districts

img

மகத்தான போராளி தோழர் யெச்சூரிக்கு பிரியாவிடை: அனைத்து அரசியல் கட்சியினர் இரங்கல் ஊர்வலம்

திருப்பூர், செப்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்  சீத்தாராம் யெச்சூரியின் மறைவையொட்டி வெள்ளியன்று திருப்பூர், அவிநாசி, உத்துக் குளி, வேலம்பாளையம், தாராபுரம், பல்ல டம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம்,  குடிமங்கலம்  ஆகிய பகுதிகளில் அனைத்து  அரசியல் கட்சிகள் சார்பில் வெள்ளியன்று இரங்கல் ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட் டங்கள் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்  சீத்தாராம் யெச்சூரி வியாழனன்று உயிரி ழந்தார். இதையொட்டி திருப்பூரில் வெள்ளி யன்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில்  இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர்  குமரன் சிலை முன்பிருந்து துவங்கிய இரங் கல் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார், திமுக மாவட்ட அவைத் தலைவர் நடராஜன், அஇ அதிமுக பகுதி கழக செயலாளர் ஹரிஹர சுதன், காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட் டத்தலைவர் ஆர்.கிருஷ்ணன், மதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.நாக ராஜ் (எம்சி), விசிக மாநகர மாவட்டச் செய லாளர் எபிஆர் மூர்த்தி, கொங்குநாடு மக்கள்  கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் ரோபோ ரவிசந்திரன், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பில் அப்துல் கலாம் கிராஜி,  மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அபுசாலி,  சைமா கீதாஞ்சலி கோவிந்தப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.துரை சாமி, திராவிடர் கழகம் சார்பில் யாழ் ஆறுச் சாமி, தபெதிக சார்பில் முத்துக்குமார், திரா விடர் விடுதலைக் கழகம் சார்பில் முகில் ராசு, பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மு.நாச் சிமுத்து, ஆதித்தமிழர் சனநாயக பேரவை  சார்பில் பௌத்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் எம்.ரவி, எஸ்.ரவி சந்திரன், இஸாக், ஆதித்தமிழர் பேரவை சார் பில் கவிதா, நவீன மனிதர்கள் சார்பில் பாரதி  சுப்பராயன்,  ஆகியோர் தோழர் சீத்தாராம்  யெச்சூரியின் சிறப்புகள் குறித்து உரை யாற்றினர்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், கே.உன்னிகிருஷ்ணன், சி.மூர்த்தி, கே.ரங்கராஜ், ஜி.சாவித்திரி, எஸ். சுப்பிரமணியம், டி.ஜெயபால், ச.நந்தகோ பால், செ.மணிகண்டன் மற்றும் வடக்கு ஒன் றியச் செயலாளர், ஆர்.காளியப்பன், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பொது மக்கள், வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதி கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.

ஊத்துக்குளி: 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்  சீத்தாராம் யெச்சூரியின் மறைவையடுத்து ஊத்துக்குளியில் வெள்ளியன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அனைத்து கட்சியினர் பங்கேற்ற மௌன  ஊர்வலம் நடைபெற்றது. இதைதொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி  தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் திமுக  தெற்கு ஒன்றிய செயலாளர் பி.பி.ஈஸ்வர மூர்த்தி, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலா ளர் கே.கே.சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் வி.ஏ.சரவணன், காங்கி ரஸ் கட்சி தெற்கு வட்டாரத் தலைவர் எம்.சி. எஸ்.மனோஜ், மதிமுக ஒன்றியச் செயலா ளர் வழக்கறிஞர் வி.சுந்தர்ராஜ், தேமுதிக  வடக்கு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி,   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளைத்  தலைவர் அபூபக்கர் சித்திக், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செய லாளர் கு.சரஸ்வதி, சிபிஎம் ஒன்றியக்குழு  உறுப்பினர் கை.குழந்தைசாமி, சிபிஐ நகரச்  செயலாளர் கே.கே.குமரன் ஆகியோர் இரங் கல் உரையாற்றினர். முடிவில் மௌன அஞ் சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

வேலம்பாளையம்:

சிபிஎம் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு மற்றும் முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் 4 ஆம்  ஆண்டு நினைவு நாளையொட்டி தோழர்க ளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி செவ் வஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், தோழர் சீத்தா ராம் யெச்சூரியின் வாழ்க்கையை நினைவு  கூர்ந்து பேசினார். கிளைச் செயலாளர்கள் எம்.வெள்ளியங்கிரி, வி.ஆர்.சரவணகு மார், மோட்டார் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், பனியன் சங்க ஏரியா கமிட்டி  தலைவர் எம்.பாண்டியராஜ், தையல் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவிநாசி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவி நாசி ஒன்றியக்குழு சார்பில் இரங்கல் ஊர்வ லம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற் றது. இதில், சிபிஎம், சிபிஐ, திமுக, அதிமுக,  காங்கிரஸ், மதிமுக, விசிக, வணிகர் சங்கம்  உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில்  இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பயணியர் விடுதியில் இருந்து  துவங்கிய ஊர்வலம் பழைய பேருந்து நிலை யம் கடந்து, செங்காடு திடலில் நிறைவடைந் தது. இதைதொடர்ந்து, தோழர் சீத்தாராம் யெச்சூரியின் உருவப்படத்துக்கு மாலை  அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னர். இதையடுத்து நடைபெற்ற இரங்கல் கூட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். இதில் சிபிஎம் ஒன்றியக்  கவுன்சிலர் முத்துசாமி, சிபிஐ வழக்கறி ஞர் சுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சியின்  சாய் கண்ணன், திமுக ஊராட்சி மன்றத் தலை வர் வரதராஜன், அதிமுக மூர்த்தி, விசிக வெங்கடாசலம், மதிமுக சந்திர மூர்த்தி ஓய்வு  பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியம், வணிகர் சங்கம் பழனிச்சாமி, உள்ளிட்டோர் இரங்கல்  உரை ஆற்றினர். மேலும் கட்சியின் ஒன்றிய  குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர், அனைத்து அரசியல் கட்சியினர், சமூக  அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். 

தாராபுரம்: 

மறைந்த தோழர் சீதாராம்யெச்சூரியின் மறைவையொட்டி தாராபுரத்தில் இரங்கல்  ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. கட்சி அலுவலகம் முன்பு துவங் கிய இரங்கல் ஊர்வலம் அண்ணா சிலை முன்பு  நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தாலுகா குழு உறுப்பினர் ஆர்.வெங்கட் ராமன் தலைமையில் இரங்கல் கூட்டம்  நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆதிதிராவிட  நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் கலந்து கொண்டு தோழர் சீத்தாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு மலர் தூவி  அஞ்சலி செலுத்தினார். இதில், இந்திய  தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ்,  திராவிட முன்னேற்ற கழகம், ஆதித்தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் கழகம்  ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் இரங்கல் உரையாற்றினார்.

பல்லடம்: 

தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறை விற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் பல்லடம் அண்ணா சிலை  முன்பு துவங்கி என்.ஜி.ஆர் சாலை வழியாக  காமராஜர் திடலில் நிறைவுபெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற நினைவஞ்சலி கூட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரம சிவம் தலைமை வகித்தார். இந்நிகழ்வில்,  திமுக நகரச் செயலாளர் நா.ராஜேந்திரகு மார், அதிமுக சார்பில் சூ.தர்மராஜன், மதி முக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சி நகரத தலைவர் ஈஸ்வர மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பரமசிவம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் முஜிபூர் ரகுமான், விசிக சார்பில் ஓ. ரங்கசாமி, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக  அலுவலர் பாலசுப்பிரமணியம், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர் வை.பழனிசாமி, பல்லடம்  பாலாஜி ஈஸ் வரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றி னர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.

காங்கேயம்:

காங்கேயம் பேருந்து நிலையம் முன்பு  இரங்கல் கூட்டம் நடைபெற்றது. போக்குவ ரத்து கட்சி கிளை மற்றும் அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கம் சிஐடியு காங்கேயம்  கிளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து அரங்கத்தின் முன்னாள் கிளைச் செயலாளர் டி. அர்ச்சுனன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் கே.திருவேங்கடசாமி, தாலுகா குழு உறுப்பி னர்கள் பி.வேலுச்சாமி, எஸ்.தங்கவேல், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர்  மண்டல நிர்வாகி நடராஜன் ஆகியோர் இரங் கல் உரையாற்றினர். முடிவில் மௌன அஞ் சலி செலுத்தப்பட்டது.

உடுமலை நகரம்:

உடுமலை நகராட்சி அலுவலகத்தின் முன்பு துவங்கிய இரங்கல் ஊர்வலம் மத்திய  பேருந்து நிலையத்தின் முன்பு நிறைவ டைந்தது. இதைதொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் தண்ட பாணி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதணன், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் செளந்தர்ராஜ், மாவட்ட நிர்வாகி கள் சி.சுப்பிரமணியம், என்.கிருஷ்ணசாமி, ரணதேவ், உடுமலை நகர்மன்றத் தலைவர் மத்தீன், திமுக நகரச் செயலாளர் வேலுச் சாமி, பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி. குமார், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலா ளர் ரவி, அதிமுக உடுமலை நகரச் செயலா ளர் அக்கிம், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார், மதி முக மாவட்டச் செயலாளர் தமிழரசு, திராவி டர் கழகத்தின் தம்பி பிரபாகரன், தந்தை  பெரியார் திராவிடர் கழகத்தின் சிவசங்கர்,  ஆதித்தமிழர் பேரவையின் பெரியார் தாசன்  ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மடத்துக்குளம்:

மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சி யின் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடி வேல் தலைமை வகித்தார். திமுக சார்பில் பேரூராட்சி செயலாளர் பாலமுரளி, முஸ் லிம் லீக் சார்பில் ஜாபர் அலி, விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேகர், பிள வேந்திரன், அரசு ஓய்வூதியர் சங்கத்தின் கரு ணாநிதி, மூத்த குடிமக்கள் பென்சனர் சங்கத் தின் புகழேந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின்  தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.எம்.வீரப் பன், பன்னீர்செல்வம், ராஜரத்தினம் ஆகி யோர் கலந்து கொண்டார்கள்.

உடுமலை ஒன்றியம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் கனகராஜ்  தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத் தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பஞ்சா யத்து உறுப்பினர் ஜனார்த்தனம், திமுக உடு மலை மத்திய ஒன்றியச் செயலாளர் செந்தில் குமார், அதிமுக உடுமலை தெற்கு ஒன்றியச்  செயலாளர் போகநாதன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சிவசங்கர், பள்ளபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசந்திரன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகதீசன், விவ சாய சங்கத்தின் பாலதண்டபாணி, ராஜகோ பால், அருண்பிரகாஷ், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சுந்தரம் உட்பட திராளா னோர் கலந்து கொண்டனர்.

குடிமங்கலம்:

குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட் டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர்  சசிகலா தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன், ஓம்பிரகாஷ், கலைவாணி, தங்கவேல், மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.