districts

img

விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா படத்திறப்பு

உதகை,ஜன 30- சுதந்திரப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் உதகையில் செவ்வாயன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா  நடைபெற்றது. சிபிஎம் நீலகிரி மாவட் டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலை மையில் நடைபெற்ற நிகழ்வில், தோழர் என்.சங்கரய்யாவின் உருவப் படத்தை திறந்து வைத்து மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம் புகழாஞ்ச லியை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று புகழுரை யாற்றினர்.  இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், திமுக மாவட்ட துணைச்  செயலாளர் ரவிக்குமார், காங்கிரஸ்  மாவட்டக் குழு உறுப்பினர் பத்மந பான், சிபிஐ மாவட்ட செயலாளர் போஜராஜ், விடுதலை டி.புவே னேஷ்வரன், இந்திய யூனின் முஸ் லீம் லீக் மாவட்டச் செயலாளர் அனீபா  மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எல்.சங்கரலிங்கம், ஏ.ஆர்.ஆதிரா, டி.வினோர், கே.ரா ஜன், கே.சுந்தரம், எம்.ஆர்.சுரேஷ்  மற்றும் மூத்த தோழர் என்.வாசு மற் றும் இடைக்குழு செயலாளர் நவீன் சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்று உரையாற்றினர். இதில் திர ளானோர் பங்கேற்றனர்.