தருமபுரி, மே 23- பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதிலும், பாதுகாப்பதிலும் செங்கொடி இயக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு என தருமபுரியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் ஜி.சுகு மாறன் பெருமிததுடன் தெரிவித்தார். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். நலவாரிய குளறுபடிகளை களைய வேண்டும். குறைந்தபட்ச ஊதி யமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியுவினர் தமிழ்நாட்டின் 7 முனைகளிலிருந்து திருச்சியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்ற னர். அதன் ஒரு பகுதியாக ஒசூரிலிருந்து துவங்கிய நடைபயணக்குழு தருமபுரி மாவட்டம் வந்தடைந்தது. பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற பிரச்சார விளக்க பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் பேசுகையில், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, காலிப் பணியிடங்களை கூட பூர்த்தி செய்யா மல் காலம் கடத்தி வருகிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், வங்கி முன்பும், ஏடிஎம் மிஷன் முன்பும் மக்கள் காத்திருந்து, பலர் உயிரிழந்த னர். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்துள் ளது. இந்திய பொருளாதாரம் உயரும் என்று மோடி அரசு கூறிய நிலையில், உலக பட்டினி சாவு பட்டியலில் இந் தியா முன்னிலை வகிக்கிறது. ஏழை மக்கள் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை; மாறாக கார்ப்பரேட் நலனுக் காகமட்டுமே பிரதமர் மோடி செயல் பட்டு வருகிறார்.
1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்தி ரம் அடைந்த பிறகு, பொதுத்துறை நிறு வனங்களை உருவாக்கியதிலும், பாது காப்பதிலும், செங்கொடி இயக்கத் திற்கு பெரும் பங்கு உள்ளது. குறிப்பாக சேலம் இரும்பு உருக்காலை, நெய் வேலி பழுப்பு நிலக்கரி ஆலை, திருச்சி பெல் போன்ற பொதுத்துறை நிறு வனங்களை செங்கொடி இயக்கம் பாது காத்து வருகிறது. பொதுத்துறை நிறுவ னங்களை பாதுகாக்கவில்லை என்றால் தலித், பழங்குடியின, பட்டியலின மக் கள் உள்ளிட்ட இடஒதுகீட்டு பிரிவின ருக்கு சமூக நீதி கிடைக்காது. எல்லா துறைகளிலும் தொழிலாளர் உழைப்பு சுரண்டல் நடக்கிறது. இதனை சிஐடியு எதிர்த்து போராடுகிறது. மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பாஜ கவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது. அதற்காக அனைத்து உழைக்கும் வர்க் கமும் ஒன்றிணைய வேண்டும், என் றார். இதில், சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயி னார், சாலை போக்குவரத்து சம்மேளன துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர்கள் பி.ஜீவா (தருமபுரி), என்.ஸ்ரீதர் (கிருஷ் ணகிரி) உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினார். இதன் தொடர்ச்சியாக செவ்வா யன்று பாப்பாரப்பட்டிக்கு வந்த பய ணக்குழுவி்ற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், பேரூராட்சி கவுன்சிலருமான வே.விஸ்வநாதன், பகுதி செயலாளர் ஆர்.சின்னசாமி, விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர்கள், வாலிபர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்பின் சுதந்திர போரட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவ ரது நினைவிடத்தில் சிஐடியு நடை பயணக்குழுவினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் பி.கிருஷ்ணன் மற்றும் சிஐடியு தலை வர்கள் உள்ளிட்ட ஏராமானோர் உடனி ருந்தனர்.