கோவை, மார்ச் 29- கோவையைச் சேர்ந்த இளை ஞர், விடா முயற்சியின் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏற உள்ளார். இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிக்காரம்பா ளையம் எனும் கிராமத்தை சேர்ந்த வர் மிதுன்குமார்(30). இவர் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். சமூக அக் கறை கொண்ட மிதுன்குமார், தனி யார் ஆடை நிறுவனத்தில் பணியாற் றியபடி, கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவிடும் கோவிட் தடுப்பூசி விழிப்புணர்வுக்காக, தனி நபராக சைக்கிள் பயணம் மேற்கொண் டார். நீலகிரி மாவட்டம், மசனகு டியில் துவங்கிய இவரது சைக்கிள் பயணம் பல்வேறு மாநிலங்கள் வழி யாக கடந்து இறுதியில் சீன எல் லையில் உள்ள இமாச்சலபிர தேசத்தில் நிறைவடைந்தது. மக்க ளிடம் கோவிட் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 87 நாட்க ளில் சுமார் மூவாயிரம் கிலோமீட் டர் மீட்டர் தூரத்தை சைக்கிளில் சென்ற மிதுன்குமார், இறுதியில் இமயமலை பகுதியின் அழகையும் பிரமாண்டத்தையும் வாழ்வில் முதல்முறையாக கண்டு வியந்து போனார். இதனால், மலையேறுவதில் ஆர்வம் ஏற்பட்டு அதற்கான பயிற்சி களை மேற்கொண்டார். எங்கும் பனி சூழ்ந்து குளிர் வாட்டியெ டுத்த போதிலும் பயிற்சிகளை தொடர்ந்ததோடு கரணம் தப்பி னால் மரணம் என்ற சூழலில், இம யமலையின் சிறு சிறு சிகரங்களை ஏறினார். பின்னர் சிக்கிம் அரசு நிறு வனத்தில் மலையேறும் படிப்பு மற்றும் மலையேறும் கள பயிற்சி களை ஏ கிரேட் சான்றுடன் வெற்றிக ரமாக முடித்துள்ளார். தற்போது இமயமலையில் உள்ள மேலும், பத்து சிகரகங் களை ஏறிய பின்னர் இறுதிகட்ட மாக உலகின் உயரமான 8845 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சாகர் மாதா சிகரத்தில் ஏற உள்ளார். இது வரை தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் கே.சிவக்குமார், ராஜசேகர், முத்தமிழ் செல்வி என 3 பேர் மட் டுமே இச்சாதனையை முடித் துள்ள நிலையில், மிதுன்குமார் நான்காவது நபராக நிச்சயம் இம யமலையின் உச்சியை தொட்டு சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந் துள்ளது. ஆனால், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவருக்கு பொருளாதார சிக்கலே இவரது சாதனைக்கு தடை யாக உள்ளது. மிதுன்குமாரின் தந்தை மூர்த்தி, பழைய கார் களை விற்கும் டீலராக உள்ள நிலையில், இவரது தாயார் கற்ப கம் அரசு பழங்குடியின பள்ளி ஆசிரியராக உள்ளார். இவரது தங்கை கற்பகம் கல்லூரி மாணவி. மிதுன்குமாரின் பெற்றோர் பெரு மளவு செலவு செய்து இதுவரை இவரது மலையேற்ற பயிற்சி கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளை செய்துள்ள நிலை யில், அடுத்தகட்டமாக செலவு செய்ய இயலாமல் தவிக்கின்றனர். இமயலைமலையின் சிக ரத்தை எட்ட துடிக்கும் மிதுன்குமா ரின் முயற்சிக்கு தமிழக அரசும், தன் னார்வலர்களும் உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.