districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பனியன் தொழிற்சாலையில் தீ விபத்து பல லட்ச மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை

சேலம், நவ.1- சேலம் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை பல மணி  நேரம் நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்த னர்.   சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி ஸ்ரீ ரங்கன் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். ஜவுளி நிறுவன உரிமையாளரான இவர்  பனியன்,  ஜட்டிகள், சிறியவர் பெரியவர் ஆடைகளை தயார்  செய்து கடைகளுக்கு விற்பனை செய்வதோடு வெளி மாநிலங் களுக்கும் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், மாலை 5 மணிக்கு அந்தப் பகுதி பொது மக்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அதில் ஏற்பட்ட தீப்பொறி  குடவுனில் பட்டதால் உள்ளே இருந்த துணிகள் எரியத் துவங்கி யது. புகை வெளியேறி நிலையில் அதிர்ச்சி அடைந்த அப்ப குதி பொதுமக்கள் அன்னதானப்பட்டி போலீசார் மற்றும் செவ் வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்த னர். தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு துணை அலுவலர்  சிவக்குமார் தலைமையில் மூன்று வாகனங்களில் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். ஆனால், எரிந்த தீயை அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை. பின்னர் சூரமங்கலம் ஓமலூர் வாழப் பாடி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள்  வரவழைக்கப்பட்டு ஆறு வாகனங்கள் கடும் போராட்டத் திற்கு பின் இரவு 10:30 மணிக்கு தீயை அணைத்தனர். இந்த  விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  விபத்தில் பல லட்ச மதிப்புள்ள பொருட்கள் எரிந்து தீக்கிரை யானது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது.

மின் சாதன கடையில் தீ விபத்து

இதேபோன்று, உடுமலை, கொங்காலக்குறிச்சியில் பர ணிஜோதி ஹார்டுவேர்ஸ் என்ற மின்சாதனங்கள் விற்கும்  கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தீபாவளி யன்று (வியாழக்கிழமை) இரவு கடையின் உள்ளே இருந்து  புகை வருவதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ள னர். இதனையடுத்து, கடை உரிமையாளர் பாபு விடம் தெரி வித்து உள்ளார்கள். பின்னர் கடையை திறந்த போது கடை  முழுவதும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை யடுத்து, உடனடியாக உடுமலை தீயணைப்பு துறைக்கு தக வல் தரப்படு பின்னர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்த னர். இந்த தீவிபத்து காரணமாக, சுமார் ரூ.20 லம்சம் மதிப்பி லான பொருட்கள் எரிந்து நாசமானதாக முதற்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து தளி  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமக்கல், நவ.1- ராசிபுரத்தில் இரண்டாவது நாளாக கனமழை பெய்த தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள் ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் தொடர்ந்து இரண்டா வது நாளாக வெள்ளியன்று கனமழை பெய்தது. தீபாவளி தின மான வியாழனன்று மதியத்திற்கு பிறகு பெய்த கனமழை யின் காரணமாக, ராசிபுரம் பேருந்து நிலையம், அரசு மருத்து வமனை போன்ற பகுதிகளில் அதிக அளவு மழை நீர் உள்ளே  புகுந்ததால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் என்ன பல் வேறு தரப்பினர் அவதிக்குள்ளாகினர். மேலும், தீபாவளி தினத்தன்று மாலை நேரத்தில் மழை  பெய்ததால் பட்டாசு கடை வியாபாரிகளும், சாலையோர கடை வியாபாரிகளும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை யும் வெகுவாக பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளியன்று பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்த தால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் தொடர்ந்து மழை பெய்வ தற்கான சூழல் உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படை யில் சாக்கடை கால்வாய்களை சீரமைப்பது உள்ளிட்ட முன் னேற்பாடு பணிகளை துரிதமாக செய்ய வேண்டும் என்பது  பொதுமக்களின் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

யானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி ஒருவர் பலி கோவை, நவ.1- கோவையில் யானை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவை மாவட்டம், துடியலூர், பன்னிமடை அருகே தாளி யூரில், வியாழனன்று நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு  இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு  யானை தாக்கியதில் மூன்று பேர் தப்பிய நிலையில்,  வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ்  (வயது 33) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து வனத் துறை மற்றும்  தடாகம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதனிடையே, மருதமலை, ஐ.ஓ.பி காலனி பகுதியில் வியாழனன்று நள்ளிரவு ஒரு யானை தன் குட்டியுடன் வந்து,  அங்குள்ள ஒரு வீட்டின் வாயிற் கதவை உடைத்து உள்ளே  புகுந்தது. பின்னர், தும்பிக்கையை உள்ளே விட்டு உணவுப்  பொருட்களை தேடியது. நள்ளிரவில் கதவை உடைக்கும் சத் தத்தை கேட்ட குடும்பத்தார், பதறி அடித்து மாடி அறைக ளுக்கு ஓடினர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைர லகி வருகிறது.

செந்நாய் கூட்டத்தால் அச்சம்

உதகை, நவ.1- உதகையை அடுத்த சோலூர் ஜங்ஷன் குடியி ருப்பு வளாகப் பகுதியில் எரு மைக் கன்றை செந்நாய் கூட் டம் வேட்டையாடி உண்ணும்  காட்சி சமூக வலைத்தளங்க ளில் வெளியானதால் அப் பகுதியில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ள னர். உதகையில், பல்வேறு இடங்களில் உணவு மற்றும்  தண்ணீர் தேடி வனவிலங்கு கள் வருவது அதிகரித்துள் ளது. இந்நிலையில், உத கையை அடுத்து சோலூர் ஜங்ஷன் பகுதிக்கு புத னன்று வந்த செந்நாய் கூட் டம் அங்கிருந்த எருமைக் கன்றை வேட்டையாடி உண் ணும் காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளி யிட்டதால், இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச் சமடைந்துள்ளனர். எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன்  இப்பகுதியில் உலவி வரும்  செந்நாய் கூட்டத்தை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

யானை தாக்கி ஒருவர் பலி

கோவை, நவ.1- கோவையில் யானை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவை மாவட்டம், துடியலூர், பன்னிமடை அருகே தாளி யூரில், வியாழனன்று நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு  இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு  யானை தாக்கியதில் மூன்று பேர் தப்பிய நிலையில்,  வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ்  (வயது 33) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து வனத் துறை மற்றும்  தடாகம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதனிடையே, மருதமலை, ஐ.ஓ.பி காலனி பகுதியில் வியாழனன்று நள்ளிரவு ஒரு யானை தன் குட்டியுடன் வந்து,  அங்குள்ள ஒரு வீட்டின் வாயிற் கதவை உடைத்து உள்ளே  புகுந்தது. பின்னர், தும்பிக்கையை உள்ளே விட்டு உணவுப்  பொருட்களை தேடியது. நள்ளிரவில் கதவை உடைக்கும் சத் தத்தை கேட்ட குடும்பத்தார், பதறி அடித்து மாடி அறைக ளுக்கு ஓடினர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைர லகி வருகிறது.

போதையில் மோதல்


போதையில் மோதல் சேலம், நவ 01- சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே உள்ள செம்மண் திட்டு கிராமத்தில், மது போதையில் நடை பெற்ற மோதலில் பத்துக்கும்  மேற்பட்டோர் காயமடைந்த னர். சேலம், செம்மண் திட்டு  பகுதியை சேர்ந்த இளைஞர் கள், அதே பகுதியில், மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற அருகாமை கிராம மான கொத்தனூர் கிரா மத்தை சேர்ந்த இளைஞர் கள் சிலரும் அதிக அளவி லான மது போதையில் நடந்து சென்றுள்ளனர். அப் போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோத லாக மாறியது. இதில் 10க் கும் மேற்பட்ட இளைஞர்க ளுக்கு மண்டை உடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

கோவை, நவ.1- பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் வள்ளி யம்மா தியேட்டர் அருகே இரண்டு இருசக்கர  வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத் தில், சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்திற்கு தமி ழக முதல்வர் ரூபாய் 25 லட்சம் நிதி வழங்க  உத்தரவிட்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த  அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்  கிருஷ்ணவேணி. இவர் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாள ராக பணிபுரிந்து வருகிறார். இவர், வியாழ னன்று அங்கலக்குறிச்சியில் இருந்து கோட் டூர் வழியாக காவல் நிலையம் சென்றுள் ளார். அப்போது, கோட்டூர் வள்ளியம்மாள் திரையரங்கம் அருகே எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி யது. அங்கலக்குறிச்சியை சேர்ந்த சிவகுமார் என்ற நபர் இந்த வாகனத்தை இயக்கி உள் ளார். இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த  காயங்கள் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனி யார் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது  அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த னர்.  மேலும், மற்றொரு இருசக்கர வாகனத் தில் வந்த சிவக்குமார் கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த விபத்து குறித்து கோட்டூர் காவல்  நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி பணிக்கு செல்லும் பொழுது சாலை விபத்தில் பலியான சம்ப வம் இப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும் பத்திற்கு தமிழக முதல்வர் ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.  முன்னதாக, விபத்தில் பலியான காவல் உதவியாளர் கிருஷ்ணவேணி வீட் டிற்கு, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவர்களது குடும் பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார்.

பணி வாய்ப்பு 

பணி வாய்ப்பு  ஈரோடு, நவ.1- ஈரோடு மாவட்ட சமூக நல  அலுவலகத்தில்  காலிப் பணி யிடம் நிரப்பப்பட உள்ளது.  இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா விடுத்த அறிக்கையில், சமூக நல அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளது. இதனை, www.erode.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவி றக்கம் செய்யலாம். நவ.9  ஆம் தேதிக்குள் விண்ணப் பங்களை மாவட்ட சமூக  நல அலுவலகம், ஈரோடு மாவட்ட ஆட்சியரக முகவ ரியில் சமர்ப்பிக்க வேண்டும். முதுகலை பட்டத் துடன் கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.