கோவை, மார்ச் 31- கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் 28 மாநி லங்களைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற உணவு வகைகள் வாடிக்கையாளர்க ளின் கவனத்தை ஈர்த்து வரு கின்றன. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த நீலாம்பூரில் கோகுலம் பார்க் என்ற தனியார் நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நட் சத்திர விடுதியில் ஒவ்வொரு ஆண் டும் கோடை காலத்தில் உணவுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ”பிளேவர் ஆஃப் இந்தியா” என்ற பெயரில் உணவுத் திருவிழா, கடந்த 29ஆம் தேதி துவங்கியுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் காஷ்மீர் முதல் கன்னி யாகுமரி வரை அனைத்து மாநிலங்க ளிலும் பிரசித்திபெற்ற உணவு வகை கள் தயார் செய்யபட்டு காட்சிப்படுத் தப்பட்டுள்ளன. வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் குடும் பத்துடன் உணவுத் திருவிழாவுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்க ளுக்கு பிடித்தமான உணவு வகை களை ஒரு பிடி பிடித்து செல்கின்ற னர். உணவுத் திருவிழா குறித்து நட்சத் திர விடுதியின் தலைமை சமையல் கலைஞர் அருள்செல்வன் கூறுகை யில், விடுதிக்கு வரும் வாடிக்கையா ளர்களின் விருப்பத்தைக் கேட்டு அதன்படி ஒவ்வொரு ஆண்டும் உணவுத் திருவிழாவை நடத்தி வரு கிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஆண்டு ”பிளேவர் ஆஃப் இந்தியா” என்ற பெயரில் உணவுத் திருவிழாவை துவக்கியுள்ளோம். ஒவ்வொரு நாளும் பல்வேறு மாநிலங்களில் பிரசித்தி பெற்ற உணவு வகைகளை காட்சிப்படுத்தி வருகிறோம். இதில் வெஜ், நான் வெஜ், இனிப்பு வகை கள், கார வகைகள் என 100 மேற்பட்ட உணவு வகைகளை ஒரே இடத்தில் ருசிக்க முடியும். குழந்தைகளுக்காக பாவ் பஜ்ஜி, வடா பாவ் உள்ளிட்ட வட இந்திய உணவு வகைகளை தயார் செய்து கொடுக்கிறோம். கேரளாவில் பிரசித்தி பெற்ற புட்டு மற்றும் கடலை கறி, மைசூர் மசால் தோசை, ஆந்திரா செட்டு தோசை, வட இந்திய ஜிலேபி உள்ளிட்ட உணவுகள் லைவ் கவுண்டரில் பெற்று சுட சுட சுவைக்க முடியும். புதிய உணவு வகையாக தந்தூரி சாயா இந்த உணவு திருவிழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என் றார்.