districts

img

220 ஆண்டு கால கல்வெட்டை பாதுகாக்க கோரிக்கை

உடுமலை, ஏப்.23 - உடுமலை அருகே உள்ள 220  ஆண்டு கால கல்வெட்டை பாது காக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு  செப்டம்பர் 7ஆம் தேதியன்று  உடு மலை அருகே உள்ள தளி பாளை யப்பட்டு மலையாண்டி வெங்கிடு பதி எத்தலப்பருக்கு தமிழ்நாடு அர சால் ரூ.2 கோடியே 62 லட்சத்தில் அரங்கமும்,  உடுமலை நகராட்சி வளாகத்தில் தளி எத்தலப்பரின் உருவச்சிலையும் வைக்க உத்தர விடப்பட்டது. ஆனால், தளி பாளையப்பட்டு மலையாண்டி வெங்கிடுபதி எத்த லப்பர் வீரத்துக்குச் சான்றாக விளங் கும் அந்திரை கேதீசு எனும் ஆங்கி லேயரைத் தூக்கிலிட்ட  நினைவுக் கல்வெட்டு தளி பேரூராட்சி பகுதி யில் சான்றாக இருக்கிறது. இதை தமிழ்நாடு அரசிற்கும், தொல்லியல் துறைக்கும் ஆவணப் படுத்த உரிய சான்றுகளுடன் விண் ணப்பங்கள் அனுப்பப்பட்டன.  அந்திரை கேதீசு இருக்கும்  கல்ல றைக்குண்டான  அரசு சான்றிதழ் களும் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பிலும், செய்தித்துறை சார் பிலும் பல முறை வந்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இதுநாள் வரை எவ் வித நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.  தொல் லியல் துறையின் மண்டல அலு வலர் கடந்த ஆண்டும், அதற்கு  முந்தைய ஆண்டும் நேரில் வந்து  பார்த்து ஆய்வு செய்து அரசுக்கு  உரிய பரிந்துரைகள் அனுப்பி யதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தளி பாளையப்பட்டு மலையாண்டி வெங்கிடுபதி எத்த லப்பர்  நினைவு அரங்கத்திற்கும், சிலைக்கும் ஒதுக்கிய தொகை யில் அந்திரை கேதீசின் கல்லறை யும் பராமரிக்கப்படும் என்று தகவல்கள் வந்தன. ஆனால், ஏப்ரல் 23 அந்திரை கேதீசு எனும்  ஆங்கிலேயரைத் தூக்கிலிடப் பட்ட நாள் என கல்வெட்டில் உள்ளது.  இதன்படி, இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒரு  ஆங்கிலேயரை, தமிழ் மன்னன்  தூக்கிலிட்டார் என்ற வீரத்தைப்  பறைசாற்றும் வகையில்,  இந்தக் கல்வெட்டு உள்ள பகுதியை  கம்பிவேலிகள் அமைக்கப்பட்ட  பாதுகாத்து அடுத்த தலை முறைக்குத் தெரியப்படுத்தும் வகையில் ஆவண செய்ய வேண் டுமென உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.