தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை
ஈரோடு, மே 29- ஈரோட்டில் நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு தாளவாடி சத்தியமங்கலம் புலி கள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளது. இந்த வனச்சரகங் களில் யானை, மான், சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வரு கின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை யொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் ளும், ஊருக்குள்ளும் புகுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் சனி யன்று நள்ளிரவு 12 மணி அளவில் வனப்பகு தியில் இருந்து ஒற்றை யானை வெளியேறி யது. பின்னர், அந்த யானை தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமத்துக் குள் புகுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்து பார்த்த போது, அங்கு ஒற்றை யானை வீதிகளில் சுற்றி திரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்தும், சத்தம் போட் டும் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற் சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை அங்கி ருந்து காட்டுக்குள் சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, விவசாய தோட் டத்தில் புகுந்து வந்த யானை தற்போது ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கை யாக உள்ளது. ஆகவே, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானை ஊருக்குள் புகாதவாறு அகழி அமைத்து நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இளம்பிள்ளை அருகே தக்காளி திருடிய நபர் கைது
இளம்பிள்ளை, மே 29- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (26). இவர் பெருமாகவுண் டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோயில் அருகே காய்கறி கடை வைத்து நடத்தி வருகி றார். இந்நிலையில் இவருக்கு தக்காளி பார்சல் இறக்குபவர் வியாழனன்று அதி காலை 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக் காளி பெட்டியை இவருடைய கடையின் முன் இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சங்கர் காலையில் கடை யைத் திறக்க வந்த போது ஒரு கிரேடு தக் காளி பெட்டி மட்டுமே வெளியே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து கடையின் முன் பொருத்தப்பட் டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது, ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரி யவந்தன. இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர் புகார் தெரிவித் தார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தக்காளி திருடிய நபரை தேடிவந்தனர். விசாரணையில் வெண்ணந்தூர் தங்க சாலை வீதி பகுதியை சேர்ந்த சின்ராஜ் (32), என்பவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட் டது தெரியவந்தது. தொடர்ந்து, இவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத் தனர். இவர் ஏற்கனவே செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக் கில் கைதாகி ஜாமினல் வெளியே வந் துள்ள நிலையில் மகுடஞ்சாவடி காவல் எல்லைப்பகுதியில் தக்காளி திருட்டு வழக்கு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக் கது.
உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
நாமக்கல், மே 29- நாமக்கல் மாவட்ட தட கள சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத் தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவி லான உடற்திறன் விழிப்பு ணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட் டியை நாமக்கல் பாராளு மன்ற உறுப்பினர் சின்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மின்தடை அறிவிப்பு
அவிநாசி, மே 29- அவிநாசி மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட பெருமாநல் லூர், 15 வேலம்பாளையம், அவிநாசி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், திங்களன்று (இன்று) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சமத்துவபுரம், த.எ.புதூர், பூலுவபட்டி நால் ரோடு, எல்&டி, தோட்டத்துப்பாளையம், நெருப்பெரிச் சல், ஜிஎன் கார்டன், பொம்மநாயக்கன்பாளையம், தட்டான் குட்டை, சொட்டைமேடு, வள்ளிபுரம், அனைப்பதி, வெங்க மேடு, மேற்குபதி, தொரவலூர், அவரப்பாளையம், மரிய புரம், எமராயன் கோயில், அபிசேகபுரம், பெத்தாம்பாளை யம், சின்னேரிப்பாளையம், கொன்னக்காடு, ஈச்சம்பள் ளம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், வேலம்பாளை யம் மெயின் ரோடு, மும்மூர்த்தி நகர், கற்பகம் நகர், கங்கா நகர், பழனிசாமி நகர், பி.நாதம்பாளையம், எம்.நாதம்பாளை யம், குள்ளேகவுண்டம்பாளையம், பாலாஜி நகர், வேலாயு தம்பாளையம், கருணைபாளையம், காசிகவுண்டன் புதூர், பூலக்காட்டுப்பாளையம், தேவராயம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.
பனியன் நிறுவன ஊழியரிடம் மோசடி: 5 பேர் கைது
திருப்பூர், மே 29- திருப்பூரைச் சேர்ந்த பனி யன் நிறுவன ஊழியரிடம் வங்கி அதிகாரிகள் போல் பேசி பணம் பறித்த 5 பேரை திருப்பூர் சைபர் கிரைம் போலீஸர் கைது செய்த னர். திருப்பூரைச் சேர்ந்த லோகேஷ் (32) என்பவரி டம் வங்கி அதிகாரிகள் போல் பேசி அவரது ஏ.டி.எம். கார்டின் நம்பரை பெற்று உள்ளனர். அதை பயன்ப டுத்தி ரூ.79,800 பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்து மோசடி செய்தனர். இந்த சம்பவத்தில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த ரவிசங்கர் (32), தருமபு ரியை சேர்ந்த சுமன் (25), சேலம் எடப்பாடியை சேர்ந்த குணசேகரன் (34), சேலத்தை சேர்ந்த விஷால் (27), தருமபுரி பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்த உதய ரமேஷ் (25) ஆகிய 5 பேரை திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் சனி யன்று கைது செய்தனர்.
கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க கோரி திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், மே 29- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் சார்பில் அங்கேரிபாளை யம் இஎம்எஸ் நினைவகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி 15ஆவது வார்டு செயலாளர் கருப்ப சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப் பன்,மூத்த தலைவர் கே. பழனிசாமி மற்றும் கே. மாரப்பன் ஆகியோர் உரை யாற்றினர். அங்கேரிபாளை யம் அவிநாசி கவுண்டம் பாளையம் வெங்கமேடு பகுதி கிளைகளின் செயலா ளர்கள் கட்சி உறுப்பினர் கள் உட்பட பலர் பங்கேற்ற னர். சேடர்பாளையம் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலாளர் எஸ்.கே. பழனிச்சாமி தலைமை வகித் தார். ஒன்றியச் செயலாளர் ஆர் காளியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் மகா லிங்கம், வாவிபாளையம் கிளைச் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணி உள்ளிட் டோர் உரையாற்றினர். தோட்டத்துபாளையத்தில் கிளை செயலாளர் மங்க லட்சுமி தலைமை வகித் தார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, ஒன்றியக்குழு உறுப்பினர் டி.மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக, சமத்துவபுரம் கிளைச் செயலாளர் நன்றி கூறினார்.