districts

img

உடுமலை அருகே பாளையக்காரர்களின் தளபதிகள் வழிபட்ட தாய்த்தெய்வம்

உடுமலை, ஜன.10 - உடுமலை அருகே பாளையத்துக்காரர் களின் தளபதிகள் வழிப்பட்ட தய்த்தெய்வம். இன்று அனைத்து சமூக மக்களும் வழிபடும்  சிறு தெய்வமாக உள்ளது. உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக் குளம், குடிமங்கலம் பகுதிகளில் பாளையக் காரர்கள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள்  அதிகளவில் உள்ளன. 15 ஆம் நூற்றாண் டுக்குப் பிறகு பெருமளவில் இந்தப் பகுதிக ளில் நாயக்கனூர், பாளையம் என்றும் ஊர்ப் பெயர் அமைந்தமைக்கான சான்றுகளை வர லாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை பதிவு செய்துள்ளார். அது போன்று இங்கு துங்காவி ஜமீன்தார்  வாரிசுகள் வைத்திருக்கும் செப்பேட்டுப் பட்ட யங்களில் ஒரு சில செய்திகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. துங்காவி ஜமீன்தார், நெகமம்  ஜமீன்தார், பெரியபட்டி ஜமீன்தார், ஜோத்தம் பட்டி ஜமீன்தார், தளி ஜமீன்தார், ஆவலம் பட்டி ஜமீன்தார், தொண்டாமுத்தூர் ஜமீன் தார், சிஞ்சுவாடி ஜமீன்தார், தாளக்கரை ஜமீன் தரர் என்று பதிவுகள் உள்ளன. மேலும் கோயில்கள் குறித்த பாடல்க ளில் “இம்மைச் செய்தது  மறுமைக்கா மெனும் ஆறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும் சான்றோர்

சென்ற நெறியென ஆங்குப் பட்டன றவன் கைவண் மையே” என் றும் அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.  மேலும்  13 ஆம் நூற்றாண்டில் கொங்குச்  சோழர்களுக்குப் பின் கொங்குப்பாண்டிய ரும் அதன் தென் கொங்கையே  ஆண்டு வந்த னர் என்றும், இந்தக் கோயிலை பாண்டிக்கோ யில் என்றும், தளவாய்கள் வழிபட்ட கோயில்  என்றும் கூறப்படுகிறது. கோயிலுக்கு வெளியே இருக்கும் சிலை யில் பாளையக்காரர் காலத்தில் அரச குடும் பத்தில் உயர் பதவியில் இருக்கும்  தளபதிகள்  வழிபடுவது போன்று புடைப்புச்சிற்பங்கள் இருப்பதை வைத்துப் பார்த்தால், சுமார் 400  அல்லது 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்  பகுதியில் சிற்றரசர்கள் காலத்தில் தளவாய்க ளாக அல்லது தானாதிபதிகளாக  நாயக்கர் இருந்து வரி வசூல் செய்து கொடுத்து பாளை யக்காரர்களாக இருந்துள்ளனர் என்று உடு மலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வா ளர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்தக் கற்கோயில் உள்ள கருப் பக்கிரகத்தில் எட்டுக்கை கொண்ட அம்மன்,  ஒரு கையில் கேடயத்துடனும் ஒரு கையில்  வாளுடனும் இருக்கும் ஒரு தளபதியை தனது  காலில் சம்ஹாரம் செய்வது போன்று இருப் பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய தொன்று என ஆய்வாளர்கள் கருத்து தெரி வித்தனர்.

மக்கள் இதை கருங்காளியம்மன் என்றும், காளியம்மன், வீரமாத்தியம்மன் என் றும் வழிபடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூக  மக்கள் மட்டும் வழிபாடு செய்யாமல் அனைத்து சமூக மக்களும் வழிபாடு செய்து  வருகின்றனர்.தனியாக குல வழிபாடு என்று  செய்வதாக யாரும் வருவதில்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் தன்னார்வத்தோடு இந்தக் கோயிலை அமாவாசை, வெள்ளிக் கிழமை நாட்களில் வழிபாடுகள் செய்து வரு வதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஊருக்கு அருகில் வஞ்சிபுரம் எனும்  பகுதியில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின்  தொல்லியல் துறையால் கல்வெட்டுகள் ஆவ ணப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டது. மேலும் துங்காவி, இராமேகவுண்டன்புதூர், வேட பட்டி, ஜோத்தம்பட்டி போன்ற பகுதிகளில் மாலகோயில் என்னும் பாளையக்கார்களின் வழிபாட்டுச் சின்னங்களும், படிமங்களும் இருப்பதை வைத்துப் பார்த்தால் இது பாளையக்காரர்கள் வழிபட்ட தெய்வம் என்று  உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய் வாளர்கள் முனைவர் முனியப்பன், பாரதி யார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முனைவர் விஜயலட்சுமி மற்றும் உடுமலை அரசு கலைக்கல்லூரி வர லாற்றுப் பேராசிரியர் முனைவர் ம.மதியழ கன், வரலாற்றுப் பேராசிரியர் செ.ராபின் ஆகி யோர் கருத்து தெரிவித்தனர்.