உடுமலை, டிச. 28- உடுமலைப்பேட்டையில் நரிக்கு றவர் சமூகத்தைச் சேர்ந்த நபரை, 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடு மலையை அடுத்த தாந்தோனி பகு திக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் மற்றும் குமார் ஆகியோர் சென்றுள்ளனர். அப்பொழுது, இவர்கள் கோழி திருட வந்ததாக கூறி 8 பேர் கொண்ட கும்பல், இருவரையும் கட்டி வைத்து மரக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்க ளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த செங் கோட்டையன் இறந்துவிட, குமா ருக்கு கோவை அரசு மருத்துவம னையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், கொலை செய்த கும்பலை கைது செய்யக்கோரி நரி குறவர் இன மக்கள் உடுமலை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால், அப்பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது. மடத்துக்குளம் ராஜாவூர் பகுதி களில் தலித் மக்கள் தாக்கப்பட் டது தொடர்பாக, தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் விசாரணை நடத்திய அதே நாளில் மற்றொரு பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.