சேலம், ஜன.23- ராமர் கோயில் விழாவுக்காக அரைநாள் விடுமுறை அளித்திருந்த நிலையில், வங்கி முன் காத்திருந்த முதியவர் திடீர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அயோத்தியில் ராமர் கோவில் குடமு ழுக்கை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு திங்களன்று அரைநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியில் செயல்படும் தேசியமயமாக் கப்பட்ட வங்கி கிளைக்கும் திங்களன்று அரை நாள் விடுப்பு விடப்பட்டிருந்தது. இதனை அறி யாமல் ஏற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதி யைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வங்கி யில் திரண்டனர். திங்கட்கிழமை என்பதால், பல்வேறு பண பரிவர்த்தனைக்காக கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு சிறிய முட்டுச்சந் துக்குள் ஏற்காடு கொண்டையனூர் கிராமத் தைச் சேர்ந்தவர் பழனிசாமி (58) என்பவரும் வரிசையில் நின்றார். காலை 9 மணி முதல் நண்பகல் வரையிலும் காத்திருந்த பழனி சாமி, திடீரென மயங்கி விழுந்தார். இதுகு றித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரை பரிசோதித்தனர். அப்போது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் உடலை வீட் டுக்கு எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.