districts

img

கோவை புறநகரில் கொட்டித் தீர்த்த கனமழை

கோவை, டிச.8- கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. வடகிழக்கு பருவமழை காரண மாக கோவை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசா னது முதல் மிதமான மழையும், ஒரு  சில இடங்களில் கனமழையும் பெய் யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் வியாழனன்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியன. தாழ்வான பகுதிகளிலும் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது.  குறிப்பாக, அன்னூர் புறநகர் பகுதியான குமாரபாளையம், குன் னத்தூர் பாளையம் நாகம்மாபுதூர், பொகலூர், தாளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது. இதேபோல அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பனந் தோப்பு மயில் பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அவி நாசி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், அப்ப குதியில் உள்ள குடியிருப்புக ளில் இடுப்பளவு மழைநீர் தேங்கி யுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட் டுள்ளது. அன்னூர் பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரி கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று உணவு பொட்டலங்களை வழங்கி னர். மேலும் குடியிருப்பு பகுதி யில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற பேரூராட்சி ஊழியர்கள் பணிகளை விரைவு படுத்தி வரு கின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு  நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்வாரப்படாமலும் உள்ளதால், கனமழை வந்தால் பெரும் பாதிப்பு  ஏற்படும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அன்னூர் தாலுகா செயலாளரும், அன்னூர் பேரூராட்சி வார்டு உறுப்பினருமான மணிகண்டன் தலைமையில், கோரிக்கை விடுத் தனர். மேலும், அன்னூர் வட்டாட் சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டமும், நடத்தி னர். ஆனால், மக்களை சமாதா னப்படுத்தி திருப்பி அனுப்பும் முயற்சியை மேற்கொண்ட அதிகா ரிகள், ஆக்கப்பூர்வமான நடவ டிக்கை எதும் எடுக்காததே தற் போது, குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பெரும் தவிப் பிற்குள்ளாகியுள்ளனர் என்பகு குறிப்பிடத்தக்கது.  மேட்டுப்பாளையம்  இதேபோன்று, மேட்டுப்பாளை யம் அருகே விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தேக்கம்பட்டி ஊராட்சி மற்றும்  சிக்கதாசம்பாளையம் ஊராட் சியை இணைக்கும் தரைப்பாலம்  நீரில் மூழ்கியது. இதனால், பல் வேறு கிராமங்களுக்கு போக்குவ ரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தரைப்பாலத்தின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது குறித்து பல முறை மனு அளித்தும் சம்மந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக் கின்றனர். ஏற்கனவே பழுதாகி சிதி லமடைந்துள்ள இந்த தரைபா லத்தை சீரமைக்க கோரி, அண்மை யில் கிராம மக்கள் நூதன முறையில்  தரைப்பாலத்ததுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தது குறிப்பி டத்தக்கது.