நாமக்கல், மே 17- அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்பவர்களுக்கு, இலவசமாக பிரியாணி வழங்கும் நூதன பிரச்சா ரத்தை தனியார் உணவகத்தினர் மேற் கொண்டிருப்பது அனைவரின் கவ னத்தை ஈர்த்துள்ளது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை கொடுப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் செயல்படும் தனியார் உணவகத்தில், குருதிகொடை செய்பவர்களுக்கு தினமும் பிரியாணி வழங்கபடும் என உணவக உரிமையாளர்கள் புதுமையான அறிவிப்பு வெளியிட்டனர். BBQ MAFIA என்ற ஹோட்டல் உரிமையாளர் நவின் என்பவர் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில், ரத்தக் கொடையாளர்களுக்கு தினம் தோறும் பிரியாணி வழங்கப் படும் என அறிவித்துள்ளார். இதன்ஒருபகுதியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இரத்ததானம் செய்த ஐந்து பேருக்கும், சங்ககிரி ரோட்டில் உள்ள ஹோட்டலில், பிரியாணி வழங்கப்பட்டது. ஹோட்டல் உரிமையாளரின் இந்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.