கோவை, மே 7- தமிழக - கேரள எல்லையான வாளையார் அருகே ரயில் மோதி பெண் யானை உயிரிழந்தது. ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு கிற நிலையில், மீண்டும் யானை ஒன்று விபத்தில் உயிரிழந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டம், போத்த னூர் முதல் கேரள மாநிலம், பாலக் காடு வரையிலான ரயில்வே வழித் தடத்தில், மதுக்கரை வாளையார் வரை உள்ள ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. கோவையில் இருந்து செல்லும் பாதை ‘ஏ’ லைன் எனவும், கேரளா வில் இருந்து வரும் பாதை ‘பி’ லைன் என அழைக்கப்படுகிறது. இதில் வனப்பகுதி வழியாக ரயில் கள் செல்லும்போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள் ளது. இந்நிலையில், இரவு நேரங் களில் குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக ரயில்கள் இயக்கப் படுவதால், அவ்வப்போது தண்ட வாளத்தை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர் நிகழ்வாக உள்ளது. கடந்த 20 ஆண் டுகளில் 35க்கும் மேற்பட்ட யானை கள் உயிரிழந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம் பர் மாதம் மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி பகுதியில், ரயில் மோதியதில் கருவுற்ற பெண் யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்தன. இதனையடுத்து, யானைகள் உயிரி ழப்பை தடுக்க வனத்துறை, ரயில் வேத்துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகி றது. இதன்தொடர்ச்சியாக, பாலக் காடு ரயில்வே கோட்டம் சார்பில், யானைகள் அதிகமாக தண்டவா ளத்தை கடக்கும் பகுதிகளை கண்ட றிந்து அந்த பகுதியில் இரண்டு இடங்களில் உயர் மட்ட பாலம் கட் டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக வனப்பகுதியான மதுக் கரை வனச்சரகத்தில் ஏ.ஐ எனப் படும் நவீன கண்காணிப்பு கேமராக் கள் பொறுத்தப்பட்டு யானைகளின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலை வாளையார் அடுத்த பன்னிமடை இரயில்வே கேட் அருகே பெண் யானை ஒன்று ரயில் பாதையை கடக்க முயன்ற போது, சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து பாலக் காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பாக, சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளில் பாலக்காடு - மதுக்கரை இடையே ரயிலில் அடி பட்டு 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது. இது தொடர் பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. வனப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகு திகளில் யானைகள் ரயில் பாதையை இரவு நேரங்களில் கடக் கும் போது, அதிவேகமாக வரக் கூடிய இரயில்கள் மோதுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் குறைந்த வேகத் தில் ரயில்கள் இயக்கப்பட வேண் டும் என அறிவுறுத்தி உள்ள நிலை யில், ஒரு சில ரயில் ஓட்டுநர்கள் இதனை கடைபிடிக்காததால், இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 2 இடங்களில் யானைகள் ரயில் பாதை கடக்கும் வகையில் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. அதுபோக ஏ.ஐ எனப்படும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப் பட்டு யானைகளில் நடமாட்டம் கண் காணிக்கப்பட்டு வருகிறது. அதே போல், கேரள வனப்பகுதிக்குள் யானைகள் கடக்கும் பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு கேமராக் கள் பொருத்த வேண்டும் என வலி யுறுத்தி உள்ளனர்.