districts

img

மணிப்பூர் வன்முறையை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து சமூக நல்லிணக்க மேடை

மணிப்பூர் வன்முறையை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து சமூக நல்லிணக்க மேடை சார் பில் தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட ஒருங் கிணைப்பாளர் தனுஷன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மமக மாவட்டத் தலைவர் சுபேதார், தமுமுக மண்டலச் செயலாளர் நசீர், அருட்தந்தை ராமன், விசிக மண்டலச் செயலாளர் பொ.மு.நந்தன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் விடுதலை தமிழ்செல்வன், தலைவர் சமரசம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.