ஈரோடு, நவ.21- சிப்காட் கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பினை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில், பெருந்துறை சிப்காட் வளாகத் தில் புதிய பொது சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க வேண்டும் என இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக் கையாகும். 10 ஆண்டு கால கோரிக் கையை இப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது முதல் வரிடம் இப்பகுதியினர் மனுவாகக் கொடுத்தனர். இப்பிரச்சனைக்கு முதல்வர் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளனார். சிப்காட் வளா கத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட் டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.40 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அரசு சார்பாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சா லைகளின் சார்பில் ரூ.20 கோடி கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளனர். பணிகள் விரைவில் தொடங்கும். 6 லிருந்து 8 மாதங்களுக்குள்ளாக பணிகள் முடிந்து சுத்திரிகரிப்பு நிலை யம் செயல்பாட்டிற்கு வரும். ஒரு நாளில் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இவ் வாறு உதயநிதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா, நாடாளுமன்ற உறுப் பினர் அ.கணேசமூர்த்தி, மாநிலங்க ளவை உறுப்பினர் அந்தியூர் ப.செல் வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.