தருமபுரி, பிப்.24- தொப்பூரில் பல ஆண்டுகளாக பயனில்லாமல் பூட்டி கிடக்கும் காவலர்கள் குடியிருப்பை, விபத்து அவசர சிகிச்சை மையமாக மாற்ற தமிழக அரசுக்கு அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு சேலம் -பெங்க ளூரு தேசிய நெடுஞ்சாலையை யொட்டி, கடந்த 2001 ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வாளருக்கு தனி வீடு உட்பட 27 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட் டப்பட்டது. புதியதாக கட்டப்பட்ட பிறகு, 10 ஆண்டுகள் இதில் போலீ சார் கும்பத்தினருடன் குடியிருந்து வந்தனர். இந்த குடியிருப்பில் முறையான பராமரிப்பு இல்லாத தால், அடிக்கடி குடிநீர் பிரச்சனை காரணமாகவும், அங்குள்ள காவ லர்களின் குழந்தைகள் படிக்க அரு கில் பள்ளிகள் இல்லாததாலும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்த னர். மேலும், காவலர் குடியிருப்பு முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் அவற்றின் அருகிலேயே தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் பகுதியில் தொடர்ந்து சாலை விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படு வதாலும் அங்கு குடியிருக்கும் போலீ சார் குடும்பத்தினர் அச்சமடைந் தனர். குடியிருப்பு அடர்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டுபன்றிகள், குரங்குளின் நட மாட்டத்தால் காவலர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தொப்பூர், நல் லம்பள்ளி, தருமபுரி உள்ளிட்ட பகு திகளில் வாடகை வீட்டில் குடியேறி னர். யாரும் தங்காத நிலையில் போலீசாருக்கு கட்டப்பட்ட அந்த குடியிருப்பு பராமரிப்பு இல்லாமல் அப்பகுதி முழுவதும் புதர் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இதனிடையே, தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இங்கு ஏற்படும் விபத்தில் சிக்கிகொள்ப வர்களை மீட்டு 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி அரசு மருத்துவமக்கல்லூரி மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலே பலர் உயிரிழக் கும் நிலை உள்ளது. சில நேரங்க ளில் விபத்துக்குள்ளான வாகனங் களை மீட்பதற்கே பல மணி நேரங் கள் ஆவதால், விபத்தில் சிக்கி படு காயம் அடைந்தவர்களை உடனடி யாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாத நிலையிலேயே பலரும் உயிரிழக்கின்றனர். இதனால் பல ஆண்டுகளாக பாழடைந்து பூட்டியே கிடக்கும் இந்த காவலர் குடியிருப்பை, விபத்து மற் றும் அவசர சிகிச்சை மையமாக மாற்றினால் விபத்தில் சிக்குபவர் களை ஐந்தே நிமிடங்களில் உடன டியாக அவசர சிகிச்சை அளித்து, உயிரிழப்பை தடுக்கலாம். எனவே, இந்த கட்டடத்தை அவசர சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமி ழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.