districts

img

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மைப்பணியாளரை வேலை செய்ய வற்புறுத்திய சுகாதார ஆய்வாளர்

கோவை மாநகராட்சி 78 வார்டு செல்வபுரம் பகுதியில் சுப்பிரமணி , தர்மன் , செந்தில்குமார் ஆகியோர் தூய்மை பணிபுரிந்து வருகின்றனர்.   இரு நாட்களுக்கு முன்பு  பேரூர் சாலையிலுள்ள செல்வபுரம் பகுதியில்  சாக்கடையில் அடைப்பு  ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் ராம் மற்றும் மேற்பார்வையாளர் மாணிக்கம் ஆகியோர் இம்மூவரையும் அடைப்பு எடுக்க அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது சாக்கடைக்குள் இறங்கித்தான் அடைப்பை எடுக்க முடியும் என்ற சூழலில் , கட்டாயம் அடைப்பை எடுக்க அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி தூய்மைப்பணியாளர் சுப்பிரமணி சாக்கடையில் இறங்கி அடைப்பை சுத்தம் செய்துள்ளார். இது குறித்து அவர் துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் இருவரும் சுப்பிரமணியிடம், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல்,   சாக்கடை அடைப்பை எடுக்க வற்புறுத்தவில்லை எனவும், தாமாக சென்று அடைப்பை எடுத்ததாக கடிதம் எழுதச்சொல்லி மிரட்டியுள்ளனர். மேலும் வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாக தூய்மைப்பணியாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார். 
மாநகராட்சி பகுதிகளில் தொடர்ச்சியாக பாதுகாப்பு உபகரணங்களின்றி   தூய்மைப்பணியாளர்கள் பணி செய்ய அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.