கோவை, அக்.31- போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட கோவை யைச் சேர்ந்த இளைஞருடன் மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக் கள் கலந்து கொண்டனர். போதை பொருள் பழக்கத்தின் பயன் பாட்டை தடுக்க கோவையைச் சேர்ந்த விஷ்ணு ராம் என்பவர் “போதைப்பொருள் இல்லா தமிழகம்” எனும் சைக்கிள் பயண பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன்படி ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 37 மணி நேரம் 53 நிமிடங்களில் பயணித்து சாதனை செய்துள்ளார். ஹைதரபாத்தில் தனது சைக் கிள் பயணத்தை துவக்கிய விஷ்ணுராம் குர் னூல், பெங்களூரு வழியாக கோவை வந்த டைந்தார். கோவை வந்த விஷ்ணுராமை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருடன் விமான நிலைய பகுதி யிலிருந்து அவிநாசி சாலை வழியாக காவல் துறை ஆணையர் அலுவலகம் வரை ஆணை யர் சைக்கிள் ஓட்டிபடி வந்தார். இதில், பொது மக்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து விஷ்ணு ராம் கூறுகையில், அண்மையில் முதல்வர் கூறிய போதைப் பொருள் இல்லா தமிழகம் எனும் பிரச்சா ரத்தை வலியுறுத்தும் விதமாக இந்த சாதனை பயணத்தை துவங்கியதாக தெரிவித்தார். குறைந்த நேரத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணம் மூலம் கடந்த சாதனையை விஷ்ணு ராம் படைத்ததாக இன்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றி தழ் வழங்கியுள்ளது.