districts

img

பொது பாதையை ஆக்கிரமித்த தனியார் கல்லூரி

கோவை,பிப். 24- பொதுப் பாதையை ஆக்கிரமித் துள்ள தனியார் கல்லூரி மீது மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். கோவை மாவட்டம் மதுக்கரை வட்டத்தில் உள்ள அறிவொளி நகர்  பகுதியில் புல எண் 987/1, 987/3  மற்றும் 1182 உள்ளிட்ட 40 ஏக்கர் நிலத் தில் விவசாயம் நடைபெற்று வருகி றது. விவசாயிகளின் நிலத்திற்கு செல் லும் அரசால் அங்கீகரிப்பட்ட பொது  வழித்தடத்தை ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி  நிர்வாகத்தினர் தடுப்பு சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள னர். இதனால், விவசாயிகள் விளைநி லங்களுக்கு சென்று விவசாயம்  பண்ண முடியாத சூழல் உள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத் தின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரும் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் சங்க மதுக்கரை தாலுகா செயலாளர் எஸ்.சி.சண்முகம் கூறுகையில், விவ சாயிகளின் பிரச்சனைகள் சம்பந்த மாக மதுக்கரை வட்டாட்சியர் அலுவ லகத்தில் பலமுறை மனு அளித்துள் ளோம். நில அளவையர் வந்து அப்ப குதியில் ஆய்வு செய்தும் நில அளவை செய்து விவசாய நிலத்திற்கு செல் லும் வழித்தடத்தை உறுதி செய்துள் ளனர். இருப்பினும் கல்லூரி நிர்வா கம் அடாவடியாக ஆக்கிரமிப்பை அகற்றாமல் உள்ளது. புதிகாக வந்த  வட்டாசியரிடமும் இக்கோர்க்கை சம் மந்தமாக மனு கொடுத்தோம். அவ ரும் நேரில் வந்து ஆய்வு செய்தும் நில அளவையரை அனுப்பி அளவீடு  செய்தும் விவசாயிகளுக்கு தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு வருட காலமாக பொதுவழித்தடம் இன்றி விவசாயி கள் அவதிப்படுகின்றனர். உடனடி யாக தமிழக அரசு தலையிட்டு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என் ன்றார்.