ஈரோடு, டிச.7- காட்டுப்பன்றிகளை கட்டுப்ப டுத்த தமிழ்நாடு அரசு விவசாய சங் கங்களை கொண்ட குழு ஒன்று அமைத்து, கேரளாவிற்கு சென்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. ஈரோடு மாவட்டம், ஆசனூர் வனக்கோட்டத்தில் தாளவாடி, ஜீர கஹள்ளி, கேர்மாளம் மற்றும் ஆச னூர் ஆகிய நான்கு வனச்சரகங் கள் உள்ளன. இச்சரகங்களில் ஏற்ப டும் மனித வன – விலங்கு முரண் பாடுகளை கட்டுப்படுத்துவது, தீர்வு காண்பது குறித்து பாத்தியதா ரர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், யானைகள் ஊருக்குள் வராமலி ருக்க அகழிகளை அமைக்க வேண் டும். தூர்ந்துபோய் உள்ள யானை புகா அகழிகளை பராமரிக்க வேண்டும். சூரிய தொங்கு மின் வேலி அமைக்க வேண்டும். காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண் டும் போன்ற ஆலோசனைகளும், கோரிக்கைகளும் முன்வைக்கப் பட்டன. இதுகுறித்து பதிலளித்த ஆச னூர் வனக்கோட்ட துணை இயக்கு நர், இவ்வாண்டு புதிதாக 9 கி.மீ. தூரத்திற்கு யானை புகா அகழிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 15 கி.மீ. தூரத்திற்கு யானைகள் புகா அகழிகளில் பராமரிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இன் னும் வெட்டப்படாமல் உள்ள 28 கி.மீ. தூரத்திற்கு யானை புகா அக ழிகள் அமைக்கவும், 48 கி.மீ. தூரத்திற்கு யானை புகா அகழி பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்படும், என்றார். மேலும், பாறைகள், ஓடைகள் போன்ற இடங்களில் சிறப்பு கட்ட மைப்புகளை ஏற்படுத்தவும், சூரிய தொங்கு மின் வேலிகளை அமைக்க வும், ரயில் தண்டவாளங்களை கொண்டு வேலிகளை அமைக்க வும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். தாளவாடி வட்டா ரத்தில் காப்புக்காடுகள் வழியாக செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள புதர் செடிகளை ஒவ்வொரு புறமும் 15 மீட்டர் அகலத்திற்கு அகற்றும் பணி உடனடியாக இவ்வாண்டே முடிக்கப்படும் என் றும் கூட்டத்தில் உறுதி அளிக்கப் பட்டது. வன விலங்குகளை விரட்டும் காவலர்களின் எண்ணிக்கையை தேவையான இடங்களில் அதிகப்ப டுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் இரவு முழுவதும் பணி செய்வது வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும். கேர ளாவில் உள்ளதை போல் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தமிழ் நாடு அரசு விவசாய சங்கங்களை கொண்ட குழு ஒன்று அமைத்து கேர ளாவிற்கு சென்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கான தீர்வும் விரை வில் எட்டப்படும் என்றும் தெரிவிக் கப்பட்டது. காட்டில் வளர்ந்துள்ள சென்னா மரங்களை தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் மூலம் முழுமையாக அகற்றப்பட்டுள் ளது. மேலும், அவற்றின் வேர்களை அடியோடு பிடுங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பயிர் மற்றும் மனித உயிரிழப்பு களுக்கு வழங்கும் இழப்பீடு இந்த நிதியாண்டில் தற்போது வரை ரூ.67.7 லட்சம் வரை வழங்கப் பட்டுள்ளது. 2022–23 ஆம் ஆண்டு ரூ.58.6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது 2021–22க்கு முன்பு வழங்கப் பட்டதைவிட 5 அல்லது 6 மடங்கு அதிகம். இதுநாள் வரை நிலுவை ஏதும் இல்லாமல் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடி மக்களுக்கு சமுதாய உரிமை கள் மற்றும் வன வள உரிமை கள் வழங்குவது குறித்து சம்பந்தப் பட்ட அலுவலர்களின் கூட்டம் இம் மாதம் நடைபெற உள்ளது. நபார்டு, சிறப்பு மேம்பாட்டு திட்டம், யானை கள் திட்டம், புலிகள் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் போதுமான எண்ணிக்கையில் கசிவு நீர் குட் டைகள், தடுப்பணைகள் அமைக் கப்பட்டுள்ளது, என்றும் கூட்டத் தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண் ணாரி, வனச்சரக அலுவலர்கள், தாளவாடி காவல் ஆய்வாளர், தாள வாடி துணை வட்டாட்சியர், தாள வாடி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர், தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர், தாளவாடி விவ சாய சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், ஜீவா தொண்டு நிறுவனம் பல்வேறு கிராமங்களின் வேளாண்மை பெருங்குடி மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.