districts

கோவையில் இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

சென்னை, ஏப். 11 - தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.

  இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும்  கோவையில் வெள்ளிக்கிழ மை (ஏப்.12) மாலை 5 மணிக்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் களுக்கு ஆதரவு திரட்டுகின்ற னர். ராகுல் காந்தியும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஒரே மேடையில் உரை யாற்றுகின்றனர்.

“இந்தியா கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நெல்லை பெல் மைதானத்தில் நடை பெறும் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். அதேபோல், மாலை 6  மணிக்கு கோவை செட்டி பாளையம் எல்.அன்.டி. பை பாஸ் சாலையில் நடை பெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முத லமைச்சர் மு.க. ஸ்டாலி னோடு இணைந்து பங்கேற் கிறார்”   என தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.