districts

பணத்தை பெற்று தலைமறைவான மருத்துவர்: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

கோவை, மார்ச் 22- பொதுமக்களிடம் ஒன்னரைக் கோடி  ரூபாய் வரை பணத்தை பெற்று தலை மறைவான மருத்துவரை கைது செய்ய  வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள்  மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் புகார் மனு அளித்தனர். கோவை மாவட்டம், சுங்கம் பகு தியைச் சேர்ந்தவர் சித்தையா. சென் னையில் உள்ள அரசு மருத்துவமனை யில் பணியாற்றி வந்த இவர், கடந்த  1987 ஆம் ஆண்டு முதல் கோவை அரசு  மருத்துவமனையில் இருதயத்துறை பேராசியராகவும், அத்துறையின் தலை வராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த  2003 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற  சித்தையா, அதன் பிறகு கோவையில் மூன்று இடங்களில் தனியாக கிளினிக் நடத்தி வந்துள்ளார்.  இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளாக அவரிடம் பணியாற்றிய இ.சி.ஜி டெக் னீசியன் விஜயலட்சுமி என்பவரிடம், தனது மனைவி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், வெளி நாட்டில் படித்து வரும் தனது குழந்தை களின் படிப்பு செலவிற்கு வழியில்லா மல் இருப்பதாக கூறி ரூ.8 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். அதற்காக பாண்டு பத்திரத்தில் எழுதி கொடுத் ததோடு, கையெழுத்திட்ட காசோலை யையும் கொடுத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு பணம் வாங்கி, தற்போது வரை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் விஜயலட்சுமியின் பேத்தியிடமும் ரூ.2 லட்சம் வாங்கியுள்ளார். அதுமட் டுமின்றி கைராசி மருத்துவர் என நம்பி  சித்தையாவிடம் மருத்துவம் பார்க்க வந்த காங்கேயம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளிடம் அவர்களது உற வினர்களிடமும் ரூ.10 லட்சம் வரை இதே  காரணங்களை சொல்லியும் பாண்டு  பத்திரம் எழுதிகொடுத்தும் பணத்தை  வாங்கியுள்ளார். அதே போல கிளி னிக்கிற்கு வரும் மருந்தக பிரதிநிதி களிடம் வாங்கிய மருந்துக்கு பணம் கொடுக்காமல், இதே காரணங்களைக் கூறி பல லட்சங்களை மோசடி செய் துள்ளார்.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட வர்கள் ஒன்றிணைந்து கடந்த நவம் பர் மாதம் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலை யில், வெள்ளியன்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்தவர்கள் தங்கள் பணத்தை உடனடியாக அவ ரிடம் இருந்து எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.