districts

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் வெளிப்பட்ட வட்ட வடிவிலான செங்கல் கட்டுமானம்

புதுக்கோட்டை, ஆக.12- புதுக்கோட்டையை அடுத்த பொற் பனைக்கோட்டை அகழாய்வில் முக்கியத்  திருப்பமாக வட்ட வடிவிலான செங்கல்  கட்டுமானம் வெளிப்பட்டது. இதுகுறித்து  தமிழக அரசின் தொல்லியல் துறை வெளி யிட்டுள்ள விபரம்: 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற் பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பள வில் வாழ்விடம் இருந்ததைக் கண்டறிந்து  தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில்  மனிதவள மேலாண்மை மற்றும் தொல் லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  அகழாய்வுப் பணியினை மே 20 அன்று  தொடங்கிவைத்தார். அகழாய்வு தொடங்கிய சில நாட்க ளிலேயே ஏ1 எனும் குழியில் 19 செ.மீ ஆழத் திற்குள்ளாகவே ஒரு செங்கல்கட்டுமானம்  வெளிப்பட்டது. இதுவரை வட்டச்சில்லு கள்-70, கண்ணாடி மணிகள்-205, கண்ணாடி வளையல்கள்-7, பச்சைக்கல் மணிகள்-34,  அகேட் 4, படிகக்கல் மணிகள்-5, கார்னீ லியன்-6, தங்க மூக்குத்தி, தோடு-1, சுடுமண் விளக்கு-1, தக்களிகள்-3, எலும்பு முனை கருவி-1, காசு-1, கென்டி மூக்குகள்-3, மெரு கேற்றும் கற்கள்-4, பெரில் மணிகள்-1,  மனைக்கல்-1, எடைக்கல்-1, முக்கோ ணவடிவ செங்கற்கட்டி-1, இரும்பிலான பொருட்கள்-6, மஞ்சள் கல்மணி என 355 தொல்பொருட்களும், கீறல் குறியீடு 11-ம்,  ஒரு தமிழி எழுத்தும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான்  பானை ஓடுகள், கறுப்புநிற பானை ஓடுகள்,  கறுப்பு- சிவப்புநிற பானை ஓடுகள், கூரை  ஓடுகள், துளையிடப்பட்ட பானை ஓடுகள்-2,  மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரௌலட்  பானை வகை ஓடுகள்-3 என பல்வேறு வகை யான பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்த வட்டச்சில்லுகள், உள்நாட்டு பானை ஓடுகளில் உருவாக் கப்பட்டுள்ளன. ஆனால் பொற்பனைக் கோட்டை அகழாய்வில், அயல் நாட்டைச் சார்ந்த பானை ஓட்டில் குறிப்பாக மேற் கத்திய நாட்டைச் சேர்ந்த ரௌலட் வகை  பானை ஓட்டில் வட்டச்சில் உருவாக்கி பாண்டி, நொண்டி விளையாட பயன் படுத்தியிருப்பது தமிழ் சமூகத்தின் மேன்மை யை பறைசாற்றும் விதமாக அமைகிறது.  

மேலும் க்யுஏ1 எனும் அகழாய்வுக் குழியில் 3.8 செ.மீ ஆழத்தில் அரை வட்ட வடிவ செங்கல் கட்டிடம் ஒன்று வெளிப் பட்டது. வடமேற்கு பகுதியில் தொடங்கி தென்கிழக்கு பகுதி வரை நீண்டு, மூன்று அடுக்கினைக் கொண்டுள்ளது. இதன் விட்டம் 230 செ.மீ ஆகும். இவற்றுடன்  வடகிழக்குப் பகுதியில் 57 செ.மீ ஆழத்தில் வாய்க்கால் போன்று செங்கற்கள் கொண்டு  அமைக்கப்பட்ட நீர்வழித்தடம் ஒன்று கிடைத் துள்ளது. இதன் நீளம் 255 செ.மீ ஆகும்.  மேலும் க்யுடி1 எனும் குழியில் வாய்க் கால் போன்ற நீர்வழித்தடம் ஒன்று கண்ட றியப்பட்டது. க்யுஏ2 எனும் அகழாய்வுக் குழியில் 32 செ.மீ ஆழத்தில் வடகிழக்கு பகுதியில் இருந்து வடக்கு- தெற்காக இரண்டு  செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட் டுள்ளது. கிழக்கு பகுதியில் உள்ள கட்டு மானத்தின் நீளம் 200செ.மீ ஆகும். இரண்டு  செங்கல் கட்டுமானத்தின் இடைவெளி 80  செ.மீ உள்ளது. ஒரு கட்டிடத்தின் அகலம் 40  செ.மீ ஆகும். இவ்வாறு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.  வட்ட வடிவிலான செங்கல் கட்டுமானம்  வெளிப்பட்டுள்ளது பொற்பனைக் கோட்டை அகழாய்வில் முக்கியத் திருப்ப மாகக் கருதப்படுகிறது. இது 2,500 ஆண்டு களுக்கு முந்தைய வீடு அல்லது தானியக்  கிடங்கின் அடிக்கட்டுமானமாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர்.