பாஜக கோவை மாவட்டத் தலை வர் ரமேஷ் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ஆம்  தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து  கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ் வாறு பிரச்சாரத்தில் ஈடுபடுவோர், தேர்தல் நடத்தைகளை பின்பற்ற வேண்டும் என்பதே, விதிமுறை. இந்நிலையில், கோவை கணபதி பகுதியில், அனுமதியின்றி கட்சிக்கொடி கட்டியதாக காவல் நிலையத்தில், தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் மீது சரவணம்பட்டி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சேலம், மார்ச் 25- சேலத்திலுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 822 மாணவர்க ளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வள்ளியப்பா கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சோனா  கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா, துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குழந்தை வேலு, பெங்களூரு டெசோல்வ் செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் வீ. வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து 2020 - 2023 ஆம் கல்வியாண்டில் பயின்ற 822 மாணவர்களுக் கும், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களும் பட்டங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலின்போது அதிமுக - பாஜக மோதல் தடியடி நடத்தி கலைத்த உதகை காவல்துறை

உதகை, மார்ச் 25- வேட்புமனு தாக்கல் செய்ய ஒதுக்கப் பட்ட நேரத்தில் வராமல், தாமதமாக வந்த  பாஜகவினர் தங்களை அனுமதிக்க வேண் டும் எனவும், குறித்த நேரத்தில் வந்த அதிமுக வினர் தங்களைத்தான் அனுமதிக்க வேண் டும் என இருதரப்பினரும் மோதிக்கொண்ட தால், கூட்டத்தை கலைக்க போலீசார் லேசாக தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி போட்டியி டும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல் வன் ஆகியோர் திங்களன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். இந்நிலையில், இப்பேரணி தீயணைப்புத் துறை அலுவலக முன்பு சென்று கொண்டிருக் கும் போது, பாஜக பிரச்சார வாகனத்தின் ஒட்டு நரை அதிமுகவினர் தாக்கியதாக கூறப்படு கிறது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில், இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். பின்னர், இது முற்றி கைகலப்பாக மாறி யதால் பெரும் மோதல் சூழல் உருவானது. அப்போது, காவல்துறை அதிகாரிகள், பாஜக வினரிடம் நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வரவில்லை. அவர்கள் ஒதுக்கிய நேரத்தில் வந்துள்ளார்கள், ஆகவே அவர் களை அனுப்பிவிட்டு, உங்களை அனுப்புகி றோம் என சமாதானப்படுத்தினர். ஆனால்,  பாஜகவினர், அதிமுக கூட்டத்தை பார்த்து  முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு அதி முகவினரும் முழக்கங்களை எழுப்பினர். இத னையடுத்து, கூட்டத்தை கலைக்க இரு கட்சி யினர் மீதும் காவல்துறையினர் லேசான தடி யடி பிரயோகம் நடத்தினர். இதனையடுத்து, பாஜக வேட்பாளர் எல். முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை  ஆகியோர் தலைமையில் பாஜகவினரும், மறுபுறத்தில் அதிமுகவினரும் ஆட்சியர் அலு வலகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை  உள்ள பகுதி என்பதால், அவசர சிகிச்சைக் காக நோயாளிகள் வந்த ஆம்புலன்சும் சிக்கிக் கொண்டது. இதனால் பொதுமக்கள் நேரிடை யாக களத்தில் இறங்கி, ஆம்புலன்சை மீட்டு  அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறு கையில், உங்களுக்கு சேவை செய்கிறோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று எங்களி டம் வருகிறார்கள். ஆனால், வேட்புமனு தாக் கல் செய்வதற்கே இவர்களுக்கு பொறுமை  இல்லை. ஆம்புலன்ஸ் சிக்கியுள்ளதே, அதற்கு  வழிவிட வேண்டும் என்கிற கொஞ்சம்கூட சுய சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள். பல ரும், குடிபோதையில் இருந்தனர். வழியில்  சென்ற மக்களிடம், போலீசாரிடம் எல்லாம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையெல் லாம் இந்த கட்சிகளின் தலைவர்கள் பார்த்துக் கொண்டேதான் இருந்தார்கள். ஒருவரும் தடுக்கவில்லை என்று பொறுமித்தள்ளினர். இந்நிலையில், குடிபோதையில் இருந்த  தொண்டர்கள் சிலர் அருகில் இருந்த குழி யில் விழுந்தனர். போலீசாரின் தடியடி மற்றும் குழியில் விழுந்து காயம் ஏற்பட்டது. இதில், 14 பேர் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர், மேலும், 5 பேர் பலத்த காயங்களு டன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

அதிமுகவிற்கு தாவிய பாஜக மாநிலச் செயலாளர்

கோவையில் அண்ணாமலை போட்டியிடுகிற நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாரும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப் பாளருமான கோவையைச் சேர்ந்த செல்வ பிரபு அதிமுகவிற்கு தாவியது, பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் உள்ளூரில்  பாஜகவினருக்கு வாய்ப்பு தராமல், கரூ ரைச் சேர்ந்த பாஜக மாநில தலைவர்  அண்ணாமலைக்கு வாய்ப்பு தந்ததால் கோவை மாவட்ட பாஜகவில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்க ளுக்கு மேலாக அண்ணாமலை செயல் வீரர்கள் கூட்டம் நடத்திக்கொண்டிருக் கையில், ஒரு இடத்தில்கூட பாஜகவின் மகளிர் அணியின் தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானசி ஸ்ரீனிவசான் தென்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்,  பாஜக தகவல் தொழிற்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான செல்வபிரபு கோவை இதயதெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது பாஜக வின் மாவட்ட தலைமைக்குள் பெரும்  புகைச்சல் ஏற்பட்டுள்ளது வெளிச்சத் திற்கு வந்துள்ளது.

உதகை, மார்ச் 25- ரூ.1.32 கோடி பறிமுதல்

உதகை, மார்ச் 25- ரூ.1.32 கோடி பறிமுதல் தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியான நாளில் இருந்து திங்களன்று வரை வாகன சோதனையில் 68 பேரிடம் ரூபாய். 1.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி ஆகிய 6 சட்டமன்ற  தொகுதிகளுக்கு, தலா 3 என மொத்தம் 18  பறக்கும் படைகள், 18 நிலை மற்றும் நகரும் கண்காணிப்புகுழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர் தல் ஏப்.19 ஆம் தேதியன்று துவங்கி 7 கட்ட மாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.  அறிவிப்புகள் வெளியான அன்றைய தினம்  முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அம லுக்கு வந்தது. மேலும் வாகன சோதனை  கடந்த 6 நாட்களாக ஆவணமின்றி கொண்டு சென்ற 68 பேரிடம் ரூ.1.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தி லிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திங்க ளன்று தொகுதி வாரியாக பிரித்து அனுப் பும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் ரா.பிருந்தா தேவி ஆய்வு செய்தார். மொத்தம் கணினி உதவியுடன் 3,936 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,936 கட்டுப் பாட்டு இயந்திரங்கள், 4,260 வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிர மணியன், உதவி தேர்தல் நடத்தும்  அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உடனி ருந்தனர்.