உதகை,மார்ச் 25- சுண்டட்டி பகுதியில் உள்ள விவசாயி பயிர்களையும் தேயிலை தோட்டங்களையும் யானை கூட்டம் சேதப்ப டுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே சுண்டட்டி பகுதியை சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது சமவெளிப் பகுதியில் இருந்து யானை கூட்டம் அப்பகுதியில் உள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியும், தேயிலை தோட்டங்களில் உலா வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பொதுமக் களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, தேயிலை, தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாது காப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.