பள்ளிபாளையம், மே 20- 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 56 வயதில் தேர்ச்சி யடைந்த குடும்பத்தலை விக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மனைவி தனம் (56). இவர்களது இரு மகன்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இதனி டையே 8 ஆம் வகுப்பு முடித்த இரண்டு ஆண்டிலேயே தனத்திற்கு திருமணமாகி விட்டது. அதன்பிறகு பல்வேறு தருணங் களால் படிப்பை தொடர முடியவில்லை. குடும்பப் பொறுப்பு அதிகரித்ததால், காலம் கடந்து சென்றன. இந்நிலையில், தனியார் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, நடப்பாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். இதில், 247 மதிப் பெண் பெற்று தனம் தேர்ச்சியடைந்தார். 56 வயது குடும்பத்தலைவி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற செய்தி பலர் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், பொதுமக்கள் தனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பள்ளியை விட்டு நின்று 42 வருடங்களுக்குப் பிறகு, தனம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.