districts

img

ஓமலூர் தின்னர் குடோனில் பெரும் தீ விபத்து

சேலம், ஜூலை 24- ஓமலூரில் செயல்பட்டு வந்த தின் னர் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால், ரூ.10 லட்சம் மதிப்பிலான தின்னர் முழுவ தும் தீக்கிரையாகின. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காமனேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் கடந்த நான்கு ஆண்டு களாக ஓமலூர் நெடுஞ்சாலையில், அண்ணமார் தனியார் விடுதியின் எதிரே உள்ள ஒரு குடோனில் தின்னர் வைத்து  வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் ஞாயிறன்று குடோனை மூடி விட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், திங்களன்று தின்னர் குடோனில் தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓமலூர் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர் கள், சுமார் 15 அடி உயரம் வரை எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முற் பட்டனர். ஆனால், தீ அதிகமாக கொழுந்து விட்டு எரிந்ததால் அணைக்க முடிய வில்லை. இதன்பின் காடையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து, இரண்டு தீயணைப்பு நிலை வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டு  வர போராடினர். இறுதியாக நான்கு தீய ணைப்பு வாகனங்கள் கொண்டு குடோ னில் பிடித்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இவ்விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.