districts

img

யானைகளுடன் மோதல்: கருவுற்ற யானை பலி

கோவை, டிச.5- சின்னத்தாடாகம் வனப் பகுதியில், கருவுற்ற யானை  ஒன்று பலியாகி உள்ளது.  சின்னத்தடாகம் அருகே, மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் அரு கில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  திங்களன்று  காலை ஆடு, மாடுகள் மேய்த் துக்கொண்டிருந்தனர். அப் போது சற்று தொலைவில் ஒரு யானைக்கூட்டம்  செல்வதை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்து ஒரு யானை திடீரென கீழே விழுந்து  துடித்தது.  இதைப்பார்த்த அவர்கள் உடனே வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அருகில் இருந்த வனத்து றையினர் உடனே அங்கு சென்று பார்த்தபோது 30 வயது  மதிக்கத்தக்க, பெண் யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள்  உயரதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். வனத்துறை உயரதிகாரிகள், கால்நடை மருத்து வர்கள் அங்கு சென்று யானையின்  உடலை ஆய்வு செய்த னர். முதல்கட்ட சோதனையில் யானை கருவுற்று இருப்பது  தெரியவந்தது. யானையின் உடல் பிரேத  பரிசோதனையில் யானை இறந்ததற்கான முழு விபரங்கள் தெரியவரும் என்று  வனத்துறையினர் தெரிவித்தனர்.  இந்நிலையில், கோவை மாவட்டம் துடியலூர் ராக்கி பாளையம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சிமலை அடிவா ரப்பகுதியில், ஆண் யானை ஒன்று  இறந்து கிடப்ப தாக ஞாயிறன்று, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  வனத்துறை யினர் அங்கு சென்று பார்த்தபோது உடல் சிதைந்த நிலை யில் யானை இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.   இதனையடுத்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவகள் யானையின் உடலை ஆய்வு செய்தபோது, அதற்கு 13 வயது இருக்கலாம்  என்றும், அது இறந்து 3  தினங்குகளுக்கு மேல் இருக்கும் என்றும், இரு யானைக ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாயில்  பலத்த காயம டைந்த இந்த யானை உணவு, தண்ணீர் அருந்தமுடியாமல், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து இறக்கலாம் என்று  தெரி யவந்தது. பிரேத பரிசோதனை முடிவில் யானை இறந்த தற்கான முழுக்காரணம் தெரியவரும் என்று வனத்துறை யினர்  தெரிவித்தனர். ஆனால் அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு வாயில் பலத்த காயம்  ஏற் பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  யானைகளின் வலசை காலம் என்பதால் கேரள மாநில  வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக ஏராள மான  யானைகள் கூட்டம் செல்கின்றன.