உடுமலை, ஏப்.29- திருவிழாவை ஒட்டி குட்டை திட லில் அமைக்கப்பட்ட பொருட் காட்சி பொதுமக்களை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், பொருட் காட்சி நடத்தும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி யும் உடுமலை வருவாய் கோட் டாட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்க மிட்டியின் செயலாளர் தண்ட பாணி அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, உடுமலையில், கடந்த 16 ஆம் தேதி முதல் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழா நிறைவாக கடந்த வியாழக்கிழமை திருத்தே ரோட்டம் சிறப்பாகவும், அமைதியா கவும் நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவை ஒட்டி உடுமலை குட்டை திடலில் பொதுமக்களுக்கான பொருட் காட்சி அமைக்கப்பட்டன. அங்கு, கேளிக்கை நிகழ்ச்சிகள், உணவுக் கூடங்கள், விளையாட்டு பகுதிகள் மற்றும் குளிர்பானக் கடைகள் செயல் பட்டு வருகின்றன. ஆனால், அவை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அற் றதாக உள்ளது. அதாவது, திருவிழாவில் கொண்டாட்ட மனநிலையோடு குட்டை திடலுக்குள் நுழையும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த மனவேதனையுடன் திரும்பு கிறார்கள். காரணம் பெரிய ராட்டி னம் (ஜெயின் வீல்) சுற்ற ஒரு நப ருக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு சிறியகுடை ராட்டினம் ரூ.75 என்று விலை கட் டணம் வசூல் செய்யப்படுகிறது, தின்பண்டங்கள் மற்றும் குளிர் பானங்கள் நிலையும் அப்படித்தான் இது தவிர சுகாதார வசதி போது மானதாக இல்லை. மேலும் இங்கே விற்கப்படும் உணவுப் பொருள்கள் மிகவும் தரமற்றதாக, உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியதாக உள்ளன. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை யும் மேற்கொள்ளாமல் இருந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இத னால் மக்கள் வெகுவாக பாதிக்கின் றனர். அதுமட்டுமின்றி, ராட்டினங்கள் எவ்வித பாதுகாப்பு இல்லாமலும், வழிமுறைகளை பின்பற்றாமலும், அமைக்கப்பட்டு இருந்தன. இதில் விளையாடிய ஒருவர் தனது குழந்தை மற்றும் மனைவியுடன் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து பலத்த காயமுற்று மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, குட்டை திடலில் பாது காப்பு குறைபாடு காரணமாக தவறி விழுந்து காயமடைந்த பொது மக்க ளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும். விபத்துக்கு காரணமான ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண் டும். இனி வரும் காலங்களில் குட்டை திடலில் ராட்டினங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்பு அமைத்திட வேண்டும். அதேபோல் உணவு விற்பனை நிலையங்கள் தகுந்த சுகாதாரத்துடன் விற்பனை செய் யப்படுகிறதா என்று கண்காணித் திட வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.