ஈரோடு, நவ.2- ஈரோடு மாநகராட்சியில் பாதாளச் சாக்கடையுடன், வீட்டு கழிவுநீர் குழாய் இணைக்க முறைகேடாக பணம் பெற் றதாக சாஸ்திரி நகர் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். ஈரோடு மாநகராட்சி, சாஸ்திரி நக ருக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையுடன், அனைத்து வீடுகளில் உள்ள கழிவுநீர் குழாய் களை இணைக்க வேண்டும் என மாந கராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளி யிட்டது. இதனைத்தொடர்ந்து, ஒப் பந்ததாரர் மூலம் பணிகள் தொடங் கப்பட்டன. ஆனால், பணிகளை செய்ய ஒப்பந்ததாரரின் வேலையாட்கள் ஒவ் வொரு வீட்டிலும் செங்கல், சிமெண்ட், பிவிசி குழாய்கள் வாங்க வேண்டு மென ரூ.3 ஆயிரம் முதல் 30 ஆயி ரம் வரை பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இணைப்புகள் பழுத டைந்ததை சரிசெய்யவும் வேலை யாட்கள் வீட்டு உரிமையாளர்களிடம் சில ஆயிரங்கள் பெற்று ரசீது எது வும் தராமல் சென்றதாகவும் கூறப்படு கிறது. இந்நிலையில், வைப்புத்தொகை மற்றும் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்ததை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒப்பந் ததாரர்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்ததாக வும், பழுதை சரிசெய்ய வேலை யாட்கள் சில ஆயிரம் வாங்கியதாக வும் பொதுமக்கள் தெரிவித்துள்ள னர். அதற்கு, “நீங்கள் செலுத்திய பணம் மாநகராட்சியில் வரவு வைக் கப்படவில்லை. அலுவலகத்தில் பணத்தை செலுத்திவிட்டு, காவல் துறையில் புகார் செய்து ஒப்பந்ததா ரர் மற்றும் வேலையாட்களிடம் வழங் கிய பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என மாநகராட்சி நிர் வாகம் தெரிவித்ததாக கூறப்படுகி றது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக் கள் கூறுகையில், மாநகராட்சி ஒப் பந்ததாரர் என்பதால், வீடுவீடாக வந்து ஆய்வு செய்து பணம் கேட்டனர். நாங்களும் மாநகராட்சியின் சார்பில் தானே வந்துள்ளார்கள் என்கிற நம் பிக்கையில் பணத்தை கொடுத் தோம். இப்போது எங்களுக்கும், அவர் களுக்கும் சம்பந்தமில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கி றது. அப்படியென்றால், இவர்க ளுக்கு மாநகராட்சியில் ஒப்பந்தம் கொடுத்த அதிகாரிகள் யார், அவர் கள் மீது என்ன நடவடிக்கை எடுக் கப்பட்டது என மாவட்ட நிர்வாகமோ, மாநராட்சியே வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். எங்களைப் போல மற்றவர்களும் ஏமாறாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நாங்கள் ஒப்பந்த தாரரிடம் ஏமாந்த பணத்தை எங்க ளுக்கு திருப்பித்தர வேண்டும். இல் லையென்றால், ஒத்துக்கொண்ட வேலையை மாநராட்சி பணம் வசூ லிக்காமல் செய்து தர வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தில் முறையிட உள்ளோம். மேலும், ஒப் பந்ததாரர் மீது காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க உள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர்.